NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

2012-13ஆம் கல்வி ஆண்டில், 100 அரசு/நகராட்சி/மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் மற்றும் பணியிடங்கள் தோற்றுவித்தல் - ஆணை

அரசாணை எண். 137 பள்ளிக்கல்வி(மேநிக)துறை நாள்.08.06.2012  
பள்ளிக்கல்வி - 2012 - 13 ஆம் கல்வி ஆண்டில், 100 அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலைப்பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாக நிலை உயர்த்துதல் மற்றும் பணியிடங்கள் தோற்றுவித்தல் - ஆணை வெளியிடப்பட்டுள்ளது. 

TNPSC - CSSE - I,EXECUTIVE OFFICER GR-III & SUPERINTENDENT OF BOYS APPROVED SCLS - NOTIFICATIONS RELEASED



List of Current Notifications
S No.
Advt. No./ Date of Notification
Name of the Post
Online Registration
Date of Examination
Activity

From
To
1
19/2012
13.06.2012
Posts included in CSSE-I
·                    Tamil Version
·                    English Version
13.06.2012
13.07.2012
12.08.2012
2
19/2012
13.06.2012
Executive Officer 
Grade-III- (Group-VII-B)
·                    Tamil Version
·                    English Version

13.06.2012
13.07.2012
12.08.2012
3
19/2012
13.06.2012
13.06.2012
13.07.2012
12.08.2012
4
19/2012
13.06.2012
Superintendent  of Govt. Observation Homes
·                    Tamil Version
·                    English Version
13.06.2012
13.07.2012
12.08.2012
5
19/2012
13.06.2012
Group-V-A  Assistant in Secretariat - recruitment by Transfer
·                    Tamil Version
·                    English Version
13.06.2012
13.07.2012
12.08.2012
6
20/2012
13.06.2012
Cost Assistant in Department of Industries and Commerce
·                    Tamil Version
·                    English Version
13.06.2012
13.07.2012
26.08.2012

பள்ளி மாணவர்களுக்கு அழகிய புத்தகப்பை, காலணிகள்.


ஏற்கனவே அறிவித்தபடி, பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா காலணி மற்றும் புத்தகப் பைகளை வழங்க, ரூ.491 கோடியை ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

ஆகஸ்ட் 12ல் குரூப்-2 தேர்வு: 3,631 இடங்களை நிரப்ப அறிவிப்பு


         குரூப்-2 நிலையில், ஏற்கனவே 7,000 இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், நகராட்சி கமிஷனர், சார்-பதிவாளர் உள்ளிட்ட பதவிகளில், 3,631 காலியிடங்களை நிரப்ப, மேலும் ஒரு குரூப்-2 தேர்வை, நேற்று மாலை டி.என்.பி.எஸ்.சி., அறிவித்தது.

கல்வி உதவித்தொகை பெறுவது எப்படி?


        தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்று, உயர்கல்வி படிக்க இடம் கிடைத்துள்ள ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கி உதவிக்கரம் நீட்டுகின்றன அரசு அமைப்புகள். தேவையும் தகுதியும் உள்ள மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கல்வி உதவித் தொகை பெறலாம். இந்த உதவித் தொகைகள் பற்றிய தகவல்கள் இதோ...

குழந்தையின் கற்றல் - ஒரு அற்புத செயல்பாடு



ஒரு குழந்தை கல்வி கற்பதை, பெற்றோர்கள் அடிக்கடி, பள்ளியுடன் தொடர்புபடுத்துகின்றனர். ஏனெனில், பள்ளி செல்லும் வயதை அடைந்தவுடனேயே, குழந்தைகள், கல்வியறிவை பெற தயாராகி விடுகிறார்கள் என்று பெற்றோர்கள் கருதுவதே இதற்கு காரணம்.

அனைவருக்கும் கல்வி இயக்கம் - மாற்று திறன் கொண்ட குழந்தைகளுக்கான உள்ளடங்கிய கல்வி - சிறப்பு ஆசிரியர்கள் - கல்வித் தகுதி ஆய்வு செய்ய மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.


மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 1001 / அ2 / மாகுஉக / அகஇ / 2012, நாள். 12.06.2012
அனைவருக்கும் கல்வி இயக்கம், மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளுக்கான உள்ளடங்கிய கல்வியின் கீழ், நன்கு வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதிகளின் அடிப்படையில் மட்டுமே சிறப்பு ஆசிரியர்கள் தெரிவு செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசு கலை கல்லூரிகளில் 18ம் தேதி முதல் கவுன்சலிங்


        அரசு கலை கல்லூரிகளில், பட்டப் படிப்பிற்கான விண்ணப்ப வினியோகம் முடிந்துள்ள நிலையில், வரும் 18ம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள ராணி மேரி கல்லூரியில், 14ம் தேதி மாணவர் தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. 18ம் தேதி கணிதம், வேதியியல் பாடத்திற்கும், அடுத்த நாள் கணிப்பொறி படிப்பிற்கும், 20ம் தேதி பி.காம்., படிப்பிற்கும், 21ம் தேதி மற்ற அறிவியல் படிப்பிற்குமான கலந்தாய்வு நடைபெற உள்ளது.

10 th Maths Formulas

TET - Psychology Unit 2

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான - மருத்துவ உதவி - புதிய சுகாதார காப்பீட்டு திட்டம் - தொடக்கக்கல்வி துறையில் நடைமுறைப்படுத்த இயக்குநர் உத்தரவு


தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 
ந.க.எண். 014210 / சி 3 / 2012, நாள். 12.06.2012
அரசாணை எண். 139 நிதித் (ஊதியப்பிரிவு) துறை நாள். 27.04.2012 ன் படி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்டத்  தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
தொடக்கக்கல்வித் துறையில் உள்ள அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கான அரசு அறிவித்துள்ள புதிய சுகாதார காப்பீட்டு திட்டத்தை நடைமுறைபடுத்த இயக்குனர் உத்தரவிட்டுள்ளதையடுத்து ரூ.25/- ஆக இருந்த மருத்துவ காப்பீட்டுக்கான மாதசந்தா ஜூன் 2012 முதல் ரூ.75/- ஆக பிடிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அதேபோல் இத்திட்டத்திற்கான உச்சவரம்பு ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் பழைய திட்டத்தில் இருந்த குறைபாடுகள் நீக்கி புதிய சிகிச்சைகள் மேற்கொள்ளவும் இத்திட்டத்தின் மூலம் அரசு உததரவிட்டுள்ளது.

Group 4 - GK Study Materiel avail

தள்ளாடும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம்


திருநெல்வேலி: தனியார் பள்ளிகளில் ஏழை குழந்தைகளுக்கு 25 சதவீத ஒதுக்கீடு "கானல் நீராகவே" இருந்து வருவதால் கட்டாய கல்வி உரிமை சட்டம் "தள்ளாடி" வருகிறது.

பேராசிரியர் ஆகவேண்டுமெனில் 15 நாள் பயிற்சி கட்டாயம்!


         டெல்லி: கல்லூரி ஆசிரியர்களாகப் பணியாற்ற உள்ளவர்கள், பல்கலைக்கழக மான்யக்குழு சார்பில் நடத்தப்படும், 15 நாள் பயிற்சியில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
பல்கலைக்கழக மானியக்குழு கூட்டம், கடந்த சில தினங்களுக்கு முன் டில்லியில் நடைபெற்றது. இதில், நாட்டில் உயர் கல்வி பெறும் மாணவர்களின் எண்ணிக்கையை, 15 சதவீதத்தில் இருந்து, 25 சதவீதமாக உயர்த்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. இதுதவிர, உயர்கல்வி பெறும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, தரமான கல்வி வழங்குவது, ஆசிரியர்களின் திறனை மேம்படுத்துவது குறித்து, ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

HSS HM Promotion counselling place Change to Egmore

மேல்நிலைப்பள்ளி தலைமை அசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு இடம் மட்டும் மாற்றம் :அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை அசிரியர்களின், 2012ம் ஆண்டிற்கான பதவி உயர்வு கலந்தாய்வு 23.06.2012 அன்று சென்னை, அசோக்நகர், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. நிர்வாக காரணத்தினால், கலந்தாய்விற்கான இடம் மட்டும் மாற்றம் செய்யப்பட்டு அன்றைய தினமே (23.06.2012) காலை 10.00 மணி அளவில் சென்னை-8, எழும்பூர், மாகாண மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது என பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார்.

அரசு உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பட்டியலை தற்காலிகமாக நிறுத்தி வைத்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.



         மதுரை ஆலங்குளத்தை சேர்ந்த திருவாசகமணி, ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிகிறேன். 2012& 2013ம் ஆண்டிற்கான உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணி மூப்பு பட்டியலை தயாரிக்க மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 20ம் தேதி பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவிட்டார். அதில், மொழி ஆசிரியர்களில் அரசு பள்ளியில் 2001 டிசம்பர் 31க்கு முன்பு பணிக்கு சேர்ந்து, 2001 டிசம்பர் 31க்கு முன்பு பிஎட் அல்லது பிடி முடித்தவர்களின் பெயர்களை மட்டுமே தலைமை ஆசிரியர் பணி மூப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. தற்காலிக பணி மூப்பு பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், 2009ம் ஆண்டில் பிஎட் முடித்ததால் எனது பெயரை பணி மூப்பு பட்டியலில் சேர்க்கவில்லை.

எனக்கு பிறகு ஆசிரியர் பணியில் சேர்ந்த பலரது பெயர்கள், பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தது. 2001 டிசம்பர் 31க்கு முன்பு பிஎட் முடித்தவர்கள் பெயர்களை மட்டும் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற நிபந்தனை சட்டவிரோதம் என அறிவித்து, என் பெயரை பட்டியலில் சேர்க்க உத்தரவிட வேண்டும். தற்காலிக பணி மூப்பு பட்டியல் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கவும், இறுதி பட்டியல் வெளியிடவும் தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
மனுவை ஜி.எம்.அக்பர்அலி விசாரித்தார். மனுவை விசாரித்த நீதிபதி, அரசு உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பட்டியலை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டார். மனுவுக்கு 2 வாரத்தில் பதிலளிக்க பள்ளி கல்வி இயக்குனர், மதுரை முதன்மை கல்வி அதிகாரி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

பள்ளி மாணவர்களுக்கு நவீன பஸ் பாஸ்: தமிழக அரசு திட்டம்.


பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு - பஸ் பாஸ் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

தொடக்கக் கல்வி - தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுபாட்டில் உள்ள மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் உதவி / கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக்கல்வி இயக்குநர் சில அறிவுரைகளை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.


2012 - 2013ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி மாணவர்கள் சேர்க்கை நடைபெறுவதாலும் விலையில்லா பாடநூல், விலையில்லா சீருடை, விலையில்லா காலணிகள், விலையில்லா புத்தகப்பை போன்ற அரசின் நலத்திட்டங்களை பள்ளிகளில் செயல்படுத்த இருப்பதாலும் மேற்கண்ட அரசின் நலத்திட்டங்களை பள்ளிகளில் செயல்படுத்தப்பட்ட விவரம் தொடக்கக் கல்வி இயக்குநருக்கு உடனுக்குடன் தகவல் அளிக்க வேண்டிய அவசியம் இருப்பதால்
அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் உதவி / கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள்  அனைவரும் எந்தவித முன்னறிவிப்பின்றி விடுப்பு எடுத்தல் கூடாது எனவும் தலைமையிடத்தைவிட்டு வேறு இடங்களுக்கு செல்லும் முன்பு இயக்குநரிடம் தகவல் அளிக்காமல் செல்லக்கூடாது எனவும், CUG கைபேசியை எந்நேரமும் இயக்குனர் அவர்கள் தொடர்பு கொள்ளும் நிலையில் வைத்திருக்க வேண்டும் என  தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

10ம் வகுப்பு உடனடித்தேர்வு - தத்கால் திட்டத்தில் 13ம் தேதி முதல், 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்


பத்தாம் வகுப்பு உடனடி தேர்வுக்கு, "தத்கால்" திட்டத்தின் கீழ், 13ம் தேதி முதல், 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive