NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

டிச. 15க்குள் அரசு அலுவலர்களது பணிப்பதிவேடுகள் கணினிமயம்

 கருவூல கணக்குத்துறையில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் டிச., 14க்குள் தமிழகத்தில் 9 லட்சம் அரசு அலுவலர்களின் பணிப்பதிவேடுகள் கணினிமயமாக்கப்படவுள்ளன.இத்திட்டம் 288.90 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் மாநில கணக்காயர், அனைத்து கருவூல அலுவலகங்கள், சார்நிலை கருவூலங்கள், நிதித்துறை கம்ப்யூட்டர் மூலம் இணைக்கப்படும். 


மாநிலத்தில் அரசு துறைகளில் 29 ஆயிரம் சம்பளம் வழங்கும் அலுவலர்கள் உள்ளனர். இவர்கள் அலுவலர்களது சம்பள பட்டியலை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வர். அவை பரிசீலிக்கப்பட்டு ஒரு நாளில் சம்பளம் உள்ளிட்ட இதர பணப்பயன்கள் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். தற்போது மூன்று நாட்களில் பணம் வங்கியில் வரவு வைக்கப்படுகிறது.கருவூல கணக்குத்துறை முதன்மை செயலர் ஜவஹர் கூறியதாவது: 
மாநிலத்தில் 9 லட்சம் அரசு அலுவலர்கள், 7 லட்சம் ஓய்வூதியர்கள் உள்ளனர். இவர்களது பில்கள் கம்ப்யூட்டர் மூலம் பதிவேற்றம் செய்யப்படுவதால் பேப்பர் இல்லாத அலுவலகங்களாக கருவூலங்கள் மாறும். கம்ப்யூட்டரில் பில் எந்த நிலையில் இருக்கிறது என்பதையும் அறியலாம். மேலும் அரசு அலுவலர்கள் பணிப்பதிவேடுகள் கம்ப்யூட்டர் மயமாவதால், அவர்கள் சம்பள கணக்கு விவரங்களை உடன் அறியலாம். டிச., 15க்குள் கணினிமயமாக்கும் பணிகள் முடியும் என்றார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive