NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மீள முடியாத நோய் தாக்கியவர்களை கருணைக் கொலை செய்ய அனுமதிக்கலாம் : உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

கருணைக் கொலை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில் மீள முடியாத நோயால் தீராத வேதனையில் வாடுபவர்களை கருணைக்கொலை செய்ய அனுமதிக்கலாம் என கூறியுள்ளது.
மேலும் செயலற்ற நிலையில் இருப்பவர்களையும் கருணைக் கொலை செய்யலாம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. மனிதர்கள் கண்ணியத்துடன் இறப்பதற்கு உரிமை உண்டு, எனவேஇந்த உரிமையை சட்டப்படி அங்கீகரிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

கருணைக் கொலை செய்வதற்கான வழிமுறைகளையும் வகுத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயிர்பிழைக்க வழியில்லாத நோயாளிகளுக்கு செயற்கை சுவாசம் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை அகற்றி  உயிரிழக்க வைக்கலாம் என நீதிமன்றம் கூறியுள்ளது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive