தமிழக அரசின் இந்துசமய அறநிலைய ஆட்சித் துறையில் செயல் அலுவலர் (கிரேடு-1) பதவியில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு சனி,
ஞாயிறு ஆகிய 2 நாட்கள் சென்னையில் நடைபெற்றது.
தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டவர்களில் 33 சதவீதம் பேர் மட்டுமே தேர்வில் கலந்துகொண்டதாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.திருவல்லிக்கேணி என்கேடி மேல்நிலைப் பள்ளி,பெரம்பூர், கிண்டி மாநகராட்சி பள்ளிகள் ஆகிய 3 மையங்களில் தேர்வெழுத 790 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். முதல் நாள் காலைபொது அறிவு தாள் தேர்வும், பிற்பகல் இந்துசமய அறநிலைத் துறை சட்டம் தொடர்பான தேர்வும் நடந்தது. இரண்டாவது நாளான நேற்று காலை சட்டத் தேர்வு நடைபெற்றது.
தேர்வு நேரம் நீட்டிப்பு
இத்தேர்வில் விடைத்தாளில் (ஓஎம்ஆர் ஷீட்) வரிசை எண்களும் விடையை அடையாளமிடும் இடமும்ஒரே வரிசையில் இல்லாமல் சற்று முன்னும் பின்னும் இருந்ததால் தேர்வர்கள் விடையளிக்க சற்று குழம்பினர். இதைத்தொடர்ந்து, தேர்வர்களுக்கு வேறு விடைத்தாள்கள் வழங்கப்பட்டு தேர்வு தொடர்ந்தது. இதனால், ஏற்பட்ட தாமதத்தை சமாளிக்கும் பொருட்டு தேர்வு நேரம் அரை மணிநேரம் நீட்டிக்கப்பட்டது.அதைத்தொடர்ந்து காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணிக்கு முடிவடைய வேண்டிய தேர்வு 1.30 மணிக்கு முடிவடைந்தது. செயல் அலுவலர் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டவர்களில் 33 சதவீதம் பேர் மட்டுமே தேர்வில் கலந்துகொண்டதாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...