NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசு பள்ளிகளில் 24 லட்சம் மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகம்

அரையாண்டு விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதல் நாளன்று 3-வது பருவத்துக்கான இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன.

பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் டிசம்பர் 8-ம் தொடங்கி 23-ம் தேதி முடிவடைந்தது. இதையடுத்து, அரையாண்டு விடுமுறையும் அதோடு கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையும் ஜனவரி 1-ம் தேதி வரை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 9 நாள் விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. ஒன்று முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, 3-வது பருவத்துக்கான (ஜனவரி முதல் மார்ச் வரை) புத்தகங்கள், பள்ளி திறந்த முதல் நாள் அன்றே வழங்கப்பட்டன.
இதுகுறித்து பள்ளிக்கல்வி இணை இயக்குநர் சுகன்யா கூறும்போது, “அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான 3-வது பருவ பாடப்புத்தகங்கள் முன்கூட்டியே மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு அவர்கள் மூலமாக பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. மாணவர்களின் வசதியை கருத்தில்கொண்டு முதல் நாளன்று அவர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டன. தமிழகம் முழுவதும் 24 லட்சத்து 39 ஆயிரத்து 372 மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு 56 லட்சத்து 52 ஆயிரத்து 742 பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன” என்றார்.
ஜன. 18 முதல் திருப்புதல் தேர்வு
அரையாண்டுத் தேர்வு முடிவடைந்த நிலையில் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய மூன்று வகுப்புகளுக்கும் முதலாவது திருப்புதல் தேர்வு ஜனவரி 18-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி முடிவடைகிறது. இதற்கான காலஅட்டவணையை பள்ளிக்கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் வெளியிட்டுள்ளார்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive