NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இந்திய தேசிய கொடி குறித்து மாணவர்களுக்கு சொல்ல சில சுவாரஸ்யமான தகவல்கள்..!




சர்வதேச அரங்கில் இந்தியாவின் தனிச்சிறப்புமிக்க அடையாளமாக திகழ்ந்து வருகிறது நமது மூவர்ணக்கொடி.அதன் நிறங்கள்,கொடியின் நடுவில் இருக்கும் அசோக சக்கரத்தின் சிறப்பம்சம் போன்ற பொதுவான தகவல்கள் நமக்கு தெரியும்.ஆனால் அதைத் தவிர நாம் அறியாத எத்தனையோ சுவாரஸ்யமான தகவல்கள் நமது தேசியக்கொடியின் பிண்ணனியில் உள்ளன.அவை என்ன என்பதை இந்த புகைப்படத் தொகுப்பில் காணலாம்.
இந்திய தேசியக்கொடியை தயாரிக்கும் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் பெற்றுள்ள ஒரே நிறுவனம் கர்நாடாகாவில் உள்ள கர்நாடக காதி மற்றும் கிராம்யோக சம்யுக்தா சங்கம் என்பதாகும்.வட கர்நாடகத்தில் உள்ள பெங்கேரி என்ற கிராமத்தில் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது.

மூவர்ணக்கொடியின் அளவு,கொடி உருவாக்க பயன்படுத்தப்படும் நூல்களின் எண்ணிக்கை மற்றும் தரம்,வண்ணம் கொடுக்கும் சாயங்கள் ஆகியவை இந்திய தர நிர்ணய ஆணையம் நிர்ணயித்துள்ள அளவீடுகளில் இருக்க வேண்டும்.இல்லையெனில் 2002-ஆம் ஆண்டின் தேசியக்கொடி சட்டத்தின்படி சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படலாம்.


இந்திய தேசியக்கொடியை கைராட்டையால் நூற்கப்பட்ட கதர் துணியில் மட்டுமே தயாரிக்க வேண்டும்.


இந்திய தேசியக்கொடியை வடிவமைத்தவர் பிங்காலி வெங்கையா என்ற விவசாயி ஆவார்.இவர் இந்திய சுதந்திர போராட்டத்திலும் தீவிரமாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.



இதுதான் இந்திய தேசியக் கொடி தற்போதைய வடிவத்தை அடைய கடந்த வந்த பாதை.

எந்த விதமான பொதுக்கூட்டங்களாக இருந்தாலும்,மேடையில் பேசுபவரின் வலது பக்கத்தில்தான் தேசியக்கொடி பறக்கவிடப்பட்டிருக்க வேண்டும்.அதாவது பார்வையாளர்களின் இடது பக்கத்தில் கொடிக்கம்பமும்,அதில் கட்டப்பட்டுள்ள தேசியக்கொடியானது வலது பக்கம் நோக்கி விரிந்திருக்க வேண்டும்.

ஒரு வேளை பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்கள் யாரும் இல்லை என்றாலும்,அந்த கூட்டத்தில் யாரும் பேசப்போவதில்லை என்றாலும் தேசியக்கொடியானது பார்வையாளர்களின் வலது புறம் பறக்கவிடப்பட்டிருக்க வேண்டும்.

வேறு நாட்டைச் சேர்ந்த தலைவர்கள் அல்லது அதிகாரிகள் இந்தியாவுக்கு வருகை தந்தால்,அவர்கள் செல்லும் காரின் முன்பகுதியில் வலது புறத்தில் இந்தியக் கொடியும்,இடது புறத்தில் வெளிநாட்டுக்கொடியும் பறக்க வேண்டும்.

இந்திய தேசியக்கொடி சட்டத்தின்படி தேசியக்கொடியை உடையாகவோ அல்லது உடையின் ஒரு பகுதியாகவோ அணியக்கூடாது.ஆனால் கடந்த ஜூலை 2005-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்திருத்தத்தின்படி,இந்திய தேசியக்கொடியை மேல்சட்டையில் பயன்படுத்திக்கொள்ளாலாம்.எக்காரணத்தைக்கொண்டும் மேல் சட்டைக்கு கீழோ,உள்ளாடைகளிலோ பயன்படுத்தக் கூடாது.






0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive