NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.10.2018

அக்டோபர் 4

உலக விலங்கு தினம்

திருக்குறள்

உள்ளத்தால் உள்ளலுந் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வே மெனல்.

விளக்கம்:

பிறருக்குரிய பொருளைச் சூழ்ச்சியினால் கவர்ந்து கொள்ளலாமா என்று ஒருவன் நினைப்பதேகூடக் குற்றமாகும்.

பழமொழி

Distance lends charm to things

இக்கரைக்கு அக்கரை பச்சை

இரண்டொழுக்க பண்பாடு

1. என்னுடைய ஒவ்வொரு பிறந்தநாளிலும் ஒரு மரக்கன்றை நடுவேன்.

2. அம்மரக்கன்றுகளை நன்கு பராமரிப்பேன்.

 பொன்மொழி

கலங்காத உள்ளம் படைத்தவர்களே இறுதி வெற்றிக்கு உரியவர்கள்.

    -சுபாஷ் சந்திர போஸ்

பொது அறவு

1.தமிழ்நாட்டின் மாநில சின்னம் எது ?

 ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம்

2. சுற்றுலாவின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

   தாமஸ்  குக்

தினம் ஒரு உணவின் மகத்துவம்

*முட்டைக்கோசு*

1.இதில் வைட்டமின் கே மற்றும் சி சத்து நிறைந்துள்ளது.

2.  இதில் நீர்ச்சத்து அதிகம். எனவே உடல் எடையை குறைக்க உதவுகிறது.

English words and meaning

Broke.      உடைத்தல்
Branch.    கிளை
Beach.     கடற்கரை
Bachelor. இளங்கலை
Budget     செலவுதிட்டம்

நீதிக்கதை

மனம் தளராதே

 மடத்தில் ஜென் துறவி ஒருவர் சீடர்களுக்கு பாடம் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது அவர் சீடர்களுக்கு துன்பம் வந்தால் தன்னம்பிக்கையுடன் மனதை தளராமல் இருக்க வேண்டும் என்ற ஒரு புத்தியை அவர்களுக்கு புகட்டுவதற்கு ஒரு சிறு கதை சொல்லி புரிய வைக்க நினைத்தார். அதனால் அவர் ஒரு எறும்பு கதையை தன் சீடர்களுக்கு சொன்னார்.

அதாவது "ஓர் எறும்பு தன் வாயில் சற்று நீளமான உணவுப் பொருளை தூக்கிச் சென்றது. அப்போது அது செல்லும் வழியில் ஒரு விரிசல் தென்பட்டது. அதனால் அந்த எறும்பு அதை தாண்டிச் செல்ல முடியாமல் தவித்தது. சற்று நேரம் கழித்து, அந்த எறும்பு தன் உணவை அந்த விரிசல் மீது வைத்து, அதன் மீது ஊர்ந்து சென்று விரிசலைக் கடந்து, பின் தன் உணவை எடுத்துச் சென்றது" என்று கூறினார்.

பின் அவர்களிடம், "அதேப் போல் தான் நாமும் நமக்கு ஏற்படும் துன்பத்தையும் பாலமாக வைத்து, முன்னேற வேண்டும்" என்று கூறினார். மேலும் அந்த சிறு எறும்பின் தன்னம்பிக்கை நமக்கு இருந்தாலே நாம் வாழ்வில் எந்த தடையையும் எளிதாக கடந்து செல்ல முடியும், துன்பமும் காணாமல் போய்விடும் என்று கூறி, அன்றைய பாடத்தை முடித்தார்.


இன்றைய செய்திகள்

04.10.18

* உச்ச நீதிமன்றத்தின் 46-ஆவது தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோய் புதன்கிழமை பதவியேற்றுக்கொண்டார்.

*  2018-ஆம் ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசானது புரோட்டீன்கள்  குறித்த புதிய ஆய்வுகளுக்காக, அமெரிக்கா, பிரான்ஸ், மற்றும் இங்கிலாந்து நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

* அடுத்த கல்வி ஆண்டு முதல் 1-5ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், 6-8ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் சீருடை மாற்றம்: கல்வி அமைச்சர் அறிவிப்பு.

* மேற்கிந்திய தீவுகள் உடனான டெஸ்ட் தொடரை புதுமுக வீரர்கள் மயங்க் அகர்வால், முகமது சிராஜ் போன்ற புதுமுக வீரர்களுடன் கேப்டன் கோலி தலைமையிலான இந்திய அணி எதிர்கொள்கிறது.

* ஜகார்த்தாவில் நடைபெறவுள்ள ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி தமிழக வீரர் தங்கவேலு மாரியப்பன் கொடியேந்தி தலைமை தாங்கிச் செல்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Today's Headlines

🌸 Ranjan Gogoi, the 46th Chief Justice of the Supreme Court, took incharge of his  designation on Wednesday🌹

🌸The Nobel Prize for 2018 in the category of chemistry ,has been announced to present for the three scientists  who belongs to the United States, France and the UK for the new research on proteins🌹

🌸Uniform transition from the next academic year to 1-5th grade students and 6-8th grade students announced by education minister🌹

  🌸Indian cricket team with new faces  Mayenk Aggarwal, Mohammed Siraj are going to play   in the Test series against West Indies in the captainship of Kohli🌹

🌸The Indian team will be headed by Thangavelu Mariyappan with our National Flag, in the Asian Paralympic competition in Jakarta🌹

Prepared by
Covai women ICT_போதிமரம்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive