NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

SSLC தனி தேர்வர்கள் பதிவுக்கு 19ம் தேதி வரை அவகாசம்

பத்தாம் வகுப்பு பொது தேர்வில் பங்கேற்க உள்ள, தனி தேர்வர்களின் விண்ணப்ப பதிவுக்கு, 19ம் தேதி வரை அவகாசம் தரப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொது தேர்வில் பங்கேற்க விரும்பும் தனி தேர்வர்கள், ஜன., 7 முதல், 14ம் தேதியான, இன்று வரை விண்ணப்பிக்கலாம் என, தெரிவிக்கப்பட்டிருந்தது. 


இன்று, போகி பண்டிகைக்கு அரசு விடுமுறை அறிவித்துள்ளது. எனவே, இன்று விண்ணப்பிக்க முடியாதவர்கள், வரும், 18 மற்றும், 19ம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம் என, அரசு தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தராதேவி அறிவித்துள்ளார்.தேர்வில் பங்கேற்பதற்கான தகுதிகள், நிபந்தனைகள், தேவைப்படும் சான்றிதழ்கள் மற்றும் சேவை மையங்களின் விபரங்களை, www.dge.tn.gov.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மாவட்ட கல்வி அலுவலகங்கள், தேர்வுத் துறை உதவி இயக்குனர் அலுவலகங்களிலும், தேர்வு குறித்த விபரங்களை அறிந்து கொள்ளலாம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive