NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசு பள்ளியும், மாணவர் சேர்க்கையும்…

அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க வழிவகைகளை கல்வித்துறை செய்துகொண்டுதான் இருக்கிறது. ஆன போதிலும், தமிழகத்தில் உள்ள 37,141 (2014-15) அரசு பள்ளிகளில் 1 – 5 ஆம் வகுப்பில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 24,73,356 பேர். ஆனால் 57,192 தனியார் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 32,73,884 பேர். இதேபோன்று 6 முதல் 8 வகுப்பு மாணவர்களும் அரசு பள்ளியை விட தனியார் பள்ளிகளில் தான் மாணவர் சேர்க்கை அதிகளவு உள்ளது.

இதில் மிகவும் வருத்தமான செய்தி கடந்த 2014-ஆம் ஆண்டு வரை நாடு முழுவதிலும் சுமார் 80,647 பள்ளிகள் இதர பள்ளிகளோடு இணைக்கப்பட்டு (அ) மூடப்பட்டும் உள்ளன.


ஆசிரியர்-மாணவர் விகிதம் 1:40 என இருந்து வந்த நிலையில் தற்போது 1:24 ஆக மாறியுள்ளது. இதற்கான காரணம் மாணவர்களின் எண்ணிக்கையின் குறைவுதான். மேலும், 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை ஒரு பள்ளிக்கு அதிக பட்சமாக இரண்டு ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். தலைமையாசிரியர் மற்றும் ஒரு ஆசிரியர் மட்டும். இவர் அலுவலக பணியின் காரணமாக வெளியில் சென்றால் ஆசிரியர் ஒருவர் மட்டுமே மொத்த மாணவர்களையும் பார்க்க வேண்டிய சூழ்நிலை உண்டாகிறது. இதனால் ஏற்படும் விளைவு என்ன?? அரசுக்கு இதனால் ஏற்படும் நஷ்டம் அதிகம் என்றே தரவுகள் கூறுகின்றன.

மேலும், இதைத் தவிர்த்து பல காரணங்களை முன் வைக்கலாம். தரமான கல்வி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, சுகாதாரமான சுற்றுச்சூழல், கட்டிட வசதி, நூலக வசதி உள்ளிட்ட பல காரணங்களால் மாணவர்களின் எண்ணிக்கை அரசு பள்ளிகளில் குறைந்து காணப்படுகிறது. அவற்றைப் பற்றி சற்று விரிவாக காண்போம்,

பெற்றோர் ஆசிரியர் உறவு:

அரசு பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவதற்கான காரணங்களில் முக்கியமான ஒன்று பெற்றோர்-ஆசிரியர் உறவு:

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எத்தனை பெற்றோர் தங்களது பிள்ளைகளின் நிலையை அறிய முன் வருகிறார்கள்..?? மாணவர்களின் நிலையை கட்டாயம் எடுத்துக் கூறுவது ஆசிரியர் கடைமை. தனியார் பள்ளிகளில் குறிப்பிட்ட கால இடைவெளியில் மாணவர்களின் நிலையை அறிய முற்படுகின்றனர். காரணம் பணம். அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவசமாக கல்வியை வழங்குவது காரணமானாலும் பெற்றோர்களை வரவழைக்க வேண்டும். மாணவனின் நிறைகுறைகளை அறியச் செய்தல், பெற்றோரின் மனதில் ஆசிரியர், நிர்வாகம், பள்ளி பற்றிய நல்ல சிந்தனை மேலோங்கும்.

வரமுடியாத சூழ்நிலை என்றால் அவர்களுக்கு தகுந்த நேரத்தை ஆசிரியர் உருவாக்கித் தரவேண்டும். ஏனெனில், நல்ல மாணவனை உருவாக்கும் பொறுப்பு ஆசிரியரிடமே உண்டு. இதன் மூலமே பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.மேலும், ஆசிரியர்-மாணவர் உறவும் நன்றாக வலுப்பெற்று அமைய வேண்டும். ஆகவே, அரசு பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆசிரியர்-பெற்றோர், ஆசிரியர்-மாணவர் நல்லுறவு முக்கியமானதாக கருதப்படுகிறது.

அடுத்ததாக முன்வைக்கும் கருத்து தலைமை. “தலைமை” சரியில்லாத போது பள்ளியின் தரத்தை முன்னேற்றுவது கடினம். தலைமையாசிரியர் அவருக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை கவனம் செலுத்தி முடிப்பார். ஆனால், ஆசிரியர், அவரது செயல்பாடுகளை நன்கு கவனம் செலுத்தி பார்க்க வேண்டும்.

ஆசிரியரின் பணிகளையும், மாணவர்களை ஆசிரியர் கற்றல்-கற்பித்தல் அடைவுகளை சோதிக்கும் முறையை கட்டாயமாக தலைமையாசிரியர் கவனிக்க வேண்டும்.

சில பள்ளியில்  அல்லது தனியார் பள்ளியில் தலைமையில் இருக்கும் நபரின் கற்பிக்கும் ஆசிரியரின் பண்புகளையும், கற்பிக்கும் முறைகளையும் ஆராய்ந்து அது சரியில்லாத பட்சத்தில் பணியை விட்டு நீக்கப்படுகின்றார். எனவே தான் மிகுந்த கவனத்துடன் ஆசிரியர்கள் கண்காணிக்கப்படுகின்றனர். மேலும் குறிப்பிட்ட மாணவர்களின் நிலையை அறிந்து கற்பித்தலை மீண்டும் மீண்டும் செய்கின்றனர். விளைவு மாணவர்களின் கற்றல் வீதம் உயர்ந்து, மாணவகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.

ஆனால், அரசு பள்ளியில் ஆசிரியரின் பணிகளை ஆராய்ந்து பார்க்கலாம் தவிர பணியை விட்டு நீக்கம் செய்யவோ முடியாத காரியம்.ஆசிரியர்கள் அனைவரும் முன்வந்து  அக்கறையுடன் செயல்படவேண்டும். குறிப்பு:”30மாணவர்கள் அரசுப்பள்ளியில் சேர்ந்தால் ஓர் ஆசிரியர் குடும்பமே வாழ்வு பெறும்”.மறவாதீர்

 ஆக பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும், குறைக்கவுமான     மந்திரம், தந்திரம் எல்லாம் ஆசிரியரிடமே உண்டு.




2 Comments:

  1. உண்மை. மேலும் கணினி அறிவியலை ஓர் பாடமாக கொண்டு வகுப்பறைகளை நவீன மயமாக்கினால் மாணவர் எண்ணிக்கை சற்று உயரும் என்பது என் தாழ்மையான கருத்து.

    ReplyDelete
  2. உரிய பாட ஆசிரியர் நியமனம் அவசியம் தேவை.மொழிப் பாட ஆசிரியர்கள் கணிதம் அறிவியல் நடத்துவதும் மிக முக்கியமான காரணம். தனியார் பள்ளிகளில் இந்த நிலை இல்லை.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive