NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

41-வது தென்னிந்திய புத்தகக் கண்காட்சி: ஜன.10 முதல் 22 வரை சென்னையில் நடக்கிறது

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் ஆண்டுதோறும் புத்தகக் கண்காட்சி நடந்து வருகிறது. 40 ஆண்டுகளாக நடந்த கண்காட்சி 41-வது ஆண்டாக வரும் 10-ம் தேதி துவங்க உள்ளது.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம்(பபாசி) சென்னை புத்தகக் கண்காட்சியை 40 ஆண்டுகளாக நடத்தி வருகிறது. சென்னை தவிர மதுரை, திருச்சி போன்ற நகரங்களிலும் பபாசி புத்தகக் கண்காட்சிகளை நடத்தி வருகிறது. ஆண்டு தோறும் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் 700 அரங்குகள் வரை அமைக்கப்படுகிறது.
இதில் 450 பதிப்பாளர்கள் வரை ஆண்டுதோறும் பங்கேற்கின்றனர். பபாசி எனப்படும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் ஆண்டுதோறும் நடத்தும் புத்தக திருவிழா 10 நாட்கள் நடக்கும் வாசகர்களுக்கு இந்த 10 தினங்கள் கொண்டாட்டமாக இருக்கும்.
தமிழ் மற்றும் ஆங்கிலப் புத்தகங்களை வெளியிடும் பதிப்பாளர்கள் பங்கேற்கும் இந்த புத்தகக் கண்காட்சியில் 350 தமிழ் புத்தக பதிப்பகங்களும், 153 ஆங்கிலப் புத்தக பதிப்பகத்தினரும் தங்கள் புத்தகங்களை அரங்குகளில் விற்பனைக்கு வைப்பார்கள்.
கடந்த ஆண்டு கண்காட்சி நுழைவுக் கட்டணமாக ரூ.10 நிர்ணயிக்கப்பட்டது. இதுதவிர, தினம் வரும் வாசகர்களின் வசதிக்காக 50 மற்றும் 100 ரூபாய்க்கு சீசன் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன. இந்த ஆண்டு நுழைவுக்கட்டணம் அரங்குகள் மற்ற விபரங்கள் பற்றி தெரிவிப்பதற்கு வரும் ஜன.5 அன்று செய்தியாளர் சந்திப்பு நடைபெற உள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி 10-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மைதானத்தில் (பச்சையப்பா கல்லூரி எதிரில்) புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive