NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

#அறிவியல்-அறிவோம்: பொரி மற்றும் அவல் பற்றி அறிவோம்.

பழங்காலம் தொட்டு அரிசியில் இருந்து தயாரிக்கப்பட்ட சிற்றுண்டி உணவு பொருள்தான் பொரி. பொரியை இறைவனுக்கு படையலிடும் முக்கிய பொருளாகவும் இன்றைய நாளில் பலவிதமான சாட் உணவுகளில் வண்ணமயமாய் விற்கப்படும் உணவாகவும் பலர் கண்டு உள்ளனர்.

பொரி செய்யும் முறை :

பொரி என்பது அரிசியின் மூலம் உருவாகும் உணவுப்பொருள். இதற்கென பிரத்யோகமான நெல் வகைகளே பயன்படுத்தப்படுகிறது. மோட்டாரக நெல்லே பொரி செய்ய உசிதமானது. மேலும் சம்பா, பூஞ்சம்பி. பவானி ரக அரிசிகளும் பயன்படுத்தப்படுகிறது. சமைக்க பயன்படும் அரிசியில் பொரி தயார் செய்தால் சுவையாக இருக்காது. எனவே இதற்கென குறிப்பட்ட சிலரக நெல் ரகங்களே பயன்படுத்தப்படுகிறது. பொரியில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று நெற்பொரி, மற்றொன்று அரிசிபொரி.

நெற்பொரி என்பது மோட்டாரக நெல்லை ஓர் இரவு முழுவதும் ஊற வைத்து பிறகு அதனை எட்டுமணி நேரம் காய விட வேண்டும். அதன் பின் நெல்லை அடுப்பில் காயும் சட்டியில் அடுமணலுடன் சேர்த்து கிளர வேண்டும். ஒரு நேரத்தில் நெல் வெடித்து நன்றாக அரிசி உப்பும் பிறகு இதனை புடைத்து உமியை நீக்கி விட்டு நெற்பொரியை பிரித்து எடுக்கலாம், ஒருபடி அரிசி கிடைக்கக்கூடிய நெல்லில் சுமார் 8 படி பொரியை தயார் செய்யலாம்.

அரிசிபொரி என்பது புழுங்கலரிசையை தண்ணீரில் உப்பு சேர்த்தும், சேராமலும் ஊறவைத்து அடுமணலுடன் சூடாக்கி பொறித்து எடுப்பது. இது ஒரு அரிசியை விட 8 மடங்கு பெரியதாய் உப்பி வரும்.

நெற்பொரியை காய்ச்சல் மற்றும் வயிற்று போக்கு உள்ளவர்களுக்கு கஞ்சியாக செய்து கொடுக்கலாம். மேலும் மோர், தயிர் வெல்லம் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றுடன் கலந்து சிறு உணவாக உட்கொள்ளலாம்.

மாலை நேர சிற்றுண்டியாய் மசாலாபொரி  :

சாட் உணவுகளில் அதிக அளவு பொரி பயன்படுத்தப்படுகிறது. மசாலா பொரி என்றவாறு மஞ்சள் வண்ணத்தில் பலவகையான உணவுகளுடன் இணைத்து இன்றைய நாளில் பொரி சார்ந்த உணவு வகைகள் நிறைய உள்ளன.

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வெல்லம் கலந்த பொரி உருண்டை ஆரோக்கியமான சிற்றுண்டி வகையை சார்ந்தது. இறைவனுக்கு படையலிட கண்டறியப்பட்ட நெற்பொரி தற் போது மின் இயந்திரங்கள் மூலம் சுலபமாக அதிகளவு உற்பத்தி செய்யப்படுகிறது.

அரிசி பொரியை அன்றாட உணவாக பயன்படுத்தும் மேற்கு வங்காளத்தவர் இன்றும் உள்ளனர். பொரியை சாதாரணமாய் நினைத்து விட வேண்டாம் நெருப்பில் வெந்து தன்னை பெரிதாக்கி கொள்ளும் பொரி சத்துள்ள உணவில் தனித்துவம் பெற்றது

அவல்:

நெல்லிலிருந்து அதிக அளவு அடுத்து தயாரிக்கும் பொருள் அவல் ஆகும்.  ஊறவைத்த நெல்லை சூடு செய்து உடனடியாக தட்டையாக்கப்படும் இயந்திரத்தின் உதவியுடன் தட்டையாக்கப்படும்.

அவல் நன்மைகள்.

அவல் சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. அவல் உடல் சூட்டை தணித்து நல்ல புத்துணர்ச்சியை தருகிறது. காலையில் அவல் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் அந்த நாள் முழுமையும் சுறுசுறுப்புடன் இருக்க செய்யும். குழந்தைகளின் வளர்ச்சிக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் உதவும் அவலை அப்படியே வேக வைக்காமல் வெல்லம் கலந்து சாப்பிட தரலாம். நீரிழிவு நோயாளிகள் அவ்வப்போது பசிக்கும்போது கொஞ்சம் அவலை வாயில் போட்டு மென்று தின்னலாம். தனித்து உண்ணும் போதே நல்ல ருசியாக இருக்கும் அவலை விதவிதமான உணவு வகைகளாக சமைத்து உண்ணலாம்.
 
(S.Harinarayanan) 




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive