NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளிகளில் மனநல ஆலோசகர் நியமிக்க ராமதாஸ் கோரிக்கை

மாணவர்கள் தற்கொலையை தடுக்க, பள்ளிகளில் மனநல ஆலோசகர்களை நியமிக்க வேண்டும்' என, தமிழக அரசுக்கு, பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை:


மாணவர் தற்கொலையில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது. 2017ல், 981 மாணவர்கள், தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.ஒரு நாளைக்கு சராசரியாக, 2.68 மாணவர்கள், தற்கொலை செய்கின்றனர். தமிழகத்திற்கு அடுத்தபடியாக, கர்நாடகாவில் சராசரியாக, ஒரு நாளைக்கு, 1.47 பேர் வீதம், 560 மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தெரிய வந்துள்ளது. மிகக் குறைவாக, ஆந்திராவில், 295 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.
மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட, சமூகக் காரணங்கள், உளவியல் காரணங்கள், மரபு வழி பிரச்னைகள் என, பல காரணங்கள் இருந்தாலும், முதன்மையானது கல்வி சார்ந்த பிரச்னைகள் தான். ஆந்திரா, தெலுங்கானா, கேரளா மாநிலங்களில், மிக எளிமையான, சிந்தனையைத் துாண்டும் கல்வி முறை இருப்பதால், அங்கு, மாணவர்கள் தற்கொலை எண்ணிக்கை குறைவு.

தமிழகத்தில், கல்வி என்பது சுகமான அனுபவமாக இருப்பதற்கு மாறாக, திணிக்கப்படும் ஒன்றாகவும், இயந்திரத்தனமான ஒன்றாகவும் மாறி விட்டது தான், மாணவர்கள் தற்கொலை அதிகரிப்புக்கு காரணம். தினமும், ஒரு பாடவேளை, விளையாட்டுக்கும், வாரத்திற்கு இரு பாடவேளை, நீதி போதனைக்கும் ஒதுக்கப்பட வேண்டும். 

இந்த பாடவேளைகளை, மற்ற பாடங்களுக்காக பறித்துக் கொள்ளப்படுவதுடன், பள்ளி நேரத்திற்கு பின்னும் படிப்பு திணிக்கப்படுகிறது.மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை, சரியான நேரத்தில் கண்டுபிடித்து விட்டால், விபரீதமான விளைவுகளை தடுக்க முடியும். எனவே, வாய்ப்பிருந்தால் அனைத்து பள்ளிகளிலும், மனநல ஆலோசகர்கள் நியமிக்கப்பட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive