NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தீபாவளியை ஒட்டி புயலுக்கு வாய்ப்பு!

வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள
நிலையில் அடுத்த இருநாட்களுக்கு தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு,!

மேலும் தீபாவளியை ஒட்டி புயலுக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தமிழகத்தின் வானிலையில் ஏற்பட்ட மாற்றத்தை அடுத்து கடந்த மூன்று நாட்களாக பல ஊர்களிலும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அடுத்த வரும் இரு தினங்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் மிதமான மழை பெய்யுமென வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதனிடையே இலங்கை முதல் தென் தமிழகம் வரையிலான கடல் பரப்பில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்ற புயலாக மாறக்கூடும் என்றும், தீபாவளியை ஒட்டி தமிழகத்தில் பலத்த காற்றுடன் அடைமழைக்கு வாய்ப்புள்ளதாக பாலசந்திரன் தெரிவித்துள்ளார். நடப்பு ஆண்டில் தாமதமாக பருவமழை தொடங்கினாலும் இயல்பை விட அதிகமாக இருக்கும் என்றும், தற்போது கடலில் இயல்பான அளவிலேயே காற்று வீசுவதால், மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்றும் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive