NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வயிற்றில் வாய்வு சேருவதை தவிர்ப்போமா?

செரிமானம் ஆகாமல் வயிற்றில் சேரும் வாய்வுதான் தொப்பைக்கு முதன்மையான காரணம்.


  இன்று கணினி முன்பாக நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது, துரித உணவுகளை எடுத்துக்கொள்வது, உடல் உழைப்பு என்பதே இல்லாமல் இருப்பது போன்றவற்றால் வயிற்றில் வாய்வு சேருவது அதிகமாகிக்கொண்டே செல்கிறது. இதை போக்க சில எளிய டிப்ஸ்...

வயிற்றில் வாய்வு சேர என்ன காரணம்?

சாப்பிடும் உணவுகள் செரிமானம் ஆகாத போது அதிலிருக்கும் பாக்டீரியாக்களால் வயிற்றில் வாய்வு சேரும். அதேபோல அதிக அளவிலான ஃபைபர் உணவுகள், ஜீரணிக்க தாமதமாகும் உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் அதுவும் வயிற்றில் வாய்வு சேரும். வாய்வு நிறைந்த சாஃப்ட் டிரிங்க்ஸ் அடிக்கடி குடிப்பதும் இதற்கு முக்கிய காரணம்.

என்ன செய்யலாம்?

வயிற்றில் வாய்வு சேர்ந்து வயிறு உப்பலாக இருந்தால் முதலில் தரையில் படுத்துக்கொள்ளுங்கள். தலையை உயர்த்தி உங்களின் உடல் கீழ் நோக்கி இருக்குமாறு தரையில் படுங்கள். கட்டில், சோஃபா போன்றவற்றில் படுப்பதைத் தவிர்த்திடுங்கள்.

நீராகாரம் எடுத்துக்கொள்ளுங்கள்

உணவு வகைகளைக் குறைத்துவிட்டு நீராகாரத்தை அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள், சூப், கஞ்சி, ஜூஸ் போன்று எளிதில் ஜீரணம் ஆக கூடியவற்றை குடியுங்கள்.

தாளித்தல்

கடுகு காஸ்ட்ரிக் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் வல்லது. அதனால்தான் எல்லா உணவுகளிலும் தாளிக்கப் பயன்படுத்துகிறார்கள். கடுகு சூப் செய்து குடிக்கலாம்.

சூடான பானம்

சூடான பானங்களைக் குடியுங்கள். டீ, காபி, க்ரீன் டீ போன்றவை குடிக்கலாம். இஞ்சி சாறு, இஞ்சி தேநீர் போன்றவற்றையும் குடிக்கலாம்.

பெருங்காயம்

நீரில் சிறிது பெருங்காயத்தை கலந்து குடிக்கலாம். ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறை இப்படி குடிக்கலாம். அதற்கு மேல் வேண்டாம். அதிகமாக குடித்தால் இது வயிற்றுப் போக்கை ஏற்படுத்திடும்.

லவங்கம் பட்டை

லவங்கம் பட்டையைத் தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம் அல்லது லவங்கம் பட்டையை வறுத்துப் பொடி செய்து கொள்ளுங்கள். அதைப் பாலில் கலந்துகூட குடிக்கலாம். இது உடனடி நிவாரணத்துக்குக் கை கொடுக்கும்.

பெருஞ்சீரகம்

பெருஞ்சீரகம் இதற்கு உடனடி தீர்வு வழங்கும். தண்ணீரைச் சூடாக்கும்போது அதில் ஒரு சிட்டிகை பெருஞ்சீரகத்தைப் போட்டு நன்றாக கொதிக்க வைத்திடுங்கள். இதை அப்படியே குடிக்கலாம் அல்லது இதனோடு சிறிது புதினா இலையையும் சேர்த்து கொதிக்க வைத்து குடிக்கலாம். நல்ல பலன் கிடைக்கும்.

பூண்டு

உணவு ஜீரணத்துக்கும், வாய்வு பிரச்சினைக்கும் பூண்டு பெரும் பங்காற்றும். இரண்டு மூன்று பூண்டுகளை நெருப்பில் சுட்டு அப்படியே சாப்பிடலாம். அல்லது தண்ணீரில் பூண்டு, சீரகம், மிளகு சேர்த்து நன்றாகக் கொதிக்க வைத்து குடியுங்கள்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive