NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

விடுமுறை நாளில் தேர்தல் வகுப்பு: ஆசிரியர்கள் விரக்தி...


           ஆசிரியர்களுக்கு, விடுமுறை நாட்களில், தேர்தல் வகுப்பு நடத்துவதால், ஆசிரியர்கள் விரக்தியில் உள்ளனர். தமிழகத்தில், ஏப்ரல், 24ம் தேதி லோக்சபா தேர்தல் நடக்கிறது.
 

10th Standard March 2014 Exam Expected Key Answer

SSLC | March - 2014 | Expected Key Answers 
(Today Completed Exam)

Prepared by 
Mr. S. Gopinath, Graduate Teacher in English, GBHSS Valappady, Salem

காலியாக உள்ள பணியிடங்கள்

             காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் குறித்த விவரங்களை சமர்பிக்க அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

Flash News: சுனாமி எச்சரிக்கை- சிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்:ரிக்டர் அலகில் 8.2 ஆக பதிவு.

         சிலியின் வடக்கு கடற்கரை பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அலகில் 8.2 ஆக இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது.

வருமானவரி விலக்கு உச்சவரம்பை ரூ.3 லட்சமாக உயர்த்த மத்திய அரசு மறுப்பு மூத்த குடிமக்களுக்கு புதிய சலுகை.

           வருமானவரி விலக்கு உச்சவரம்பை ரூ.3 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற பாராளுமன்ற நிலைக்குழுவின் சிபாரிசை மத்திய அரசு நிராகரித்துவிட்டது.

பிளஸ் 2 கணக்கு தேர்வு: 8 மார்க் போனஸ்-தமிழக அரசு உத்தரவு.

           பிளஸ் 2 கணித தேர்வில் வினாத்தாள் அச்சுப்பிழை காரணமாக தமிழ்வழி மாணவர்களுக்கு 8 மார்க்கும், ஆங்கிலவழி மாணவர்களுக்கு 7 மார்க்கும் போனஸாக வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

டி.இ.டி., 2 சான்றிதழ் சரிபார்ப்பு தள்ளி வைப்பு.


       ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,), இரண்டாம் தாளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, இம்மாத இறுதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.டி.இ.டி., தேர்வில்,  தேர்ச்சி பெறுவதற்கான தகுதி மதிப்பெண் அளவை, இட ஒதுக்கீடுபிரிவினருக்கு, 60 சதவீதத்தில் இருந்து, 55 சதவீதமாக குறைத்து, முதல்வர் அறிவித்திருந்தார்.

10-ஆம் வகுப்பு ஆங்கிலம் முதல் தாள் தேர்வு: வினாத்தாளில் படம் தெளிவாக இல்லை: மாணவர்கள் புகார்


              பத்தாம் வகுப்பு ஆங்கிலம் முதல் தாள் தேர்வு வினாத்தாளில் இடம்பெற்றிருந்த 5 மதிப்பெண் கேள்விக்குரிய படம் தெளிவாக இல்லை என மாணவர்களும் ஆசிரியர்களும் புகார் தெரிவித்தனர்.ஆங்கிலம் முதல் தாள் தேர்வு வினா எண் 53-இல் படத்தைப் பார்த்து கேள்விகளுக்கு விடையளிக்கும் பகுதி உள்ளது.

வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் அமைவிட அலுவலர்களுக்கு 2013-2014 க்கான உழைப்பூதியம்:

         BLO எனப்படும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு தலா ரூ.3000 வீதமும் DLO எனப்படும் வாக்குச்சாவடி அமைவிட அலுவலர்களான தலைமையாசிரியர்களுக்கு தலா ரூ.250 வீதமும் 2013-2014 ஆம் ஆண்டுக்கான உழைப்பூதியமாக ஈரோடு மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.

ஆங்கிலம் முதல் தாள்; அவுட் ஆப் போர்ஷன்' கேள்விகள் எதுவும் வரவில்லை

           பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச் 26ல் துவங்கியது; நேற்று, ஆங்கிலம் முதல் தாள் தேர்வு நடந்தது.தேர்வெழுதிய பின், மாணவ, மாணவியர் கூறியதாவது:எல்லா கேள்விகளும் "ஈஸி'யாக இருந்தன. அதிக முறை படித்த கேள்விகளே வந்திருந்தன. ஆசிரியர்கள் முக்கிய வினாக்கள்என கூறியிருந்த கேள்விகளே அதிகளவில் கேட்கப்பட்டிருந்தன. 
 

எல்.கே.ஜி., புத்தகத்தில் 'சூரியன்': நீக்கக் கோரி ஐகோர்ட்டில் வழக்கு

           எல்.கே.ஜி., புத்தகத்தில் இடம் பெற்றுள்ள, சூரியன் படத்தை, நீக்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விசாரணை, நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

SSC: மத்திய ஆயுத போலீஸ் படையில் 2,197 பேருக்கு சப்-இன்ஸ்பெக்டர் வேலை!

         மத்திய ஆயுத போலீஸ் படையின் கீழ் இயங்கி வரும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை, எல்லை பாதுகாப்புப் படை, இந்தோ - திபெத்திய எல்லை போலீஸ் படை, மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை, சஷாஸ்த்ரா சீமா பால் ஆகிய பிரிவுகளில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
 

ஆசிரியர்களை கல்வி ஆண்டு முடியும் வரை பணி செய்ய அனுமதிக்க வேண்டும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


          கல்வி ஆண்டின் இடைப்பட்ட காலத்தில் ஓய்வு பெறும் ஆசிரியர்களை கல்வி ஆண்டு முடியும் வரை பணி செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
 

JEE - MAIN எழுத்துத் தேர்வு: நுழைவுச்சீட்டு


           மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு நடத்தப்படும் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வுக்கான (ஜே.இ.இ.-மெயின்) நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ள தேர்வர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
 

10ம் வகுப்பு ஆங்கில தேர்வில் 5 மார்க் கேள்வி குழப்பம்.

           பத்தாம் வகுப்பு ஆங்கிலம் முதல் தாள் தேர்வுக்கான கேள்வித்தாளில் இடம் பெற்ற ஒரு கேள்வி தெளிவாக இல்லை என்பதால் மாணவர்கள் பதில் எழுத திணறினர்.
 

12th Standard - March 2014 Exam | Official Key Answers

Thanks to Our Padasalai Readers...

March - 2014 Exam | Official Key Answers

பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 2014 விடைகுறிப்புகள் (ALL SUBJECTS)


நவோதயா பள்ளிக்கூடங்களை கொண்டு வர தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி எதிர்ப்பு

 
            அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் சு.ஈஸ்வரன் நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு தொடக்கப்பள்ளிக் கூடங்களை மூடிவிட்டு நவோதயா பள்ளிக்கூடங்களை கொண்டு வர திட்டமிட்டு உள்ளது. அதற்கு ஆசிரியர் கூட்டணி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
 

ஊழியர்களின் ஓய்வு வயதை 60-ஆக உயர்த்தக் கோரி வழக்கு

 
           சென்னை ஐகோர்ட்டில், கோவையை சேர்ந்த ஆர்.பாலகிருஷ்ணன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: பாரதியார் பல்கலைக்கழகத்தில், 1987-ம் ஆண்டு இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்தேன். பின்னர், படிப்படியாக பதவி உயர்வுப் பெற்று, கடந்த 2013-ம் ஆண்டு பிரிவு அதிகாரியாக நியமிக்கப்பட்டேன். எனக்கு 2014-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி (நேற்று) 58 வயது பூர்த்தியாவதால், அன்று பணியில் இருந்து ஓய்வு பெற பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

10 ஆம் வகுப்பு: ஆங்கிலம் முதல் தாள் மாணவர்கள் எப்படி எழுதினர்?

             புதிய சிந்தனை இல்லை, அலங்கரிப்பு தான் என்கிறார் வேலூர் ஆசிரியை திருமதி. விஜயலட்சுமி ராஜா

தேர்தல் பணி - சில முக்கியக் குறிப்புகள்

 
       தேர்தல் பணி என்னும் மரியாதை மிக்க தேசியப் பணியில் ஈடுபட இருக்கும் ஆசிரியர்களுக்கும் அலுவலர்களுக்கும் பணியாளர்களுக்கும் தங்கள் தேர்தல் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

இன்று (1935) ஏப்ரல் 1: ரிசர்வ் வங்கி துவங்கப்பட்ட தினம்

 
          இந்தியாவின் மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி எழுபத்தி ஒன்பது ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது இன்று தான் .சட்ட வல்லுனராக நம்மில் பலரால் அறியப்படுகிற அண்ணல் அம்பேத்கர் தான் இந்த வங்கி உருவாவதற்கு காரணம் என்பது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.
 

ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகள்.


              கலை அறிவியல் கல்லூரிகளில் பி.எஸ்சி. முடித்துவிட்டு வெளியே வரும் மாணவ-மாணவிகள் பி.எட். படிப்பில் சேருவதற்கு முயல்வார்கள். அரசுக் கல்லூரிகளில் சேர விரும்பினாலும் அதற்கு எப்போது விண்ணப்பம் கொடுப்பார்கள்?
 

தமிழகத்தில் தேர்தல் பணியில் 3 லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்...


            தமிழகத்தில் தேர்தல் பணி யில் 3 லட்சம் பேர் ஈடுபடுத்தப் படுவர் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார். இதுதொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
 

பொதுத் தேர்வுக்கான சரியான விடைகள் தயாரிக்க 4 குழுக்கள்

            பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்களை திருத்துவதற்கு, பாட வல்லுனர் குழு, சரியான விடைகளை (கீ - ஆன்சர்) தயாரிக்கும். இந்த விடைகளின் அடிப்படையில் தான், ஆசிரியர் விடைத்தாள்களை திருத்துவர். வழக்கமாக ஒவ்வொரு பாடத்திலும் ஒரு குழு தான் "கீ - ஆன்சரை" தயாரிக்கும்.
 

CEO - பொறுப்பு அலுவலர்களை நியமித்து இயக்குனர் உத்தரவு

         தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி - 4 முதன்மை கல்வி அலுவலர், 7 மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் ஒத்தநிலை அலுவலர்கள் இன்று 31.03.2014 பிற்பகலில் ஒய்வுபெறுவதையொட்டி, பொறுப்பு அலுவலர்களை நியமித்து இயக்குனர் உத்தரவு

 

விடுதி மாணவருக்கு போட்டி தேர்வுக்கு பயிற்சி நடத்தப்படுமா?


            அரசு விடுதிகளில், தங்கி பயிலும் மாணவர்களை, போட்டித்தேர்வுகளுக்கு தயார்படுத்தும் விதமாக, சிறப்பு வகுப்புகளை ஏற்பாடு செய்ய வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.
 

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு தள்ளி வைப்பு.


           சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வில், 30 பாட தேர்வுகள், லோக்சபா தேர்தல் காரணமாக, இம்மாதம் இறுதிக்கு, தள்ளிவைக்கப்பட்டு உள்ளன.
 

ஓட்டு போட்ட சின்னம் அச்சாவதை பார்க்கும் வசதி : மத்திய சென்னை தொகுதியில் அறிமுகப்படுத்த திட்டம்


          தமிழகத்தில், முதன் முறையாக, சோதனை அடிப்படையில், மத்திய சென்னை தொகுதியில் மட்டும், வாக்காளர்கள் எந்த சின்னத்திற்கு ஓட்டு போட்டோம் என்பதை அறிந்து கொள்ளும் வசதி, ஏற்படுத்தப்பட உள்ளது.
 

பின்தங்கிய மாணவர்களுக்கு மதிப்பீட்டு தேர்வு; இன்று துவக்கம்.


          மாநில அளவில் கற்றலில் பின்தங்கிய ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, மதிப்பீட்டுதேர்வு இன்றும், நாளையும் நடக்கிறது.
 

பிளஸ் 2 தொழிற்கல்வி பாட விடைத்தாள்கள் திருத்தும் பணி: 66 மையங்களுக்கும் விரிவாக்கம்

 
          கடந்த ஆண்டு வரை, பிளஸ் 2, தொழிற்கல்வி பாட விடைத்தாள்கள், ஒரு சில மையங்களில் மட்டும் திருத்தப்பட்டன. இந்த ஆண்டு, 66 மையங்களிலும் திருத்துவதற்கு, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கு, மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகம், வரவேற்பு தெரிவித்துள்ளது.

அங்கீகாரம் ரத்தாகும் பள்ளிகளில் 'அட்மிஷன்?'; ஆய்வு செய்ய ஏ.இ.ஓ.,க்களுக்கு உத்தரவு

 
          நடப்புக் கல்வியாண்டில், அங்கீகாரம் ரத்தாகும் நிலையில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில், அந்தந்த பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ள, உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பொது தேர்வு முடிவை வெளியிடுவதற்கு தேர்தல் தடையாக இருக்காது: தேர்வுத் துறை

 
          பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு, தேர்தல் தடையாக இருக்காது. தேர்வு முடிவு வெளியானதும், முடிவை வெளியிடுவோம்' என, தேர்வுத் துறை வட்டாரம் தெரிவித்தது. பிளஸ் 2 மொழிப்பாட விடைத்தாள்கள் திருத்தி முடிக்கப்பட்டு, ஆங்கில விடைத்தாள்கள் திருத்தும் பணி, நடந்து வருகிறது. இதைத் தொடர்ந்து, இதர விடைத்தாள்கள் திருத்தப்பட உள்ளன.
 

ஆசிரியர் குடும்பங்களின் ஒரு லட்சம் ஓட்டுகள் கட்சிகளுக்கா, நோட்டோவுக்கா?

 
          சம்பள முரண்பாட்டிற்கு தீர்வு காண வலியுறுத்தி, பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும், இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கத்தினரின், குடும்பத்தினர் ஒரு லட்சம் பேர், லோக்சபா தேர்தலில், 'நோட்டா'விற்கு ஓட்டு போட முடிவு செய்துள்ளனர்.

அரசு ஊழியர்கள், தேர்தல் பணிக்கு வராவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை

 
          தேர்தல் பணிக்கு, தேர்வு செய்யப்பட்டுள்ள ஊழியர்கள், பணிக்கு வராவிட்டால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீண்குமார் தெரிவித்தார்.

அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கான ஏப்ரல் 2014க்கான நாட்காட்டி

05/04/2014 - சனிக்கிழமை - வேலை நாள்
12/04/2014 - சனிக்கிழமை - வேலை நாள்
14/04/2014 - திங்கட்கிழமை - தமிழ் புத்தாண்டு விடுமுறை
17/04/2014 - வியாழக்கிழமை - பெரிய வியாழன் - வரையறுக்கப்பட்ட விடுமுறை

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive