tag:blogger.com,1999:blog-4039164633152506177.post2051591306609196457..comments2024-03-29T15:43:13.036+05:30Comments on Padasalai.Net - No.1 Educational Website: Breaking News: திமுக தலைவர் கலைஞர் அவர்கள் காலமானார்Padasalaihttp://www.blogger.com/profile/14337625893189457340noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-4039164633152506177.post-2899855402496798652018-08-08T05:46:53.969+05:302018-08-08T05:46:53.969+05:30Sir super kavithaiSir super kavithaiAnonymoushttps://www.blogger.com/profile/06831825249714921644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4039164633152506177.post-39233684148362029202018-08-07T19:13:22.060+05:302018-08-07T19:13:22.060+05:30⚫⚫⚫⚫⚫⚫⚫⚫
*"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்&qu...⚫⚫⚫⚫⚫⚫⚫⚫<br />*"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்"*<br /><br />முதல் இரங்கல்<br />முத்தமிழ் அறிஞருக்கு!<br /><br />தமிழில் அஞ்சலி<br />இல்லையில்லை<br />*தமிழுக்கே அஞ்சலி!*<br /><br />*உதயசூரியனுக்கு உறுப்பு நின்றது*<br />கருப்பு செவப்பு இன்று<br />காலத்தை வென்றது<br /><br />*கலைஞர்எனும் கவியியல்<br />தமிழகத்தின் புவியியல்<br />தரணியில் வரலாறானது<br /><br />அறிவியலாளர்களே!<br />குறித்துக்கொள்ளுங்கள்<br />இன்று<br />இறந்தவருக்கு<br />இரண்டு<br />இதயம்<br />இருந்துள்ளது.<br /><br />இன்று<br />ஆழ்வார் பாடிய காவிரியில்<br />தண்ணீர் ஓடுகிறது!<br />ஆழ்வார்பேட்டை காவிரியில்<br />கண்ணீர் ஓடுகிறது<br /><br />அண்ணா பாதையில் நடைகண்டவர்<br />செந்நா போதகருக்கு சிலை கண்டவர் <br />சிலையானார்!<br /><br />*ராஜகுமாரியில்* ஆரம்பித்து<br />*ராமானுஜரில்* நிறைவுசெய்த<br />ராஜ்ஜியம்<br /><br /><br />ஏய்<br />ஆடிகாத்தே!<br />வழக்கமா அம்மியத்தான<br />அசைப்ப...<br />ஆர்பரித்து ஏன்<br />*ஆலமரத்தை*<br />அசைத்துள்ளாய்?<br /><br />ஆறாம் மாதத்தில் பிறந்து<br />ஆறு சரித்திர நாவல்களை தந்தவரே!<br />தரித்திரங்களை கொன்றவரே!<br /><br />ஒண்ணரை சதம் நூல்தந்து<br />மண்ணரை செல்லும் மன்னவா!<br />வள்ளுவனுக்கு கோட்டம் தந்து<br />வான்புகழ் கொண்டவா!<br /><br />கண்டிக்கிறேன்!<br />கண்டிக்கிறேன்!<br />காலனை<br />கண்டிக்கிறேன்!<br />கணக்கை தப்பாக போட்டு<br />கண்ணில் உப்பாக<br />கடலை வரவழைத்த<br />காலனை கண்டிக்கிறேன்!<br /><br />பாவிப்பய எமனே !<br />பா வித்தகன் இவனே<br />என்பதை அறியா <br />பாடைக்கு பிறந்தவனே!<br />மேடைக்கு பிறந்தவனை<br />மேன்மைகளை புரிந்தவனை ஏன்<br />மேலே <br />அழைத்துக்கொண்டாய்<br />பதிமூன்று மூன்றுமுறை<br />வென்றவர்<br />பார் முழுதும் நின்றவர்<br />பரிதவிக்கவிட்டு சென்றவர்.<br />*பாரதிக்குப்பின்*<br />*பராசக்தி அழுகிறாள்*<br /><br />சமத்துவபுரம் கண்டவர்<br />சமாதிக்குள் செல்கிறார்<br />இல்லை<br />சரித்திரத்தை வெல்கிறார்.<br /> <br />*சங்கதமிழ்* தந்த<br />சந்ததமிழே! உன்<br />சரிரம் அடங்கினாலும் உன்<br />சப்தம் அடங்காது.<br /><br />நடமாடும் <br />நூலகம் <br />இன்றுமுதல்<br />நேரடி பணியை நிறுத்தி கொண்டது.<br /><br />இந்த தேசத்தில்<br />மொழிக்காக போராடி<br />செம்மொழிக்காக வாதாடி<br />வெயில் காத்த காத்தாடி<br />நின்று போச்சே அம்மாடி.<br /><br />மூப்பின் காரணமாக<br />மூச்சுநின்றது என்றாலும்<br />யாப்பின் காரணமாக<br />யார் கண்ணும் கட்டவில்லை இங்கு<br />ஒப்புக்கு அழவில்லை ஒருவரும்<br />ஒத்துக்கொண்டு அழுகின்றனர்<br />அனைவரும்<br />*தமிழின தலைவர்* நீ என்பதை<br /><br />தோணி சதமடிப்பார்<br />எனபதைவிட<br />திருக்குவளை கேணி<br />சதமடிப்பாய் என<br />நம்பினோம். <br />எம்<br />நம்பிக்கை ஒடிந்தது இதய<br />நாலறையும் இடிந்தது.<br /><br />சூரியனிலிருந்து<br />பிரிந்து வந்த பூமிக்குள்<br />சூரியனை எப்படி புதைப்பது? இனி<br />பகுத்தறிவை யார்<br />விதைப்பது?<br /><br />*தமிழ் இனி* *மெல்லசாகும்* என்றான்<br />பாரதி இப்போதுதான்<br />அர்த்தம் விளங்குது.<br />அகிலம் கலங்குது.<br /><br />தமிழ்தாயின்<br />தலைமகனே!<br />தரணிபோற்றும்<br />தமிழ்மகனே!<br />உம்மை புதைத்தாலும் நீ<br />*தொழுஉரம்!*<br />கண்ணை இமைக்காமல்<br />*தொழுகிறோம்!*<br />இடைவிடாமல் அழுகிறோம்.<br /><br />பூம்புகார் வாயில் தந்தவரே!<br />புராணத்தில் வழியில் வந்த<br />புருடர்களை நான் எப்படி<br />எதிர்கொள்வேன்?<br /><br />போக்குவரத்தை தூக்கி<br />நிறுத்திய தேக்குமரம்<br />குடிசைகளை கோபுரமாக்கிய<br />கொடிமரம்<br />அசையமறுத்தது ஏன்?<br />அறிவியலானது வீண்!<br />இனி எப்படி வாழ்வேன் நான்!<br /><br />கண்ணுக்கு முகாம்<br />கண்ட<br />*கண்ணப்பருக்கு*<br />*கல்லரையா?*<br /><br />முரசொலி தன்<br />மூச்சுக்காற்றை<br />நிறுத்திக் கொண்டது.<br />மூன்றுகோடி தொண்டர்களை<br />நிறுத்தி கொன்றது.<br /><br />மண்ணை ஆண்ட<br />*அண்ணாவின் தம்பி*<br />விண்னை ஆழப்போகிறார்!<br />என்னை<br />அழவைக்கிறார்!<br /><br />திமுகாவின் தலைவா!<br />ஏடு பிடித்த *ஏகலைவா!*<br />இரந்து கேட்ட எமன்மீது<br />இறக்கம் கொண்டது ஏன்?<br /><br /><br />மழலை மாறா என் மகள்<br />வளர்ந்து வந்து<br />வாய் திறந்து கேட்பாள்..<br />தமிழென்றால் என்னப்பா?<br />ஊருக்கே தமிழை ஊட்டிவளர்த்த நான்<br />என் மகளுக்கு<br />தமிழை எப்படி<br />காட்டி வளர்ப்பேன்?<br /><br /><br />*கனத்த இதயத்துடன்*<br /> முடக்குசாலை<br />*புலவர்* ம.இளங்கோவன்<br />9994994339<br />மதுரைtamilhttps://www.blogger.com/profile/13218245625867773338noreply@blogger.com