NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழகத்தில் பல இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் கைது ​


அரக்கோணம், திருப்பூர், காட்பாடி உள்ளிட்ட இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
7வது ஊதியக்குழு பரிந்துரைப்படி விரைவாக ஊதிய உயர்வு வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர். ஜாக்டோ - ஜியோ ஸ்டிரைக்கால் பல இடங்களில் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடின. பள்ளிகளுக்குச் செல்லாமல் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் 11 இடங்களில் அரசு ஊழியர், ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை பல்லாவரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டு வந்த ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 500 பேர் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்செங்கோடு, தேனியில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தருமபுரி மாவட்டம் அரூரில் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive