சிவராமன் - இன்னும்கூட இப்படியும் சில நல்லாசிரியர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு ஒரு நெத்தியடி உதாரணம். மதுரை மாவட்டம் மேலூர் அருகிலுள்ள சிட்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஆசிரியர் சிவராமன். தனது சொந்த முயற்சியால், இந்தப் பள்ளியில் படிக்கும் 230 குழந்தைகளையும் இயற்கை ஆர்வலர்களாக மாற்றியிருக்கிறார்.