NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மாணவர்களை கட்டுப்படுத்த வழியின்றி தவிக்கும் ஆசிரியர்கள்: தமிழக அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் சரியும் அபாயம்

அரசு பள்ளி மாணவர்களை கட்டுப்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளதால், ஆசிரியர்கள் கடும் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதனால், நடப்பு கல்வியாண்டில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் வெகுவாக சரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக, அரசு பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களின் மீதான கட்டுப்பாடுகள், நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. மாணவர்களை அடிக்கவோ, துன்புறுத்தவோ கூடாது, பொதுத்தேர்வில், 100 சதவிகித தேர்ச்சி விகிதம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கெடுபிடிகளால், கடும் தவிப்புக்கு ஆளாகினர். சமீபத்தில், பெற்றோரை அழைத்து வர ஆசிரியர்கள் வற்புறுத்தியதால், நான்கு மாணவியர், கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டனர். இதில், பல ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம், அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவர்களிடையே கடும் பாதிப்பை உருவாக்கியுள்ளது. இதனால், மாணவர்களை கட்டுப்படுத்த முடியாமல், தவிக்கும் சூழல் உருவாகியுள்ளது. 

இதுகுறித்து அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது: அரசு பள்ளிகளுக்கு வரும் குழந்தைகளில், பெரும்பாலானோரின் பெற்றோர், கூலி வேலை செய்பவர்களாக, உரிய விழிப்புணர்வு இல்லாதவர்களாக உள்ளனர். இதனால், அவர்களை மாணவர்கள் எளிதில் ஏமாற்றி விடுகின்றனர். ஏற்கனவே பள்ளியில் மாணவர்களை அடிக்கக்கூடாது என்ற உத்தரவால், ஆசிரியர்களுக்கு, பல மாணவர்கள் மரியாதை தருவதில்லை. அதற்கும் மேலாக, மிரட்டல் விடுக்கின்றனர். அவர்களை கட்டுப்படுத்த, ஆசிரியர்களுக்கு இருந்த ஒரே ஆயுதம்; பெற்றோரிடம் தெரிவிப்பது மட்டும் தான். தற்போது ஏற்பட்ட சூழலில், 'பெற்றோரிடம் தெரிவித்தால், நடப்பதே வேறு' என, பகிரங்கமாகவே மிரட்டல் விடுக்கின்றனர். பள்ளிக்கு வருவதாக கூறிவிட்டு, நீர்நிலை, குட்டை, சினிமா தியேட்டர் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிகின்றனர். மாணவன் தேர்ச்சி பெறாவிட்டால் கூட, உயர் அதிகாரிகளுக்கு பதில் கூறிக்கொள்ளலாம்; ஆனால், மாணவர்களை கட்டுப்படுத்தினால், ஒழுங்கு நடவடிக்கையும், சிறையும் தான் கிடைக்கும் என்ற பயம், ஆசிரியர்களிடையே உருவாகியுள்ளது. இதனால், பலரும் மாணவர்களை கண்டு கொள்வதேயில்லை. பல தலைமை ஆசிரியர்களே, 'மாணவர்களை கண்டிக்க வேண்டாம்' என, ஆசிரியர்களிடம் அறிவுறுத்துகின்றனர். இதனால், பள்ளியில் இடைநிற்கும் மாணவர்களின் எண்ணிக்கையும், தேர்ச்சி பெறாதோர் எண்ணிக்கையும், கணிசமாக அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது. ஒழுக்கமும் கல்வியும் போதிக்க வேண்டிய, ஆசிரியர்களின் கைகள் கட்டப்பட்டுள்ளன. இதனால், எதிர்கால சமூகத்தில் பாதிப்புகள் உருவாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது சிறப்பு நிருபர் -
   (தினமலர்)




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive