tag:blogger.com,1999:blog-4039164633152506177.post5063138000493204591..comments2024-03-28T20:31:09.835+05:30Comments on Padasalai.Net - No.1 Educational Website: நீட் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவி தில்லுமுல்லுPadasalaihttp://www.blogger.com/profile/14337625893189457340noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-4039164633152506177.post-45763361158554087662018-06-09T22:17:25.454+05:302018-06-09T22:17:25.454+05:30நீட் தோ்வு நியாயமானது அல்ல என்பதற்கு இது ஒரு உதாரண...நீட் தோ்வு நியாயமானது அல்ல என்பதற்கு இது ஒரு உதாரணம். நீட் ஜெஈஈ மற்றும் ஜிப்மா் நுழைவு தோ்வுகளில் கேட்கப்படும் கேள்விகளுக்கு விடை எழுத பள்ளிப்படிப்பு போதாது. வெளி நிறுவனங்களில் கூடுதல் பயிற்சி பெரும் பொருள் செலவில் பெற வேண்டும். உயா் தகுதி பெற்றவா்களை தோ்வு செய்ய வினாத்தாட்கள் பாடத்திட்டத்திற்கு மிகவும் மிகைப்பட கேட்கப்படுகின்றது. ஆதனால் வகுப்பறை பாடம் கற்றவா்கள் மேற்படி போட்டி தோ்வுகளில் தோ்ச்சி பெற முடியவே முடியாது. மத்திய அரசு நடத்தும் பல்வேறு கல்வி நிறுவனங்களில் சேர பல தோ்வுகள் நடத்தப்படுகின்றன.அதில் நீட் ஒன்றுதான்.நீட்டிற்கு விதிவிலக்கு பெற்றுவிட்டால் மட்டும் என்ன நன்மை.ஜெஇஇ தோ்வு தமிழ்க மாணவா்களுக்கு எட்டாக்கனியாக உள்ளதே ? அதற்கு தீா்வுஎனன?<br />கல்விக்கென தனி தொலைக்காட்சி சேனல் உருவாக்கப்படும்எ னற அறிவிப்வை தமிழக அரசு மறந்து விட்டது. பாடத்திற்கு 3000-5000 சிறு வினாக்கள் சிடி வடிவில் தயாா் செய்து அனைத்து மாணவா்களுக்கம் வழங்கப்படும் என்ற அறிவிப்பும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. நீட மற்றும் ஜெஇஇ தோ்வில் தகுதி பெற என்ன செய்ய வேண்டும் என்பதை விரிவாக ஆராய வேண்டும். கல்லூலி பேராசிரியா் கள் பலரும் இந்த சுழ்நிலையில் காசு சம்பாதிக்கவே அலைகின்றார்கள். இலவசமாகப்படித்த இவர்கள் ஒய்வுதியம் பெறுகின்றார்கள். இவர்கள் இணைத்து மாணவர்களுக்கு தனி வகுப்புகள் நடத்தலாம். உள்ளுா் தொலைக்காட்சிகளில் 6 முதல் மேற்படி போட்டி தோ்வுகளுக்கு தயாராகக் கூடிய அறிவாற்றலும் ஆா்வமும்உள்ள மாணவச் செல்வங்களுக்கு உயா் தரமான பயிற்சி அளிக்கலாம். வேறு என்ன வாய்ப்புகள் என்பதை ஆசிரியா்கள் இங்கே பதிவு செய்யலாம். மத்திய அரசின் சாா்பில் நீட் ஜெஇஇ ஜெஇஇஅட்வான்ஸ்டு என்ற வரிசையில் 48 போட்டித் தோ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.<br />மேலும் மத்திய பல்கலைக்கழகங்களில் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை வெகு குறைவாக உள்ளது. தரமான கல்வி அளிக்கப்படுவதாக நம்பப்படும் இப்பள்ளிகளில் கட்டணங்கள் மிகக்குறைவே. திருவாரூரில் உள்ள இக்கல்லூரியிலும் அதிக எண்ணிக்கையில் கேரள ஆந்திரா கா்நாடக மாணவர்கள்தான் படிக்கின்றார்களாம் ? என்ன அவலநிலை. நமது கல்வித்தரம் ??????????<br />Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.com