NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வண்ண வாக்காளர் அடையாள அட்டை தயார்: ஓரிரு நாளில் வினியோகம்

                தமிழகத்தில், புகைப்படத்துடன் கூடிய வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணி, ஓரிரு நாளில் துவங்க உள்ளது.கடந்த லோக்சபா தேர்தலின்போது, வாக்காளர்பட்டியலில் பெயர் சேர்க்க, மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.இதில், ஏராளமானோர் பெயர் சேர்க்க விண்ணப்பித்தனர். அவர்களில் தகுதியான, 12 லட்சம் பேரின் பெயர், வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டது.அவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய, வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்க, தேர்தல் கமிஷன் முடிவு செய்தது.

கும்பகோணம் டிகிரி காபியும் சமகாலத்துக் கல்வியும்… ச.சீ.இராசகோபாலன்

         நெடுஞ்சாலைகளில் கும்பகோணம் டிகிரி காபிக் கடைகள் நிரம்பிக்கிடக்கின்றன. ஒவ்வொன்றிலும் எப்போதும் கூட்டம். ஆவி பறக்கும் கொதிநிலையில், பித்தளை டபரா-டம்ளரில் காபி வழங்கப்பெறும். அசல் பித்தளையல்ல, பித்தளை வண்ண முலாம் பூசப்பட்டுள்ள பாத்திரங்கள்.

அபராதத்துடன் வருமான வரி செலுத்த வேண்டும்; அரசு ஊழியர்களுக்கு 'நோட்டீஸ்'

          அரசுப் பணியாளர்களிடம் பிடித்தம் செய்த தொகையை, முறையாக செலுத்தாததால், அபராதத்துடன் வருமான வரியை செலுத்த வேண்டும்' என, வருமான வரித்துறை 'நோட்டீஸ்' அனுப்புவதால், அரசுப்பணியாளர்கள் புலம்பி வருகின்றனர்.ஆண்டுக்கு, 2 லட்சம் ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டுவோர், வருமான வரி செலுத்த வேண்டும். இந்த தொகையை, மோடி தலைமையிலான புதிய அரசு, 2.5 லட்சம் ரூபாயாக உயர்த்தியுள்ளது.

ஆசிரியர்கள் புரிதலுடன் கூடிய கல்வி கற்பிக்க வேண்டும்; இயக்குனர் வலியுறுத்தல்

              "புரிதலுடன் கூடிய கல்வி அறிவை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும்," என தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன் வலியுறுத்தினார். மதுரையில் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கற்றல் அடைவுதிறன் மேம்படுத்துதல் பயிற்சி முகாமை நேற்று துவக்கி வைத்து அவர் பேசியதாவது: மாணவர்களுக்கு எளிய முறையில் எழுத்தறிவை வளர்க்கும் வகையில் கற்பித்தல் பயிற்சி அளிக்க வேண்டும். ஒவ்வொரு புதிய வார்த்தைகளை கற்பிக்கும் போது, அதன் அர்த்தத்தை மாணவர்கள் மனதில் பதியும் வகையில் விளக்க வேண்டும்.
 

எம்.பி.ஏ. படிக்க விரும்புவோருக்கான 5வது சிறந்த நாடு இந்தியா!

            எம்.பி.ஏ. படிக்க விரும்பும் மாணவர்களுக்கான விருப்ப நாடுகளில், இந்தியா ஐந்தாவது இடத்தில் இருக்கிறது என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இந்த வரிசையில், முதலிடத்தில் அமெரிக்கா வருகிறது. அதற்கடுத்து, பிரிட்டன், கனடா, பிரான்ஸ், இந்தியா, ஹாங்காங், ஜெர்மனி, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா மற்றும் ஹாலந்து ஆகிய நாடுகள், முதல் 10 இடங்களுக்குள் வருகின்றன.

செல்போன் மூலம் குழந்தைகளுக்கான “தடுப்பூசி” தகவல்கள்!

              பெற்றோர்கள் தங்கள் செல்போனில் குழந்தையின் பெயர் மற்றும் பிறந்த தேதியை எஸ்.எம்.எஸ். செய்தால் போதும். குழந்தைக்கு எந்தத் தேதியில் எந்தத் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்ற தகவல் உடனடியாக வந்துவிடும். National Vaccine Remainder என்று இதற்குப் பெயர். இது ஓர் இலவச சேவை. இந்தியாவில் உள்ள அனைவரும் இதைப் பயன்படுத்திப் பலன் பெறலாம். இதற்கு என்ன செய்ய வேண்டும்?

10, 12 தேர்வுகளில்அதிக மதிப்பெண் பெற்ற ஏழை மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கல்வி உதவித்தொகை

            10, 12 தேர்வுகளில்அதிக மதிப்பெண் பெற்ற ஏழை மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கல்வி உதவித்தொகை: LIC , INDIAN OIL அறிவிப்பு

12th Latest Study Material

Accountancy
  1. Accountancy 5 Mark Important Questions - English Medium
Commerce
  1. Commerce 5 Mark & Important Questions - English Medium
Prepared by Mr. T. VIMALRAJ, M.Com, MBA, B.Ed.,
Economics
  1. Economics - Book Back Questions - Tamil Medium
Thanks to SATHYA Xerox & Browsing Centre.

Festival advance Form download

பண்டிகை முன்பணம் கோரும் விண்ணப்பம்-ரூபாய் 5000/- 

TET அரசு பணி நியமனத்தை நம்பி வேலையிழந்த ஆசிரியர்கள்

          அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி நியமனத்தை நம்பி, தனியார் பள்ளிகளில் பார்த்து வந்து வேலையை இழந்த ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.

TET - பத்து நாளில் தீர்ப்பு வெளியிடப்படலாம்?

TET – வழக்கு
பத்து நாளில் தீர்ப்பு வெளியிடப்படலாம்?
          இன்று காலை (16.09.2014) சென்னை நீதிமன்றத்தில் டெட் இடஒதுக்கீடு மற்றும் வெயிட்டேஜ் குறித்த வழக்குகள் விசாரணை நடைபெற்றது

தந்தை இறந்தபோது சிறுவனாக இருந்தவருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

      தந்தை உயிரிழந்தபோது சிறுவனாக இருந்தவருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுகரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அழகேசன் என்பவரின் தந்தை வருவாய்த் துறையில் ஊழியராகப் பணியாற்றினார். கடந்த 2001-ம் ஆண்டு அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அப்போது அழகேசன் சிறுவனாக இருந்தார். அந்த நேரத்தில் அழகேசனின் தாயார் தனக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கக் கோரி விண்ணப்பம் அளித்தார். எனினும் அவருக்கு வேலை வழங்கப்படவில்லை.
 

உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள பள்ளிகளுக்கு 17 மற்றும் 18ம் தேதி விடுமுறை

          தமிழகத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள பள்ளிகளுக்கு 17 மற்றும் 18ம் தேதி விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு

TNPSC: உதவி ஆணையர் பதவி சான்றிதழ் சரிபார்ப்புக்கான விண்ணப்பதாரர் பட்டியல் வெளியீடு

     தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) நேற்று வெளியிட்ட அறிவிப்பு:

ஆந்திர முதல்வரின் சிறந்த முயற்சி

             இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக எங்கும் எதிலும் ஊழல் என்றாகி விட்டதால், மக்களுக்கு அரசு நிர்வாகங்கள் மீது கடும் வெறுப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால், தேர்தல்களில் மக்கள் தங்கள் அதிருப்திகளை வெளிப்படுத்தும் வகையில் வாக்களிக்கிறார்கள். ஊழல் மீது மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பினால்தான், லோக்பால் அமைக்கக் கோரி சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே நடத்திய போராட்டங்களுக்கு மக்கள் மிகுந்த ஆதரவு அளித்தார்கள். கடைசியில், அந்த போராட்டத்துக்கு குவிந்த நிதிக்கு சரியான கணக்கு வழக்குகள் உள்ளதா என்று சர்ச்சை கிளம்பி, மக்களுக்கு அந்த போராட்டங்களின் மீதும் நம்பிக்கை குறைந்தது. 

அரசுப் பள்ளிகளின் திறம்

          பல பெற்றோர்கள், தங்களின் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க விரும்பினாலும், அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு கடும் போட்டியைத் தருபவையாக உள்ளன. அரசுப் பள்ளிகள், தங்களின் தரத்தை சிறிதுசிறிதாக உயர்த்தி வருகின்றன என்று கல்வியாளர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்.

அழகான கையெழுத்து: அதிக மதிப்பெண் சாத்தியம்

        அழகான கையெழுத்து அமைவது இயற்கையாக கிடைத்த வரம். அழகான கையெழுத்து, படிக்கும் அனைவருக்கும் மகிழ்ச்சியை தருகிறது.

ஏழை மாணவர் கல்வி கற்க தள்ளாத வயதிலும் உதவும் தம்பதியர்

     சென்னை சின்மயா நகரில் வசிக்கும், மத்திய அரசின் ஓய்வு பெற்ற அதிகாரியான சுப்பிரமணியன், 72, ஓய்வுபெறும் அதிகாரிகளுக்கு, மூன்று வகையான வழிகாட்டல்களை வழங்குகிறார். ''ஒன்று, ஓய்வு பெற்றவுடன் சொந்த ஊருக்குச் செல்லுங்கள்; இரண்டு, சொந்த பந்தங்களை இணைப்பதில் அக்கறை காட்டுங்கள்; மூன்று, நீங்கள் படித்த பள்ளிக்கு உங்களால் முடிந்த ஏதாவது ஒரு உதவியை செய்யுங்கள்,''இதுபோன்ற அறிவுரைகள் வழங்க இவருக்கு, அதிக தகுதி உள்ளது.காரணம் என்னவெனில், சென்னை, திருவண்ணாமலை, வேலுார் என, ஊர் ஊராக அலைந்து திரிந்து, அரசுப் பள்ளிகளில், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும், மாணவர்களின் கல்விக்காக, தனது ஓய்வூதியத்தின் ஒரு பகுதியை, தொடர்ந்து செலவிட்டு வருகிறார், சுப்பிரமணியன்.
 

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் (டி.ஆர்.பி.,) அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில்பணி நியமனங்கள் தாமதம்


          ஆசிரியர் பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டும் மவுனம் காக்கும் ஆசிரியர்  தேர்வு வாரியத்தால் (டி.ஆர்.பி.,) அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பணி நியமனங்கள்  தாமதமாவதாக சர்ச்சை எழுந்துள்ளது. மாணவர்கள் கல்வி பாதிக்கப்படுகிறது.
 

நீங்கள் பொறுப்பான பெற்றோரா?

பிரேமா நாராயணன், படங்கள்: எம்.உசேன், ப. சரவணகுமார்
           குழந்தை வளர்ப்பு என்பது கடமை அல்ல, அது ஒரு கலை. '’உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல. அவர்கள் உங்கள் மூலமாக வந்திருக்கிறார்கள், அவ்வளவுதான்' என்றார் கலீல் ஜிப்ரான். ஒருபுறம் தங்கள் நிறைவேறாத கனவுகளைக் குழந்தைகள் மூலம் திணிக்கும் 'ரிங் மாஸ்டர்’
பெற்றோர்கள், இன்னொருபுறம் தொழில்நுட்ப வளர்ச்சியுடனே சேர்ந்து வளரும் குழந்தைகள் இவற்றுக்கு இடையில்தான் இருக்கிறது குழந்தை வளர்ப்பு என்னும் கலை.

அரசு பள்ளி மாணவர்களுக்கு வாசிப்பு திறன் குறைவு: எஸ்.எஸ்.ஏ., ஆய்வில் அதிர்ச்சி தகவல்

            அரசு ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியரில் அதிக மானோருக்கு, பாடப் புத்த கத்தில், வாசிப்புத் திறன் குறைவாக இருப்பதாக, அனைவருக்கும் கல்வி திட்ட இயக்ககம் (எஸ்.எஸ்.ஏ.,) நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஒதுக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் இழுத்தடிக்கும் டி.ஆர்.பி.,

             ஆசிரியர் பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டும் மவுனம் காக்கும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் (டி.ஆர்.பி.,) அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பணி நியமனங்கள் தாமதமாவதாக சர்ச்சை எழுந்துள்ளது. மாணவர்கள் கல்வி பாதிக்கப்படுகிறது.

10th Latest Science Study Material

Science Study Material
Click Here For Download Our Other Study Materials.

TET இந்த வார இறுதிக்குள் தீர்ப்பு வருமா?

          சென்னை அமர்வு நீதிமன்றத்தில் TET குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. ஆனால் 5% தளர்விற்கு எதிரான வழக்கின் வாதங்கள் மட்டுமே நடைபெற்றது. இந்த வாதங்களே கிட்டதட்ட 3 மணிநேரம் நடைபெற்றது.

தேசியத் திறனறித் தேர்வு - மதிப்பெண்களை வைத்தா குழந்தைகளை மதிப்பிடுவது?

     ஏப்ரல் மாதம் நடந்த வருடாந்திர தேசியத் திறனறித் தேர்வுகளின் முடிவுகளை ஜப்பான் கல்வி அமைச்சகம் பொதுப்பார்வைக்கு வெளியிட்டிருக்கிறது. 2007 முதல் நடத்தப்படும் இந்தத் தேர்வுகள், ஆறாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் ஜப்பானிய மொழியறிவு, கணிதம், அறிவியல் மற்றும் பொது அறிவைச் சோதிப்பதற்காக நடத்தப்படுகின்றன.

ஆசிரியர்கள் போராட்டம் நடத்தலாமா தொடக்க கல்வி இயக்குனர் கருத்து

               ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்த கூடாது என்பது என் கருத்து இல்லை. அது ஆசிரியர்களுக்கான நன்னடத்தை விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது," என தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன் தெரிவித்தார்.மதுரையில் நிருபர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:
 

பிளஸ் 2 மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வுகள் நேற்று தொடங்கியது: அதிகாரிகள் கண்காணிப்பு

        பிளஸ்1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டுத்  தேர்வுகள் நேற்று  தொடங்கியது. மற்ற வகுப்புகளுக்கான காலாண்டுத்  தேர்வு 19ம் தேதி தொடங்க உள்ளது. பள்ளி மாணவர்களுக்கான  காலாண்டுத் தேர்வுகள் தொடர்பான கால அட்டவணை கடந்த மாதம்  வெளியானது. 
 

நாமம் போட்டு பட்டதாரிகள் உண்ணாவிரதம்

          வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று  இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கடந்த மாதம் 18ம் தேதி  முதல் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில்  பல்வேறு அரசு அலுவலகங்களில் முற்றுகை போராட்டம் நடத்திவரும்  ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கு நேற்று சென்னை, மதுரை உயர்நீதி  மன்றங்களில் விசாரிக்கப்பட்டது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive