NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நாட்டில் 1,496 ஐஏ​எஸ் அதி​கா​ரி​கள் பற்​றாக்​குறை!!

நாட்​டில் 1,496 ஐஏ​எஸ் அதி​கா​ரி​கள் பற்​றாக்​கு​றை​யாக இருப்​ப​தாக மத்​திய அரசு தெரி​வித்​துள்​ளது. அதற்​குத் தீர்வு காணும் வித​மாக கூடு​தல் எண்​ணிக்​கை​யி​லான அதி​கா​ரி​களை தகு​தித் தேர்​வு​கள் மூலம் நிய​மிக்​கும் நட​வ​டிக்​கை​களை மேற்​கொண்டு வரு​வ​தா​க​வும் அரசு கூறி​யுள்​ளது.
கடந்த சில ஆண்​டு​க​ளாக மத்​திய, மாநில அர​சு​க​ளின் பல்​வேறு துறை​க​ளில் காலி​யாக இருக்​கும் முக்​கி​யப் பொறுப்​பு​க​ளுக்கு ஐஏ​எஸ் அதி​கா​ரி​கள் நிய​மிக்​கப்​ப​டா​மல் உள்​ள​னர். இதன் கார​ண​மாக உரிய முடி​வு​கள் எடுக்​கப்​ப​டா​மல் சில திட்டங்​கள் கால​தா​ம​தம் ஏற்​ப​டு​வ​தாக அவ்​வப்​போது செய்​தி​கள் வெளி​யா​கின்​றன. போதிய அதி​கா​ரி​கள் இல்​லா​ததே காலிப் பணி​யி​டங்​கள் நிரப்​பப்​ப​டா​மல் இருப்​ப​தற்​குக் கார​ணம் எனக் கூறப்​ப​டு​கி​றது.
இந்​நி​லை​யில், இந்த விவ​கா​ரம் தொடர்​பாக மாநி​லங்​க​ள​வை​யில் வியா​ழக்​கி​ழமை கேள்வி எழுப்​பப்​பட்​டது. அதற்கு மத்​திய பணி​யா​ளர் நலத் துறை இணை​ய​மைச்​சர் ஜிதேந்​திர சிங் எழுத்​துப்​பூர்​வ​மாக அளித்த பதில்:
நாடு முழு​வ​தும் 6,500 ஐஏ​எஸ் அதி​கா​ரி​கள் ஆட்சிப் பணி​யில் இருக்​க​லாம் என்ற வரம்பு நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. தற்​போ​தைய நில​வ​ரப்​படி 5,004 அதி​கா​ரி​கள் மட்டுமே இருக்​கின்​ற​னர். 1,496 ஐஏ​எஸ் அதி​கா​ரி​கள் பற்​றாக்​கு​றை​யாக உள்​ள​னர். காலி​யாக உள்ள இடங்​களை நிரப்​பு​வ​தற்​குத் தேவை​யான நட​வ​டிக்​கை​கள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன.
ஆண்​டொன்​றுக்கு 180 ஐஏ​எஸ் அதி​கா​ரி​களை மத்​திய குடி​மைப் பணி​கள் தேர்​வு​கள் மூலம் தேர்ந்​தெ​டுக்​கும் நடை​முறை 2012-ஆம் ஆண்டு கொண்டு வரப்​பட்​டது. அதன் அடிப்​ப​டை​யில் தற்​போது வரை அதி​கா​ரி​கள் நிய​மிக்​கப்​பட்டு வரு​கின்​ற​னர் என்று அந்த பதி​லில் தெரி​விக்​கப்​பட்​டி​ருந்​தது.
2,490 சொத்​து​க​ளுக்கு முடக்​கம்: ​இ​த​னி​டையே, மாநி​லங்​க​ள​வை​யில் எழுப்​பப்​பட்ட மற்​றொரு கேள்​விக்​குப் பதி​ல​ளித்த மத்​திய வீட்டு​வ​ச​தித் துறை அமைச்​சர் ஹர்​தீப் சிங் பூரி, ''தில்​லி​யில் விதி​க​ளுக்​குப் புறம்​பா​கக் கட்டப்​பட்ட 2,490 சொத்​து​கள் கடந்த 4 மாதங்​க​ளில் முடக்​கப்​பட்​டுள்​ளன'' என்​றார்.
வடக்கு, கிழக்கு, தெற்கு மற்​றும் புது தில்லி பெரு நகர மாந​க​ராட்​சி​கள் சார்​பில் அந்த நட​வ​டிக்​கை​கள் மேற்​கொள்​ளப்​பட்​ட​தா​க​வும் அவர் விளக்​க​ம​ளித்​துள்​ளார்.
​கங்கை திட்டத்​துக்கு ரூ.3,633 கோ​டி:​ மக்​க​ள​வை​யி​லும் கேள்வி நேரத்​தின்​போது பல்​வேறு விவ​கா​ரங்​கள் தொடர்​பாக தக​வல்​கள் கோரப்​பட்​டன. அவற்​றில் கங்கை நதி​யின் வழித்​த​டத்​தில் உள்ள படித்​து​றை​க​ளைத் தூய்​மைப்​ப​டுத்​து​வது குறித்து ஒரு கேள்வி எழுப்​பப்​பட்​டது. அதற்கு மத்​திய நீர்​வ​ளத் துறை இணை​ய​மைச்​சர் சத்​ய​பால் சிங் எழுத்​துப்​பூர்​வ​மாக அளித்த பதில்:
கங்கை நதியை ஒட்டி​யுள்ள 361 படித்​து​றை​களை அழ​கு​ப​டுத்​த​வும், தூய்​மைப்​ப​டுத்​த​வும் கடந்த 3 ஆண்​டு​க​ளில் ரூ.3,633 கோடி நிதி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது. அவற்​றில் 228 படித்​து​றை​க​ளில் பணி​கள் முழு​மை​யாக நிறை​வ​டைந்​துள்​ளன என்று அந்த பதி​லில் தெரி​விக்​கப்​பட்​டி​ருந்​தது




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive