NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மணல் தட்டுப்பாட்டை சமாளிக்க எம் - சாண்ட் விற்க லைசென்ஸ்

குவாரிகளில் முறைகேடாக மணல் அள்ளப்படுவதால்,
நீரோட்டம் பாதிக்கப்படுவதாக 
புகார்கள் எழுந்தது.இது தொடர்பான வழக்கில், குவாரிகளை மூடுவதற்கு, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதனால், கட்டுமான பணிகளுக்கு ஆற்று மணலை பயன்படுத்துவதற்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது. ஆற்று மணலுக்கு மாற்றாக, எம் - சாண்ட் பயன்படுத்த வேண்டும் என, அரசு கூறி வருகிறது.எம் - சாண்ட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பொதுப்பணித்துறை சார்பில், குறும்படம் வெளியிடப்பட்டு உள்ளது. ஆனால், பல மாவட்டங்களில், தரமற்ற, எம் - சாண்ட் விற்கப்படுவதால், அரசு மற்றும் தனியார் கட்டுமான நிறுவனங்கள், அவற்றை பயன்படுத்த தயங்கி வருகின்றன.எனவே, தரமான, எம் - சாண்ட் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு, பொதுப்பணித்துறை வாயிலாக, லைசென்ஸ் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை, திருவள்ளூர், வேலுார் உள்ளிட்ட மாவட்டங்களில், 10 நிறுவனங்களுக்கு லைசென்ஸ் தரப்பட்டுள்ளது. இதேபோல, மேலும் பல நிறுவனங்களும், பொதுப்பணித்துறையிடம் லைசென்ஸ் பெற
விண்ணப்பித்துள்ளன.
அது என்ன 'எம் - சாண்ட்' : குவாரிகளில் வெட்டி எடுக்கப்படும் கருங்கல்லை, ஆலைகளில் உடைத்து தயாரிக்கப்படுவதுதான், 'எம் - சாண்ட்' என்ற செயற்கை மணல். இதை தயாரிப்பதற்கான விதிமுறைகளை பொதுப்பணித்துறை வகுத்துள்ளது. இதற்கு முன், கருங்கல் துகள்களை நீரில் அலசி, வடிகட்டி, எம் - சாண்ட் தயாரிக்கும் தொழில்நுட்பம், நடைமுறையில் இருந்தது.
தற்போது, தண்ணீரை பயன்படுத்தாமலேயே, கருங்கல் துகள்களில் உள்ள துாசியை அகற்ற, அதிநவீன இயந்திரங்கள் பயன்பாட்டிற்கு வந்துஉள்ளன. எனவே, 'எம் - சாண்ட்' மணலை, ஆற்று மணலுக்கு மாற்றாக பயன்படுத்த வேண்டிய நிலை உருவாகி உள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive