NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கல்வித்தரம் உயரும் - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பேச்சு

         ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கல்வித்தரம் உயரும்: திண்டுக்கல் மண்டல கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பேச்சு

    கல்வித்துறையில் தமிழக அரசு செயல்படுத்தி வரும் புதுமையான திட்டங்களோடு, ஆசியர்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கல்வித்தரம் உயரும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார். திண்டுக்கல் மண்டலத்தில் உள்ள மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களின் கல்வி அலுவலர்கள் மற்றும் பொதுத்தேர்வில் 80 சதவீதத்திற்கும் குறைவாக தேர்ச்சிப் பெற்ற பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 

TET RTI Letter

       9 மாத போராட்டத்திற்கு பிறகு மாநில தகவல் ஆணையம் தலையிட்டதன்பேரில் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் இருந்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட கேள்விகளும் பதில்களும்...

ஆங்கிலப் பாடத்தில் PG மற்றும் TET என இரண்டு இறுதிப்பட்டியலில் இடம்பிடித்துள்ள ஒரே நபர்களின் தொகுப்புப் பட்டியல்.

       சில விண்ணப்பத்தாரர்கள் முதுநிலை ஆசிரியர் இறுதிப் பட்டிலில் இடம்பெற்றிருப்பதோடு TET தேர்வு மூலம் தெரிவு செய்யப் பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர் இறுதிப்பட்டியலிலும் இடம் பெற்றுள்ளனர்.

RTI :PF PART FINAL CLARIFICATION BY AG

அரசு ஊழியர்களுக்கு 25% அகவிலைப்படி உயர்வு; மாநில அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 60 ஆகிறது

           ஹரியானா மாநில அரசு ஊழியர்களுக்கு 25 சதவிகிதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. அவர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தப்பட இருக்கிறது என்று மாநிலமுதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா அறிவித்திருக்கிறார்.
 

ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான வழக்குகள், பணி நியமனத்திற்கு தடையேதும் இல்லை; உயர்நீதிமன்றம்

       ஆசிரியர்தகுதித்தேர்வு தொடர்பான வழக்குகள் இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.ஏற்கனவே இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் மேலும் தொடரப்பட்ட புதிய அனைத்து வழக்குகளையும் ஒரே வழக்காக கருதி செப்டம்பர் மாதம் முதல் வாரத்திற்கு தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார்.
 

9ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 26ம் தேதி அடைவு ஆய்வு தேர்வு

         அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கம் சார்பில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 9ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு, நடப்பு கல்வியாண்டிற்கான அடைவு ஆய்வு தேர்வு வரும் 26ம் தேதி நடைபெறும் என, கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மக்கள் நலப் பணியாளர்களுக்கு மாற்றுப் பணி: உயர்நீதிமன்றம் உத்தரவு

       3 ஆண்டுகளுக்கு முன்பு பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களுக்கு மாற்றுப்பணி வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பணி நீக்கம் செய்யப்பட்ட 13,500 பணியாளர்களுக்கும், வரும் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் , மாற்றுப் பணி வழங்க வேண்டும் என நீதிபதிகள் பால் வசந்தகுமார், சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளது.

10th Latest Study Material

Tamil Study Material
  • Tamil Quarterly Exam Preparation Tips - Click Here


TNTET-2013 Paper1 Expected Cutoff

             ஆசிரியர் தகுதித்தேர்வு - 2013 தாள் 1 குறித்த காலிப்பணியிடங்கள் இதுவரை ஆசிரியர் தேர்வு வாரியத்தால் முறையாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் தாள் 1 இறுதி வெயிட்டேஜ் பட்டியல் மற்றும் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

TNTET Article: வெயிட்டேஜ் முறை எதிர்ப்பு போராட்டம் யாருக்காக!?

      தகுதிதேர்வு என்ற ஒன்று நடந்து முடிந்து கிட்டதட்ட ஓராண்டுகாலம் முடிவடைந்து விட்டது. இந்த தகுதிதேர்வில் கிட்டதட்ட 6லட்சம் பேருக்கு மேல் தேர்வு எழுதினர். அதில் பேப்பர் 1 மற்றும் பேப்பர் 2 ம் சேர்த்து 75000 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் பேப்பர் 2 க்கான தேர்வு பட்டியல் சமீபத்தில் வெளியானது. தேர்வு பட்டியல் வெளியானதும் 90 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றவர்கள் யார் பெயரெல்லாம் தேர்வு பட்டியலில் இடம்பெறவில்லையோ அவர்களில் பலபேர் வழக்கு தொடர்ந்தனர். மேலும் பலபேர் ஒருங்கினைந்து உண்ணாவிரத போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கின்றனர்.

ஆசிரியர்கள் எவ்வாறு இருக்க வேண்டும்?

          ஆசிரியர்கள் என்பவர்கள் எவ்வாறு இருக்க வேண்டும்?.?.?.?. ஆசிரியர் என்பவர் வேராக இருந்து, மாணவர்கள் மலராய் மலர உறுதுணையாய் இருக்க வேண்டும்அறிவை உருவாக்குதல், ஊட்டுதல், அன்பை விதைத்தல், புதுப்பிப்பவர்களாக இருக்க வேண்டும்
 

குரூப் 4 பணிக்கான கலந்தாய்வு தொடங்கியது.

            சென்னை பிராட்வேயில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் குரூப் 4 பணிக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. 645 பணியிடங்களை நிரப்ப 822 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.
 

பள்ளிகளில் கழிவறை கட்ட ரூ.100 கோடி நன்கொடை: டிசிஎஸ்

           நாடு முழுவதும் உள்ள மகளிர் பள்ளிகளில் சுகாதாரத்தை மேம்படுத்தும் விதமாக, 10,000 கழிவறைகள் கட்ட ரூ.100 கோடி நன்கொடையை மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான டிசிஎஸ் திங்கள்கிழமை அறிவித்துள்ளது.
 

இன்று முதல் துணை மருத்துவ படிப்பு கவுன்சலிங்.

           துணை மருத்துவ படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கவுன்சலிங் இன்று தொடங்கி வரும் 27ம் தேதி வரை நடக்கிறது. தமிழக அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில், நர்சிங், பி.பார்ம், பிபிடி, ரேடியோலஜி, பிசியோதெரபி உள்ளிட்ட 8 விதமான துணை மருத்துவ படிப்புகள் உள்ளன.
 

மத்திய அரசு ஊழியர்கள் வலியுறுத்தல் குறைந்தபட்சம் 26 ஆயிரம் சம்பளம்

          ஏழாவது சம்பள கமிஷன்படி ஊதிய உயர்வை விரைவில் அறிவித்து, குறைந்தபட்ச சம்பளமாக 26 ஆயிரம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர்கள் 7வது சம்பளகமிஷன் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.மாத்தூரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
 

தகுதிகாண் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும்: பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தல் - தினமணி

             ஆசிரியர் நியமனத்தில் தகுதிகாண் மதிப்பெண் (வெயிட்டேஜ் மதிப்பெண்) முறையை ரத்து செய்ய வேண்டும் என பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தினர்.

பொறியியல் கல்லூரி உதவிபேராசிரியர் பணிக்கான விண்ணப்பம் வினியோகம்

           அரசு பொறியியல் கல்லூரி உதவிபேராசிரியர் பணிக்கான போட்டி தேர்வு விண்ணப்பங்கள் நாளை முதல் திண்டுக்கல் முதன்மை கல்வி அலுவலகத்தில் வினியோகிக்கப்பட உள்ளது.
 

10 ஆயிரம் பள்ளிகளுக்கு விரைவில் புதிய கட்டணம் : கட்டண நிர்ணய குழு தலைவர் தகவல்

         'பத்தாயிரம் தனியார் பள்ளிகளுக்கு, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான புதிய கட்டணம் நிர்ணயம் செய்யும் பணி, விரைவில் துவங்கும்,'' என, கட்டண நிர்ணய  குழு தலைவர், சிங்காரவேலுதெரிவித்தார்.

PGTRB Cutoff for 6 Subjects Published.

PGTRB Cutoff for English, Maths, Chemistry, Botany, History, MicroBiology Subjects Published. - Click Here

TET பட்டதாரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்!

           ஆசிரியர் தகுதித்தேர்வு 2013 ல் தேர்ச்சி பெற்றும் புதிய weightage முறையால் பாதிக்கப் பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் weightage முறையை நீக்க வேண்டும் என  உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Time Table Allotment For All Standards

Time Table Allotment for TN Common Schools Curriculum - Click Here


இல்லத்தரசிகள் தற்கொலை செய்து கொள்வதற்கான முக்கிய காரணங்கள்:

         வாழ்க்கை யில் ஏற்படும் தோல்விகளை எதிர்கொள்ள பெண்கள் தயக்கம் காட்டுவதுதான் இல்லத்தரசிகள் தற்கொலை செய்து கொள்வதற்கான முக்கிய காரணங்களாக உள்ளது. தென்னிந்தியாவில் தற்கொலைகள் அதிகம் நடைபெறுகின்ற மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. குறிப்பாக இல்லத்தரசிகள் அதிகளவில் தற்கொலை செய்து கொள்ளும் பட்டியலில் தமிழகமும் இருக்கிறது என்கிற அதிர்ச்சி தகவல் தேசிய குற்ற ஆவண காப்பகம் பதிவேட்டின் மூலம் தெரியவருகிறது. 

தனியார் தமிழ்வழிப் பள்ளிகளை அரசு உதவி பெறும் பள்ளிகளாக மாற்ற வேண்டும்: ராமதாஸ்

        தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் தமிழ்வழிப் பள்ளிகளையும் அரசு உதவி பெறும் பள்ளிகளாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 

முதன்முறையாக, அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு நாட்குறிப்பு.

         புதுச்சேரியில் முதன்முறையாக, அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, நாட்குறிப்பு (மாணவர் கையேடு) வழங்கப்பட உள்ளது.புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பாடபுத்தகம், சீருடை, சிற்றுண்டி, சைக்கிள் உள்ளிட்ட பல இலவச திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. எனினும்,
 

ஆங்கிலவழிக் கல்விக்கு தனி ஆசிரியர்கள் தேவை என்ற கோரிக்கை: கல்வி அதிகாரிகள் நிராகரிப்பு

       ஆங்கில வழிக்கல்விக்கு தனி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும்' என்ற கோரிக்கை, தொடக்க மற்றும் நடு நிலைப் பள்ளி ஆசிரியர்களிடையே எழுந்துள்ளது. ஆனால், தனி ஆசிரியர்கள் தேவை இல்லை என அதிகாரிகள் கூறுகின்றனர்.

பெண் பணியாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப பணியிட மாற்றம் : அரசு பரிந்துரை

            நாட்டிலுள்ள பொதுத்துறை வங்கிகளில் பணியாற்றும் பெண்கள் தங்களின் விருப்பத்துக்கு தக்க வாறு பணியிட மாறுதல் பெறுவதற்கு ஆவன செய்ய வேண்டுமென அனைத்து வங்கிகளுக்கும் மத்திய நிதி அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

மழைநீர் வடிகால் பள்ளத்தால் பள்ளி சிறுவர்கள் அவதி

         மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தால், பள்ளி சிறுவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். பெருங்குடி, திருமலை நகர் விரிவு பகுதியில், ஊர் குளம் ஒன்று உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன், அந்த குளம் சீரமைக்கப்பட்டது. அதை, மழைநீர் சேகரிப்பு குளமாக மாற்றும் வகையில், சுற்றுவட்டாரப் பகுதியில், மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு வருகிறது.

பள்ளி கல்வித்துறையின் நடமாடும் ஆலோசனை மையங்கள் - பலன் எப்படி?

          பதின்பருவம்... ஒரு புதிர்பருவம்! அந்த பருவத்தில், உடலும், உணர்வும் ஒவ்வொரு நாளும் புதிது புதிதாய் மாற துவங்க, உள்ளம் நினைவுகளை எங்கெங்கோ இழுத்துச் செல்ல, நெருங்கிய உறவுகள் சுருங்க, புதிதாய் உறவுகள் நெருங்க ஆரம்பிக்கின்றன. வயதை போலவே, ஆசை, நிராசை, ஏமாற்றம், ஏளனம், குழப்பம், கலக்கம் என, பழக்கப்படாதவைகளின் பட்டியல் நீள துவங்குகின்றன.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive