NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Updated Version "Padasalai" App Now Available in Google Play Store



                நமது பாடசாலை வலைதளத்தின் புதிய Android App தற்போது Updated Version - ஆக வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் SSLC, Plus TWO, TNTET, PGTRB, TNPSC, GO, RTI, Proceedings  ஆகிய லிங்குகளுக்கு மிக சுலபமாக செல்லலாம். 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இப்புதிய App இருக்கும். டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!

CPS Fund - ஒரு ரூபாய் கூட வழங்காத நிலை

           இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களின் CPS தொகை மற்றும் மாநில அரசு ஊழியர் எண்ணிக்கை RTI -இல் வெளியீடு .தமிழக அரசு PFRDA விடம்-ஒரு ரூபாய் கூட வழங்காத நிலை-RTI NEWS

  1. CPS Fund Details in All India Level - Click Here

தொடக்க கல்வி துறையில் இட மாறுதல்.

             பள்ளிக் கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கவுன்சலிங் தொடர்பான தேதியை பள்ளிக் கல்வித்துறை நேற்று முன்தினம் வெளியிட்டது. 

TNPSC மூலம் நடத்தப்படும் தாய்-சேய் நல அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்; 20-ந் தேதி கடைசி நாள்

        தாய்-சேய் நல அலுவலர் பணியிடம் நிரப்புதல் தொடர்பாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் கூறியதாவது:-

இன்ஜி., வகுப்புகள் இன்று துவக்கம்

         அண்ணா பல்கலை இணைப்புக்கு உட்பட்ட, 550க்கும் மேற்பட்ட இன்ஜி., கல்லுாரிகளின் முதலாம் ஆண்டு வகுப்புகள், இன்று துவங்குகின்றன.அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகள், அரசு இன்ஜி., கல்லுாரிகள், அரசு உதவி பெறும் இன்ஜி., கல்லுாரிகள் மற்றும் தனியார் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு வகுப்புகள் இன்று துவங்குகின்றன. முதுகலை முதலாம் ஆண்டு இன்ஜி., வகுப்புகள், 17ம் தேதி துவங்கும் என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு கூடுதலாக 37,000 மாணவர்கள் சேர்ப்பு

         அரசுப் பள்ளிகளில் இந்தக் கல்வியாண்டில் (2015-16) 6, 9, 11-ஆம் வகுப்புகளில் 37,000 மாணவர்கள் கூடுதலாகச் சேர்ந்துள்ளனர்.இந்த வகுப்புகளில் கடந்த கல்வியாண்டில் (2014- 15) மொத்தமாக 11,03,297 பேர் சேர்ந்துள்ளனர். இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை 11,40,636-ஆக அதிகரித்துள்ளது.ஆறாம் வகுப்பில் 6,462 மாணவர்கள் கூடுதலாகவும், 9-ஆம் வகுப்பில் 7,482 மாணவர்களும், 11-ஆம் வகுப்பில் 23,395 மாணவர்களும் கூடுதலாகச் சேர்ந்துள்ளனர்.

 

யு.ஜி.சி.,க்கு மூடுவிழா? மத்திய அரசு முடிவு

         பல்கலைக் கழக மானியக் குழு எனப்படும், யு.ஜி.சி.,யை கலைத்து விட்டு, தேசிய உயர்கல்வி ஆணையம் என்ற புதிய அமைப்பை ஏற்படுத்தி, நாட்டின் கல்லுாரிகள் மற்றும் உயர்கல்வி மையங்களை கட்டுப்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
 

அரசு இசைப் பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு

          தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப் பள்ளியில் 2015-16 ஆம் கல்வியாண்டில் மாணவர், மாணவிகளை சேர்க்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
 

சார்பு - ஆய்வாளர் பணிக்கு இன்று சான்று சரிபார்ப்பு

           தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றுகள் சரிபார்ப்பு மற்றும் உடற்பயிற்சி பரிசோதனைகள் திங்கள்கிழமை (ஆக.3) தொடங்குகின்றன.தமிழகத்தில் அண்மையில் சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் ஏராளமானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
 

மத்திய அரசு பணியாளர் தேர்வில் மொபைல் போனுக்கு தடை

           மத்திய அரசு பணிகளுக்கான முதல் நிலைத்தேர்வில் கலந்து கொள்வோர், மொபைல் போன், கால்குலேட்டர் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை எடுத்து வர, மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையமான யு.பி.எஸ்.சி., தடை விதித்துள்ளது. 

தங்கம் வழங்கும் திட்டத்தால் புதுப்பலன் கிராமங்களில் பெண் கல்வி அதிகரிப்பு!

          தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், 2011ம் ஆண்டு மே மாதம் துவங்கப்பட்டது. 10ம் வகுப்பு படித்த, ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு, 25 ஆயிரம் ரூபாய் ரொக்கமும்; 4 கிராம் தங்கமும் இலவசமாக வழங்கப்படுகிறது.

ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து அரசு ஊழியர்களின் கோரிக்கைகளும் திராவிட முன்னேற்றக் கழக அரசு அமைந்தவுடன் நிச்சயம் நிறைவேற்றித் தரப்படும்: ஸ்டாலின் உறுதி

      ஆசிரியர்கள் முன் வைத்த அடிப்படைக் கோரிக்கைகளைக் கூட   அ.தி.மு.க. அரசு நிறைவேற்றிக் கொடுக்கவில்லை என்பது மிகவும் துரதிருஷ்டவசமானது. ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோவின் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் இன்று பங்கேற்று துவக்கி வைத்தேன். 15 அம்சக் கோரிக்கைகளை முன் வைத்து ஆசிரியர்கள் போராடி வருகிறார்கள். "அரசு ஊழியர்களுக்கு இணையாக ஆசிரியர்களுக்கு ஊதியம்", "புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வது",

"8ஆம் வகுப்பு வரை நிச்சயம் தேர்ச்சி என்ற கொள்கைக்கு விரைவில் முடிவு'

         பள்ளிகளில் 8ஆம் வகுப்பு வரை மாணவர்களை நிச்சயம் தேர்ச்சி பெற வைக்கும் கொள்கையை மத்திய அரசு விரைவில் முடிவுக்கு கொண்டு வர இருப்பதாக, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் ராம் சங்கர் கட்டேரியா தெரிவித்தார்.இதுதொடர்பாக மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் அவர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

போதை மாணவர்களுக்கு பயிற்சி : அரசு ஆசிரியர்களுக்கு உத்தரவு

        'மது மற்றும் போதைப் பொருட்களை பயன்படுத்தும், மாணவர்களை கண்காணித்து, அவர்கள் அந்தப் பழக்கத்தில் இருந்து மீள பயிற்சி அளிக்க வேண்டும்' என, அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்விஇயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.

135 ஆசிரியர்கள் விருப்ப இடமாற்றம்

         ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலப் பள்ளி ஆசிரியர்களுக்கு நடந்த பொது மாறுதல் கலந்தாய்வில், 135 பேர் விரும்பிய இடத்திற்கு மாறுதல் பெற்றனர். இந்த பொது மாறுதல் கலந்தாய்வு, கடந்த, 29ம் தேதி துவங்கியது. அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலகத்தில், 'ஆன் - லைன்' மூலம் மாறுதல் கோரி விண்ணப்பித்தவர்கள் மட்டும், ஆன் - லைன் கலந்தாய்வில் பங்கேற்க முடியும்.

பி.எட்., மாணவர் சேர்க்கை: ஆக., 7க்குள் அறிவிப்பு

          தமிழகத்தில் உள்ள, 690 கல்வியியல் கல்லூரிகளில் உள்ள, 75 ஆயிரம் இடங்களுக்கான, பி.எட்., - எம்.எட்., படிப்புக்கான, மாணவர் சேர்க்கை அறிவிப்பு, 7ம் தேதிக்குள் வெளியாகும் என, உயர் கல்வித்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.ஆசிரியர் பயிற்சி பட்டப்படிப்பான பி.எட்., - எம்.எட்., - பி.பி.எட்., படிப்புகளுக்கு, நாடு முழுவதும் புதிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என, அனைத்து மாநிலங்களுக்கும், தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சிலான, என்.சி.டி.இ., உத்தரவிட்டுள்ளது.

தனியார் பள்ளிகளுக்கு 'ஆன் - லைன்' வழி அங்கீகாரம்

    ஊழல், அதிகாரிகள் வசூல் வேட்டையைத்தடுக்க, தனியார் பள்ளிகளுக்கு புதிய அங்கீகார பணிகளை, 'ஆன்-லைன்' வழியில் மேற்கொள்ள, பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுஉள்ளது. தமிழகத்தில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் உள்ளன. ஆண்டுதோறும், புதிதாக ஏராளமான தனியார் பள்ளிகள் துவங்கப்படுகின்றன.

மதிப்பெண் சான்றிதழில் பிழைகளை தவிர்க்க திட்டம்

          பிழையின்றி 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்குவதற்காக அவர்களின் பெயர் விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்தை சரிபார்த்து பெற்றோர், ஆசிரியர், தலைமையாசிரியர் கையெழுத்திட வலியுறுத்தப்பட்டுள்ளது. வழக்கமாக மார்ச்சில், ௧௦ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்கள்பள்ளிகளில் இருந்து அதற்கு முந்தைய அக்டோபர், நவம்பரில் சேகரிக்கப்படும். 

New Transfer Applications 2015 - 2016

Transfer Applications 2015 - 2016 (New)
Elementary Education Department (New) 
School Education Department (New) 

New Transfer Norms 2015-16 Published Now.

அரசு கடித எண் 263 நாள்: 28.7.2015

       ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில் ”மூன்றாண்டு பணி முடித்தவர்கள் மட்டும்  கலந்துகொள்ள வேண்டும்” என்பதற்கு பதிலாக ”தற்போது பணிபுரியும் பள்ளியில் ஒரு கல்வியாண்டு பணி முடித்திருந்தாலே கலந்து கொள்ளலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் சென்ற ஆண்டு பதவி உயர்வு பெற்றுச்சென்ற தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களும் இப்பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்” என திருந்திய ஆணை வழங்கப்பட்டுள்ளது.

Latest Downloads
  1. DSE - Transfer Schedule 2015 - 16 [PDF Download] - Click Here 
  2. DSE - Transfer Schedule 2015 - 16 [PDF Download] - Click Here
  3.  
  4. DEE - Transfer Schedule 2015 - 16 [PDF Download] - Click Here
  5. DEE - Transfer Regarding Proceedings - [PDF Download] - Click Here
  6. Letter No: 263 Date: 28.7.2015 | New Transfer Norms 2015-16 [PDF Download] - Click Here

ஆசிரியர்களுக்குஅரசு மிரட்டல்.

           ஜேக்டோ கூட்டு நடவடிக்கை குழு ஆர்ப்பாட்டத்தில், விடுப்பு எடுத்துபங்கேற்றால், நடவடிக்கை எடுக்கப்படும்' என, ஆசிரியர்களுக்கு கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
 

செல்வமகள் சேமிப்பு திட்டத்துக்கு 12 வயது குழந்தைகளும் சேரலாம்: டிச.12 வரை வயது வரம்பு சலுகை

            செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கு தொடங்குவதற்கான வயது வரம்பு சலுகை டிசம்பர் 2-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக சென்னை வடக்கு கோட்ட அஞ்சல்துறை அறிவித்துள்ளது.இதுதொடர்பாக சென்னை வடக்கு கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் கி.ரவீந்திரன் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
 

கர்நாடகா : ஆசிரியர் இடமாற்ற திருத்த மசோதாவுக்கு ஒப்புதல்:5 ஆண்டுகளாக இருந்த விதிமுறை தளர்வு

        ஆசிரிய தம்பதிகளை இடமாற்றம் செய்ய வாய்ப்பளிக்கும், கர்நாடக மாநில சிவில் சேவைகள், ஆசிரியர்கள் இடமாற்ற கட்டுப்படுத்தும் இரண்டாவது திருத்த மசோதாவுக்கு, சட்டசபை, நேற்று ஒப்புதல் அளித்தது.

கல்வி அதிகாரிகள் ஆய்வில் 'இடித்த' கணக்கு - மாணவர்களை கணக்கெடுக்க கல்வித்துறை செயலர் சபீதா உத்தரவு

             சென்னையில் நடந்த அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆய்வுக் கூட்டத்தில் இந்தாண்டு அரசு பள்ளிகள் மொத்த மாணவர்களுக்கும், வழங்கப்பட்ட இலவச நோட்டு, புத்தகங்கள் எண்ணிக்கைக்கும் ஏராளமான வித்தியாசம் இருந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சியுற்றனர். இதனால் ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளிகள் வாரியாக வருகை பதிவேட்டில் பதிவான மாணவர்கள் எண்ணிக்கையை கணக்கெடுக்க கல்வித்துறை செயலர் சபீதா உத்தரவிட்டுள்ளார்.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர் எண்ணிக்கை 86.66 லட்சமாக உயர்வு

           வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 86 லட்சத்து 66 ஆயிரத்து 755 ஆக உயர்ந்துள்ளது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி நிலவரப்படி, பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 84 லட்சத்து 97 ஆயிரத்து 402 ஆக இருந்தது. இப்போது அதன் எண்ணிக்கை 86.66 லட்சமாக அதிகரித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி முதல்முறையாக தாய்சேய் நல அலுவலர் காலி பணியிடம் நிரப்புகிறது 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

         டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசுப்பிரமணியன் கூறியதாவது: தமிழக சுகாதாரத்துறையில் இதுவரை தாய்சேய் நல மருத்துவ அலுவலர் பணியிடங்கள்  நிரப்பட்டு வந்தன. முதல்முறையாக இந்த பணியிடங்களை நிரப்பி தருமாறு  சுகாதாரத்துறை டிஎன்பிஎஸ்சியை கேட்டுக் கொண்டது. இதைத் தொடர்ந்து தாய் சேய்  நல மருத்துவ அலுவலர் பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி முடிவு செய்துள்ளது. 

குரூப் 2 தேர்வு: ஆகஸ்ட் 5-இல் இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு

          குரூப் 2 தேர்வில் தேர்வானவர்களுக்கு இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு, ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: 
 

10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 5 முதல் மதிப்பெண் சான்றிதழ்

           பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வு: விடைத்தாள் நகல்களை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்

          பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வுக்கான விடைத்தாள் நகல்களை சனிக்கிழமை (ஆக.1) முதல் பதிவிறக்கம் செய்யலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

மழலையர் பள்ளிக்கான விதிமுறைகள் பதிலளிக்க நான்கு வாரம் அவகாசம்

            மழலையர் பள்ளிகளுக்கான புதிய விதிமுறைகள் குறித்து பள்ளிகள் தரப்பில் பதிலளிக்க, நான்கு வாரம் அவகாசம் அளித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வழக்கறிஞர் பாலசுப்ரமணியன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'தமிழகத்தில் பல மழலையர் பள்ளிகள், அனுமதியின்றி நடந்து வருகின்றன; அதிக கட்டணம் வசூலிக்கின்றன. அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை மூட வேண்டும்' என, கோரப்பட்டது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive