NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தேர்வுத்துறை இணை இயக்குனர் பணியிடம் காலி


            தேர்வுத்துறை இணை இயக்குனர் (மேல்நிலைக் கல்வி) பணியிடத்தை நிரப்பாமல், வழக்கம் போல், கூடுதல் பொறுப்பில், பணியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
 
 

தமிழகமெங்கும் பொறியியல், கலை அறிவியல் கல்லூரிகள் இன்று திறப்பு

 

               இலங்கை அதிபர் ராஜபக்ஷேவிற்கு எதிராகவும், இலங்கை தமிழர்களை காக்க வலியுறுத்தியும் மாணவர் கூட்டமைப்பினர் மாநிலம் முழுவதிலும் பல்வேறு போராட்டங்கள் நடத்தியதால் காலவரையின்றி மூடப்பட்ட கல்லூரிகள் இன்று முதல் திறக்கப்படுகிறது.
 
 

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ஆங்கில வழிக்கல்வித் திட்டம்?

 
      அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகப்படுத்த, ஆங்கில வழிக் கல்வியை போதிக்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது; ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் "ஆங்கில வழிக்கல்வி" துவங்கும் திட்டம், அரசின் பரிசீலனையில் உள்ளது.
 
 

மதுரைக்கு ஒரு லட்சம் பிளஸ் 2 விடைத்தாள்கள்: தவறு ஏற்படும் அச்சத்தில் ஆசிரியர்கள்


            மதுரை மாவட்டத்திற்கு ஒரு லட்சம் பிளஸ் 2 ஆங்கில விடைத்தாள்கள், திருத்தும் பணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், ஆசிரியர்கள் திணறுகின்றனர். இதனால், மறுமதிப்பீட்டின் போது அதிக "தவறு" ஏற்பட வாய்ப்புள்ளதாக, அச்சம் தெரிவித்துள்ளனர்.
 
 

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 04.04.2013 அன்று மாவட்ட தலைநகரங்களில் நடைபெற உள்ள ஆர்பாட்டத்தில் எந்தவித அசாம்பவித சம்பவம் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு.


              ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் ஊதிய பிரச்சனைகள் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 04.04.2013 அன்று மாவட்ட தலைநகரங்களில் நடைபெறவுள்ள ஆர்பாட்டத்தில் எந்தவித அசாம்பவித சம்பவம் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
 
 

நோய் அல்ல குறைபாடு: இன்று உலக ஆட்டிசம் தினம்


              ஆட்டிசம் என்பது, குழந்தையின் மூளையிலுள்ள நரம்பு மண்டலத்தில் ஏற்படும் வளர்ச்சிக் குறைபாடு. இது பற்றி பெரும்பாலான பெற்றோர்கள் கண்டு கொண்டாலும், சரியான நேரத்தில் டாக்டரை அணுகுவதில்லை.
 
               இக்குறைபாடு உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, ஏப்., 2ம் தேதி உலக ஆட்டிச விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு இலவச பயிற்சி: குவியும் ஆசிரியர்கள்


                திருவள்ளூர் மாவட்டம் அம்மையார்குப்பம் பகுதி மங்கலங்கிழார் பயிற்சி மையத்தில், ஆசிரியர்கள் ஒன்றிணைந்து ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு, இலவச பயிற்சி அளிப்பதால், பயிற்சி பெற வரும் ஆசிரியர்கள் எண்ணிக்கை, நாளுக்கு அதிகரித்து வருகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8% அகவிலைப்படி உயர்வு : மத்திய அமைச்சகம் அனுமதி


               மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 72 சதவீதத்தில் இருந்து 80 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
 
 

அரசு ஊழியர்கள் பணிப்பதிவேடுகளை மின்னணு குறிப்புகளாக மாற்ற உத்தரவு


              சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கொள்கை விளக்க குறிப்பில் இடம் பெற்றுள்ள விவரம் வருமாறு: பணியாளர்கள் பெற்ற சலுகைகள் மற்றும் பயன்களை கண்காணிக்கும் வகையில் அனைத்து பணியாளர்களின் பணிப்பதிவேடுகளில்
உள்ள பதிவுகள் கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் வகையில் மின்னணு குறிப்புகளாக மாற்றி பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. 
 

விடைத்தாள் சேதத்துக்கு ரயில்வே பொறுப்பில்லை": பி.ஆர்.ஓ., விளக்கம்


              "பத்தாம் வகுப்பு விடைத்தாள் பண்டல், ரயிலிலிருந்து விழுந்ததுக்கு ரயில்வே துறை காரணமில்லை" என, திருச்சி கோட்ட ரயில்வே மக்கள் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
 

ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளுக்கு தனி குடிநீர் திட்டம்


          ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளுக்கு தனியாக குடிநீர் திட்டம் செயல்படுத்த அரசு முடிவு செய்து நிதி ஒதுக்கியுள்ளது.
 
 

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.


                CPS தொடர்பாக "CITU" தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி இடைக்கால உத்தரவிட்டுள்ளது. அவ்வுத்தரவில் இறந்தவருக்கு எந்த மாதிரியான செட்டில்மென்ட் என்பதை இரண்டு வாரத்திக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும், அதுவரை புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் மனுதாரர் கட்டிய சந்தாவை பங்கு சந்தையில் மூதலீடு செய்ய கூடாது எனவும், இறந்தவரின் பங்களிப்பு தொகையினை வட்டி தரக்கூடிய வைப்பு நிதியாக வைக்க உயர்நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
 
 

பிளஸ் 2 இயற்பியல் தேர்வு: 62வது வினாவுக்கு முழு மதிபெண்


            பிளஸ் 2 இயற்பியல் தேர்வில், மாணவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்திய, வினா எண், 62ற்கு, முழு மதிப்பெண் வழங்க அரசு உத்தரவிட்டு உள்ளது.
 
 

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஜனவரி 2013 முதல் 8% அகவிலைப்படி உயர்வு, இன்று ஒப்புதல் கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.


                 மத்திய அரசு ஊழியர்களுக்கான ஜனவரி 2013 முதல்  8% அகவிலைப்படி உயர்வு, இன்று ஏப்ரல் 2ந் தேதி நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் கிடைக்கும் என்றும், இதற்கான முடிவு எடுக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த அறிவிப்பால் சுமார் 50 லட்சம் அரசு ஊழியர்கள், 30 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு தற்போதுள்ள விலைவாசி உயர்வை சமாளிக்க உதவியாக இருக்கும்.
 

ஆங்கில மொழியைத் இணையத்தில் தெளிவாக கற்க


              ஆங்கில மொழி அறிவைப் பெருக்கிக் கொள்ளும் ஆர்வம் இன்று அனைவரிடையேயும் உள்ளது. சாப்ட் ஸ்கில் என்று சொல்லப்படும் மொழி திறனாற்றல் அனைத்து நிலைகளிலும் வேண்டப்படுகிறது.
 

கருகும் தாவரம் - தாவரவியல் பட்டதாரிகளின் கண்ணீர் கதை.


"கருகும் தாவரம்"
- தாவரவியல் பட்டதாரிகளின் கண்ணீர் கதை.

       முதுகலை தாவரவியல் பட்டதாரிகளின் பணிநியமனம் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் தாவரவியல் பட்டதாரிகள் கண்ணீர் சிந்தி வருகின்றனர்.

இவர்களின் கண்ணீர் கதை பற்றி சற்று விரிவாக பார்ப்போம்.

         கல்லூாரியில் சேரும் போதே பி.ஏ போன்ற மற்ற பட்டங்களை விட பி.எஸ்.சி போன்ற பட்டங்களில் சேர கடும் போட்டி அதிகம். மேலும் படிப்பு கட்டணமும் அதிகம். மூன்று வருடங்கள் முடிக்கும் போது அரியர் இல்லாமல் தேர்ச்சி பெற்று வருவதே மிகவும் கடினம். அதிலும் 80 சதவீதத்திற்கு மேல் இருந்தால் தான் அரசு பி.எட். கல்லூரிகளில் சேர வாய்ப்பு கிடைக்கும். இல்லையேல் தனியார் பி.எட் கல்லூரிகளில் சேர கட்டணமும் அதிகம், நன்கொடை வேறு.

DEPT EXAM COLLECTIONS - REMINDER


DEPARTMENT EXAM COLLECTION ALWAYS AVAILABLE OUR SITE IN TOP SIDE TAB "துறை தேர்வு "





Bulletins   

Click Here 4 More Collection - "துறை தேர்வு "



10ம் வகுப்பு விடைத்தாள் நாசம்: ரயில்வே மீது வழக்கு


        "பத்தாம் வகுப்பு விடைத் தாள்களை தவறவிட்ட, ரயில்வே நிர்வாகம் மீது வழக்கு தொடரப்படும்" என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வைகைச்செல்வன் கூறினார்.

சி.ஏ., - சி.டபிள்யூ.ஏ., - சி.எஸ்., பட்டங்கள்: டில்லி மாணவி சாதனை


        டில்லியைச் சேர்ந்த மாணவி, 23 வயதிலேயே, சி.ஏ., - சி.எஸ்., - சி.டபிள்யூ.ஏ., என, கணக்கியல் தொடர்பான, மூன்று பட்டங்களில், தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.


தமிழகத்தில் உள்ள பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் வருகிற 3 ந்தேதி திறக்கபடும்


          இலங்கை அரசை கண்டித்து தமிழகம் முழுவது மானவ்ர்கள் போரட்டத்தில் ஈடுபடனர். இதை தொடர்ந்து கலை மற்றும் அறிவியல், பொறியியல் கல்லூரிகளுக்கு தமிழக அரசு விடுமுறை அளித்தது. இந்த நிலையில் பொறியியல், கலை  மற்றும் அறிவியல் கல்லூரிகள்  கல்லூரிகள் அனைத்தும் வருகிற 3 ந்தேதி திறக்கப்படும் என அறிவிக்கபட்டு உள்ளது.  

ஏப்ரல் -1 முட்டாள் தினமாக உருவான கதை!


          ஏப்ரல்-1... உலகம் முழுக்க முட்டாள்களின் தினமாகக் கொண்டாடுகிறார்கள். நாளை (திங்கட்கிழமை) காலையிலேயே உங்களை ஏதாவது சொல்லி ஏமாற்றப்பார்ப்பார்கள். சிலர் சொல்லும் டுபாக்கூர் தகவல்கள் 100 சதவீதம் அப்படியே உண்மை தான் என்று நம்பும்படி இருக்கும். எனவே நம்பி, ஏமாந்து விடாதீர்கள்.
 

அடிப்படை வசதிகள் இல்லாத அரசு உதவி பெறும் பள்ளிகள்


           அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி என மூன்று வகையாக பள்ளிகள் செயல்படுகிறது. அரசு பள்ளிகளுக்கு அரசு அனைத்து விதமான கட்டுமான வசதி, அடிப்படை வசதிகளை செய்கிறது.


பிள்ளைகளுக்கு ஆங்கிலம் கற்று கொடுங்கள்: சசி தரூர் "அட்வைஸ்"


          "இன்றைய நவீன உலகில், வெற்றி பெற வேண்டுமானால், ஆங்கிலம் படிப்பது மிகவும் அவசியம். இளம் தலைமுறைக்கு, ஆங்கிலம் கற்றுக் கொடுக்கவில்லை என்றால், அவர்களின் எதிர்காலம், பாதிக்கப்படும்" என, மத்திய மனிதவளத் துறை இணை அமைச்சர், சசி தரூர் கூறியுள்ளார்.

பள்ளிகளில் அடிப்படை வசதி அரசு காலக்கெடு இன்று முடிவு : 1000 பள்ளிகள் கதி என்ன?


      பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கான காலக்கெடு இன்று 31ம் தேதியுடன் முடிகிறது.  
 

கல்விக்கு நிதி சேகரிக்க செருப்புகளுக்கு பாலிஷ் போடும் பேராசிரியர்


         அனாதை குழந்தைகளின் படிப்புக்கு உதவுவதற்காக, கல்லூரி பேராசிரியர் ஒருவர், ஊர் ஊராக சென்று, பொது மக்களின் ஷூ, செருப்புகளுக்கு பாலிஷ் போட்டு நன்கொடை சேகரிக்கிறார்.


நாளை சட்டசபை கூட்டம் : மானிய கோரிக்கைகள் மீது விவாதம் ஆரம்பம் ,10ம் தேதி பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கை


              தமிழக அரசின் 20132014ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த 21ம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து 25ம் தேதி முதல் 28ம் தேதி வரை 4 நாட்கள் சட்டசபையில் பொது விவாதம் நடந்தது. பட்ஜெட் மீது நடந்த விவாதத்திற்கு நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 28ம் தேதி பதில் அளித்தார். இதையடுத்து சட்டசபை கூட்டத்தை ஏப்ரல் 1ம் தேதிக்கு சபாநாயகர் தனபால் தள்ளிவைத்தார்.

PAN CARD என்றால் என்ன? அதன் முக்கியதுவம் என்ன?



நிரந்தர கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு 

(Permanent Account Number-PAN) 

 
         நம்மில் பலரிடமும் உள்ளது ஆனால், பலருக்கும் இதன் முக்கியத்துவம் பற்றி தெரிவதில்லை. பான் கார்டு பற்றிய விரிவான தகவல்களும் அதனுடைய விளக்கங்களும் பற்றி பார்போம்.
1. PAN CARD என்றால் என்ன?
Permanent Account Number என்பதின் சுருக்கமே.



தற்செயல் விடுப்பு விதிகள் தற்செயல் விடுப்பு



1. ஒரு ஆண்டிற்கு 12 நாட்கள் தற்செயல் விடுப்பு வழங்கப்படும். ஒரே நேரத்தில் பத்து நாட்கள் தனியாகவோ, அரசு விடுமுறை அல்லது ஈடு செய்யும் விடுப்பு முதலியவற்றுடன் சேர்த்தோ அனுபவிக்கலாம்.


உலகசாதனையை முறியடித்த மாற்றுத்திறனாளி மாணவர் : உதவிகளை நாடி காத்திருப்பு



          எறும்புக்கும் வாழ்க்கையுள்ள இந்த உலகில் சாதிக்க ... ஊனம் ஒரு தடையே அல்ல... தன்னம்பிக்கையை இழந்தவர்கள் ஜெயிப்பது இல்லை...  ஜெயிப்பவர்கள் தன்னம்பிக்கையை இழப்பது இல்லை... பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற ஜெர்மனி வீரரின் சாதனையை முறியடித்துள்ளார் சேலத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரர் மாரியப்பன்... சேலம் மாவட்டம் பெரிய வடகம்பட்டியைச் சேர்ந்த இந்த மாணவரின் பெயர் மாரியப்பன். 
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive