NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

7,500 ரூபாய் ஊதியத்தில், தற்காலிக ஆசிரியர்கள் உடனடியாக நியமிக்கப்படுவர் - அமைச்சர் செங்கோட்டையன்

''போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம், மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.
கிருஷ்ணகிரியில், மாவட்ட பள்ளிக்கல்வித் துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம், நேற்று நடந்தது. இதில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங் கோட்டையன் பேசிய தாவது:
மலை கிராமங்களில் ஆசிரியர் பற்றாக்குறையை போக்க, 7,500 ரூபாய் ஊதியத்தில், தற்காலிக ஆசிரியர்கள் உடனடியாக நியமிக்கப்படுவர்.
மத்திய அரசின் எந்த ஒரு போட்டி தேர்வையும், தமிழக மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில், 412 பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.
சென்னையை தலைமை யிடமாக கொண்டு, வீடியோ கான்பரன்ஸ் மூலம், அரசு பள்ளிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில், சிறந்தகல்வியாளர்களை கொண்டு பயிற்சி வழங்கப்படும். இதை, இணைய தளம் வழியாக மாணவர்கள் கற்கலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின், தர்மபுரி மாவட்டத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் செங்கோட்டையன், ''அரசு பள்ளிகளில் மாணவர்கள் வருகையை, பெற்றோர் தெரிந்து கொள்ளும் வகையில், அடுத்த மாதம், 'ஸ்மார்ட் கார்டு' வழங்கப்பட உள்ளது,'' என்றார்.




28 Comments:

  1. Good Morning friends.. Oru sila karuthukala thelivu pana virumburaen..

    ReplyDelete
  2. தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

    மலை கிராமங்களில் ஆசிரியர் பற்றாக்குறையை போக்க தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

    செப்டம்பர் 09, 2017, 04:07 AM

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி, அசோக்குமார் எம்.பி., சி.வி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி வரவேற்று பேசினார். கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    கல்வியில் பின்தங்கிய மாவட்டமான கிருஷ்ணகிரி மாவட்டத்தை வளர்ச்சி மாவட்டமாக மாற்றிட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக மலை கிராமங்களில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையினை போக்கிட ரூ. 7,500 சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். நீட் தேர்விற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பது தமிழக அரசின் கொள்கை முடிவாகும். இதற்காக தமிழக அரசு முனைப்புடன செயல்படுகிறது. அதே வேளையில், மத்திய அரசு கொண்டு வரும் எந்த ஒரு போட்டித் தேர்வையும் எதிர்கொள்ளும் வகையில் சென்னையை தலைமையிடமாக கொண்டு 412 பயிற்சி மையங்கள் இந்த மாத இறுதிக்குள் அமைக்கப்படும்.

    தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் ரூ. 60 கோடி மதிப்பில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படும். 9, 10, 11, 12-ம் வகுப்புகள் ரூ.432 கோடி செலவில் கணினிமயமாக்கப்படும். மாணவர்களில் 10 சதவீதம் கற்றல் குறைபாடுகள் உள்ள மாணவர்கள் உள்ளனர். அவர்களுக்கு புதிய திட்டங்கள் மூலம் குறைபாடுகளை போக்கிட நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் முதுகலை ஆசிரியர்கள் 3,336 பேரும், கணினி ஆசிரியர்கள் 748 பேரும் பணியமர்த்தப்பட உள்ளனர்.

    இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில், முன்னாள் எம்.எல்.ஏ.முனிவெங்கட்டப்பன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபாலன், கல்வியாளர்கள் ராஜீவ்காந்தி மூர்த்தி, நந்தகுமார் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயகுமார், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட கல்வி அலுவலர் அகமதுபாஷா நன்றி கூறினார்.

    பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காலாண்டு தேர்வு நடக்க உள்ள நிலையிலும், கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ள நிலையிலும் ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இது போன்ற நிலைமை வருகிற 11-ந் தேதிக்கு மேல் இருக்காது. ஆசிரியர் தகுதி தேர்வை பொறுத்தவரை வெயிட்டேஜ் மதிப்பெண் குறித்து, இரு வேறு கருத்துகள் நிலவி வருகிறது. இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டு, தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    ReplyDelete
  3. Idhu hindhu paper news friends, so tharkaliga post pathi priya mam katenga, athu two days munadi mettur school la students strike pana posting ku tha avar apdi solirkaru..

    ReplyDelete
  4. Ipo mukkayamana vishayam weightage, atha pathi oru sila karuthukal solraen.

    1.Minister sonnapadi weightage la changes kondu varuvanga, athavathu munadi weightage calculation la TET marks ah 60% and other academics athavathu 12th, B.sc, B.ed ithuku elam 40% conversion kuduthanga andha conversion la tha changes varume thavira, mothama weightage ah cancel pana mudiyadhu,because TET marks basis la matum posting poda kudathu..

    2. Itha nenachu ithanala affect avomnu yarum panic aga venam, TET, academics la elam nala score vechruntha endha method vamthalum affect aga matinga..

    3. 2017 candidates oru silar after exam epdi ipdi solalamnu ketrukanga, avangaluku indha info.. Weightage apdingrathu selection method atha pathi exam eludhuravangaluku sola vendiya avasiyam ila..

    ReplyDelete
  5. Alla Baksh‎TNTET & PGTRB
    19 mins ·
    நண்பர்களே...
    இன்று வெயிட்டேஜ் முறை ரத்து என்று பல இணையங்களில் செய்தி பரப்பப்படுகிறது. அந்த செய்தி தவறானது. வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய முடியாது. ஏனெனில் அது நீதிமன்ற உத்தரவுப்படி கொண்டு வரப்பட்ட முறையாகும். மாற்றம் கொண்டு வரலாம். ஆனால் மீண்டும் நீதிமன்றங்களுக்கு பல வழக்குகள் போகும். எனவே மாற்றமும் செய்ய மாட்டார்கள்.
    மாண்புமிகு தமிழக கல்வி அமைச்சர் அவர்கள் தனது பேட்டியில் சொன்னதை கீழே கொடுத்துள்ளேன். அதை படியுங்கள்...
    * ஆசிரியர் தகுதி தேர்வில் வெயிட்டேஜ் முறை ரத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை அழைத்துப் பேசி சுமூக தீர்வு காணப்படும் - செங்கோட்டையன்..

    ReplyDelete
  6. Ipdi oru news Facebook la spread aguthu, minister sonatha thavira athula iruka elam mutrilum thavarana karuthu..

    ReplyDelete
  7. Mam weightage murai ipa palaya method ah illa mariducha onume purila mam

    ReplyDelete
    Replies
    1. Palaya method la changes kondu vara dha kuzhu amaikratha solirkaru minister.. video la weightage ah pathi romba theliva solirkar, so kandippa weightage la changes varum mam..

      Delete
    2. Ano mam paper 1 kum clarify pannunga mam. Epdi posting poda poranga.

      Delete
    3. Weightage la changes vantha paper1 and paper2 rendukum sethu tha panuvanga mam..

      Delete
  8. வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய வேண்டாம் ஆனால் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தகுதி பெற்ற ஆன்டை கொண்டு அவர்களுக்கு முன்னுரிமை வரிசை எண் வழங்கலாம் மேலும் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு மூலம் பதவி கொடுக்கனாம்

    ReplyDelete
    Replies
    1. Let them allocate any marks but more preference should be given to TET.. That alone only wil solve the issues..

      Delete
  9. Mam appa cv marupadium vaipangala?

    ReplyDelete
    Replies
    1. Absentees cv kandippa vepanga.. Weightage changes porutha vara namala online la update pana sola kuda chances iruku..

      Delete
  10. Antha Facebook seithi thavaranathu, weightage la changes kondu vara option irukathu unma, because weightage ah suggest panathu Hon.Judge Nagamuthu ayya, avar judgement copy la 2013 postings ah fill pana emergency ah intha method suggest panren, intha method or any other scientific method ah government and trb follow panikalamanu theliva solirkaru. Judgement copy la 82vathu pakathula indha line iruju, so oru vela case potalum indha oru line pothum andha case elam quash pana.. So weightage la changes varum. Yaravathu intha mathiri amga inga solratha elam pakathinga..

    ReplyDelete
    Replies
    1. Mam weightage cancel pannita 7 years kulla elarukum posting kedaikuma mam.

      Delete
    2. 7years vara elam pogathu mam, vacancies irundha kattayam fill panuvanga..

      Delete
  11. Kandippa inda yr posting poda maatanga pola...nxt yr xam avdu vaipangla....��

    ReplyDelete
  12. Replies
    1. Intha year lae poduvagala mam

      Delete
    2. Kandippa chances iruku mam.. Think positive..

      Delete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive