NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஊழியர்களுக்கு அரசு அறிவித்த 2.44 காரணி ஊதிய உயர்வு செல்லும்: ஐகோர்ட்டில் மத்தியஸ்தர் அறிக்கை தாக்கல்

போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக நியமிக்கப்பட்ட மத்தியஸ்தர் பத்மநாபன் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். 
அதில் போக்குவரத்து ஊழியர்களுக்கு அரசு அறிவித்த 2.44 காரணி ஊதிய உயர்வு செல்லும் என்று குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் தொழிலாளர்களின் 2.57 காரணி ஊதிய உயர்வு கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. மத்தியஸ்தர் அறிக்கை தாக்கல் செய்ததையடுத்து இந்த வழக்கின் விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக போக்குவரத்து ஊழியர்கள் தரப்பில் 2.57 மடங்கு ஊதிய உயர்வு கேட்ட நிலையில், 2.44 மட்டுமே தர முடியும் என அரசு உறுதியாக அறிவித்தது. இதைக் கண்டித்து, போக்குவரத்து ஊழியர்கள் கடந்த ஜனவரி 4 முதல் 11 வரை 8 நாள் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, இந்த விவகாரத்தில் தலையிட்டு பேசி சுமுக முடிவெடுக்க ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபனை மத்தியஸ்தராக சென்னை உயர்நீதிமன்றம் நியமித்தது. இந்நிலையில் போக்குவரத்து ஊழியர்களுக்கு அரசு அறிவித்த 2.44 காரணி ஊதிய உயர்வு செல்லும் என்று மத்தியஸ்தர் பத்மநாபன் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive