NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

1.38 லட்சம் வரி ஏய்ப்பு வழக்குகள் நிலுவை

சுப்ரீம் கோர்ட்,ஐகோர்ட் உள்ளிட்ட கோர்ட்டுளில் 1.38 லட்சம் வரி ஏய்ப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கூறப்படுவதாவது: ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 056 வழக்குகளில் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் 92 ஆயிரத்து 766 வழக்குகளும், ஐகோர்ட்டுகளில் 39 ஆயிரத்து 66 வழக்குகளும், சுப்ரீம்கோர்ட்டில் 6 ஆயிரத்து224 வழக்குகளும் உள்ளன.

பல்வேறு கோர்ட்டுகளில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 10 ஆயிரம் ஆகும். மேலும் மறை முக வரி ஏய்ப்பு வழக்குகளின் எண்ணிக்கை கடந்த மார்ச் மாதம்31-ம் தேதி வரையில் 44 ஆயிரத்து 077 ஆக உள்ளது.

கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி மூலம் வரி ஏய்ப்பு செய்யப்பட்டதாக ஆயிரத்து 205 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மிக பழமையான மற்றும் நீண்டகாலமாக நிலுவையில் இருந்து வரும் வழக்காக1973-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்ட யமுனாநகர் பல்லார்பூர் இண்டஸ்ட்ரீஸ் வழக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive