NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பட்டதாரி பதவி உயர்வின் போது தனி ஊதியம் அனுமதி அளித்ததற்கான ஆணை

         ஈரோடு மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெரும் போது தனி ஊதியம் PP : 750 வழங்க மறுப்பதாக அறியப்படுகிறது . அவர்களுக்காக பதவி உயர்வின் போது தனி ஊதியம் அனுமதி அளித்ததற்கான ஆணை

21 போலிப் பல்கலைக்கழகங்கள் பட்டியலை வெளியிட்டது யு.ஜி.சி.

        பல்கலைக் கழக மானிய குழு (யு.ஜி.சி.) 21 போலிப் பல்கலைக் கழகங்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது. மாணவர்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கையாக வெளியிடப்பட்ட இந்த 21 பல்கலைக் கழகங்களில் உத்திரப் பிரதேசத்தில் மட்டும் 8 உள்ளது. தலைநகர் டெல்லியில் 6 உள்ளது.

பத்தாம் வகுப்பில் 489 மதிப்பெண் பெற்ற மாணவியை பிளஸ் 1-ல் சேர்க்க மறுத்தது ஏன்?- உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

          பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 489 மதிப்பெண் பெற்ற மாணவியை பிளஸ் 1 வகுப்பில் சேர்க்க உத்தரவிடக்கோரிய மனுவுக்கு பதில் அளிக்குமாறு கல்வித் துறை அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.மதுரை புதூரைச் சேர்ந்த ஏ.கதிரேசன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல்செய்த மேல்முறையீடு மனு:

இரண்டாவது வாரத்திற்குள் கவுன்சிலிங் அனைத்திந்திய ஆசிரியர் பேரவை.

        அனைத்திந்திய ஆசிரிய பேரவை பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து நிறுவன தலைவர் குகானந்தம் கூறியதாவது:""பள்ளிகள் திறந்து மாணவர்கள் சேர்க்கை முடிந்து கற்பித்தல் பணி துவங்கும் இந்த நிலையிலையே ஜூலை 2வது வாரத்திற்குள் , விரும்பும் பள்ளிகளுக்கு மாறுதல் பெற கவுன்சிலிங் நடத்த அரசு ஆவண செய்ய வேண்டும். மாநில துணை நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இவ்வாறு குகானந்தம் தெரிவித்தார்.

ஆசிரியர் பட்டயப்படிப்பில் ஆர்வம் குறைவு:கோவையில் இரு பயிற்சி பள்ளிகள் மூடல்.

        கோவையில், நடப்பு கல்வியாண்டில், ஆசிரியர் பயிற்சி பட்டயப்படிப்பின் மீது ஆர்வம் மாணவர்கள் மத்தியில் குறைந்துள்ளதால், இரண்டு அரசு உதவிபெறும் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மாணவர்கள் சேர்க்கையை நிறுத்திக்கொண்டுள்ளது. 
 

TNPSC GR-2,GR-4 INDIAN POLITICAL COLLECTION

CLICK HERE FOR TNPSC GR-2,GR-4 INDIAN POLITICAL COLLECTION BY SRIRAM COACHING CENTRE, PULIANGUDI

TET வழக்குகள் வரும் ஜூலை 14 ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

        ஆசிரியர் தகுதி தேர்வில் வெயிட்டேஜ் முறையை நீக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. 21.4.15 அன்று விசாரணைக்கு வந்த வழக்கு வேறு வழக்குகள் நிலுவயில் உள்ள காரணத்தினால் TET வழக்கை விசாரிக்க போதிய காலஅவகாசம் 'இல்லாத காரணத்தினாலும்  வழக்கின் இறுதி விசாரணை வரும் ஜூலை 14ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 

எண் மாறாமல் ஃபோன் நிறுவனம் மாறும் வசதி: நாடு முழுவதும் 3ம் தேதி அமலாகிறது

         செல்ஃபோன் எண்ணை மாற்றாமல், சேவை தரும் நிறுவனத்தை மாற்றிக் கொள்ளும் வசதி நாடு முழுவதும் நாளை மறுநாள் விரிவுபடுத்தப்பட உள்ளது. இதை டெல்லியில் தொலைத் தொடர்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

TNPSC Maths Questions Study Material - Self Test 3

         TNPSC Group 2 & Group 4 Exams & TNTET Paper 1 & TNTET Paper 2 (Maths & Science) போன்ற தேர்வுகளில் கணித பாடம் முக்கிய பங்கு வகிக்கிறது. இத்தகைய தேர்வுகளில் தேர்வர்கள் எளிதாக வெற்றி பெற உதவியாக நமது பாடசாலை வலைதளம் ”சுய மதிப்பீடு” தேர்வுகளை தினந்தோறும் வெளியிட உள்ளது. பயன்பெற வாழ்த்துக்கள்!

TNPSC Maths Questions Study Material - Algebra - Self Test 3

இணையதள பிரியர்களுக்கு இனிப்பான செய்தி: பிராட்பேண்ட் வேகத்தை அதிகரிக்க புதிய தொழில் நுட்பம் அறிமுகம்

         பிராட்பேண்ட் வேகத்தை அதிகரிக்க புதிய தொழில் நுட்பம் ஒன்றை சீனாவைச் சேர்ந்த ஹுவாவே தொழில்நுட்ப நிறுவனத்தினர் கண்டறிந்துள்ளனர்.

டிஜிட்டல் இந்தியா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

        டிஜிட்டல் இந்தியா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.அனைத்து கிராமங்களிலும் இணையதள வசதி, கணினி மயம் உள்ளிட்ட அம்சங்களை கொண்ட இத்திட்டத்தை, காணொலி காட்சி மூலம் பிரதமர் தொடங்கி வைக்கவுள்ளார்.

பள்ளி செல்லும் வயதில் பொது இடங்களில் பிச்சை பணம் வசூலில் சிறுவர்களை களம் இறக்கும் கும்பல்

         பொது இடங்களில் சிறுவர், சிறுமியர்களை கொண்டு பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்துபவர்களை கண்காணித்து அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.பள்ளி செல்லும் வயதில், பஸ்ஸ்டாண்ட் மற்றும் கோயில் பகுதிகளில் சுற்றி திரியும் சிறார்களை காணும்போது, பார்ப்போரின் மனம் நெகிழ்கிறது.
 

அரசுப்பள்ளிகளின் அருகே அங்கன்வாடிகள்:ஆசிரியர்கள் கோரிக்கை

          துவக்க நிலை வகுப்புகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கும் வகையில், திருப்பூர் மாவட்டத்தில் அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு அருகிலேயே அங்கன்வாடிகளை அமைக்க, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

வேறு பணிக்கு நியமிக்கக் கூடாது; பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை.

        கற்பித்தல் பணியை தவிர, வேறு பணிகளில் ஆசிரியர்களை நியமிக்கக்கூடாது என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட பொதுக்குழு கூட்டம், கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் நடந்தது.
 

மலைக்கிராம பள்ளி செல்லாத ஆசிரியர்களுக்குநடவடிக்கை எடுக்க கல்வித்துறை உத்தரவு.

       மலைக்கிராம பள்ளிகளுக்கு சரியாக செல்லாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கைஎடுக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.  திண்டுக்கல், நீலகிரி, தர்மபுரி, தேனிஉள்ளிட்ட மாவட்டங்களில் மலைக்கிராம பள்ளிகள் அதிகளவில் உள்ளன.
 

AEEO PANEL-2015: AS ON 31/12/2009

AEEO-PANEL-2015-உதவித்தொடக்க்கக்கல்வி அலுவலர்கள் முன்னுரிமைப்பட்டியல்-2015 உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் பதவிக்கு தகுதி வாய்ந்த நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முன்னுரிமைப்பட்டியல்-AS ON 31/12/2009

*.2015-AEEO PANEL-CLICK HERE TO DOWoNLOAD...

SG to BT Tamil Final Panel Published.

       இடைநிலை/சிறப்பாசிரியர் பதவியிலிருந்து பட்டதாரி தமிழ் ஆசிரியர் பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்தோர் பட்டியல் வெளியிடு

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.: கல்லூரியில் சேர நாளை கடைசி நாள்

      தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். முதல் கட்டக் கலந்தாய்வில் பங்கேற்று சேர்க்கைக் கடிதம் பெற்ற மாணவர்கள் உரிய கல்லூரிகளில் சேர வியாழக்கிழமை (ஜூலை 2) கடைசி நாளாகும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

பள்ளிகளுக்கான ஆசிய தடகளம்: சென்னை மாணவிக்கு வெள்ளிப்பதக்கம்


பள்ளிகளுக்கான ஆசிய தடகளம்: சென்னை மாணவிக்கு வெள்ளிப்பதக்கம்

பள்ளிகளுக்கான 2-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.

Pay Order For 675 PG Posts

PAY ORDER FOR 675 PG ASSISTANT POSTS .FOR GO NO 142,143,157,159,177,183,199,236,228 AND 42

'ஆவரேஜ்' மாணவர்களுக்கு தனியார் பள்ளிகள் 'கல்தா'

           புதிய கல்வி ஆண்டில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில், அதிக தேர்ச்சி காட்ட, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.இதன் ஒரு பகுதியாக, பல பள்ளிகளில், கடந்த கல்வி ஆண்டில், 9ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்பில், சுமாராக படித்த மாணவர்கள், கட்டாயமாக தேர்ச்சி இழப்பு செய்யப்பட்டுள்ளனர்.

கல்லூரிகளில் காலிப் பணியிடங்கள்: நிகழ் கல்வியாண்டுக்குள் நிரப்ப தமிழக அரசுக்கு உத்தரவு

          கல்லூரிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிகழ் கல்வியாண்டுக்குள் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழ்நாடு தனியார் கல்லூரிகளின் (ஒழுங்குமுறை) விதிகள் 1976-இன் படி தனியார், அரசு நிதி உதவி பெறும், சிறுபான்மை அல்லாத கல்விநிறுவனங்களில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் பிரிவு ஆசிரியர், ஆசிரியர் அல்லாத ஊழியர்களை நியமிக்க தனியார் கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவிடக் கோரி பேராசியர் ஐ.இளங்கோவன் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தார்.
 

ஹெல்மெட் அணியாதவர்கள் மீது முதல் கட்டமாக எச்சரிக்கை அடுத்த கட்டமாக நடவடிக்கை

          சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது இன்று (ஜூலை 1–ந் தேதி) முதல் போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க முடிவு செய்திருந்தனர்.
 

அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் பணியிலிருந்து ஓய்வு

       அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் பணியிலிருந்து செவ்வாய்க்கிழமை ஓய்வுபெற்றார்.பள்ளிக் கல்வித் துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய அவர், மாவட்டக் கல்வி அதிகாரி, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி, அரசுத் தேர்வுகள் துறை இணை இயக்குநர், தொடக்கக் கல்வித் துறை இயக்குநர், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர், பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். அரசுத் தேர்வுகள் இயக்குநராக 2013-ஆம் ஆண்டு பொறுப்பேற்றார்.

ஆசிரியர் பயிற்சி டிப்ளமோஇன்று கவுன்சிலிங் துவக்கம்

        ஆசிரியர் பயிற்சி, டிப்ளமோ படிப்புக்கான கவுன்சிலிங், இன்று முதல், 4ம் தேதிவரை நடக்கிறது.தமிழகத்தில், 440 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், 15 ஆயிரம் இடங்கள் உள்ளன. இவற்றில், மாணவர்களை சேர்ப்பதற்கான கவுன்சிலிங், இணையதளம் வழியாக, இன்று துவங்கி, 4ம் தேதி முடிகிறது.

தலைமைச் செயலக ஊழியர்களுக்கு சலுகை விலையில் தலைக்கவசம்

          சென்னையில் தலைமைச் செயலக ஊழியர்களுக்கு சலுகை விலையில் தலைக்கவசம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விற்பனை புதன்கிழமை வரை நடைபெறுகிறது.தமிழகத்தில் இரு சக்கர வாகன ஓட்டிகளும், பின்புறம் அமர்ந்து செல்பவர்களும் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மாணவியை ஆசிரியை அடித்த விவகாரம்: ஒழுங்கு நடவடிக்கைகு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பரிந்துரை

       பாப்பாரப்பட்டியில் பள்ளி மாணவியை அடித்த ஆசிரியை மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாவட்ட கல்வித்துறை சார்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி வள்ளூர் பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவரது மகள் திவிஜா. இவர் பாப்பாரப்பட்டியில் உள்ள அரசு மே ல் நிலைப்பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

TNTET & PGTRB Exam: அக்டோபர் முதல் வாரத்தில் தேர்வுகள் & ஜனவரி 2016 க்குள் புதிய நியமனம்?

முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு , ஆசிரியர் தகுதித்தேர்வு மற்றும் சிறப்பாசிரியர்களுக்கான போட்டித்தேர்வு குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ளன என்றும் அக்டோபர் முதல் வாரத்தில் தேர்வுகள் நடைபெறும் என்றும் புதிய நியமனம் அனைத்தும்
ஜனவரி 2016 க்குள் நிறைவடையும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive