![]() |
| டாக்டர் முத்துலட்சுமி |
Be the change you want to see.
நீ மாற்றத்தை விரும்பினால், நீயே அதற்கான முன்னோடியாக இரு.
இரண்டொழுக்க பண்புகள் :
1. இயற்கை வளங்கள் கடவுள் நமக்கு அளித்த கொடை.
2. எனவே அவற்றை பேணிப் பாதுகாப்பேன்.
பொன்மொழி :
பொறுமையும் விடாமுயற்சியும் மலையையே புரட்டி விடும் - மகாத்மா காந்தி
பொது அறிவு :
01. மனித ரத்த வகைகளை கண்டுபிடித்தவர் யார்?
02.வீரமாமுனிவரின் இயற்பெயர் என்ன?
English words :
nostril - nose passage மூக்குத் துளை;
odorous - sweet smelling நறுமணம்
Grammar Tips:
அறிவியல் களஞ்சியம் :
ஒவ்வொரு எறும்பின் காலனியில் முகப்பில் இருக்கும் காவலாளி எறும்பு, அங்கே வரும் ஒவ்வொரு எறும்பையும் முகர்ந்து பார்த்துவிட்டு, அது தனது குழுவைச் சார்ந்ததா என்று உறுதி செய்த பிறகே, உள்ளே செல்ல அனுமதிக்கும். எறும்புகள் நகர்ந்து செல்லும்போது சில நேரம் ஆண்டெனாவை, மற்றொரு எறும்பின் தலையில் வைத்து, தங்கள் கூட்டத்தைச் சேர்ந்தது தானா என்று பரிசோதிக்கும்.
ஜூலை 30
நீதிக்கதை
புள்ளிமான்கள்
ஒரு காட்டில் இரண்டு புள்ளி மான்கள் ஒரே மாதிரியாக இருந்தன. இணைப்பிரியாத நண்பர்களாக இருந்தன. எங்கு சென்றாலும் சேர்ந்தேதான் செல்லும். ஒரு நாள் மழை பெய்தது. மான்களால் விளையாட முடியவில்லை. மழை நின்ற பிறகு வெளியே சென்று இன்னும் மழை வருமா என்று இரண்டு மான்களும் மேலே பார்த்தன. அப்போது மேகத்திற்குள்ளிருந்து வெளியே வந்தது சூரியன். மான்கள் இரண்டும் சூரியனிடம், இன்னும் மழை வருமா? என்று கேட்டன. அதற்கு சூரியன், நான் வந்து விட்டேனே, இனி எப்படி மழை வரும்? என்று சொல்லி மான்களைப் பார்த்து சிரித்தது.
எங்களைப் பார்த்து ஏன் சிரிக்கிறாய் என்றது ஒரு மான். நீங்கள் இருவரும் ஒரே மாதிரியாக இருக்கிறீர்கள்! அது தான் எனக்குச் சிரிப்பு வந்து விட்டது! தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள். நீங்கள் யார்? "நாங்கள் தான் அழகான இரண்டு புள்ளிமான்கள். நாங்கள் இருவரும் நண்பர்கள்" என்றன புள்ளிமான்கள்.
'சரி, உங்களில் யார் திறமையானவர்கள்?' என்று கேட்டது சூரியன்.
'நாங்கள் இருவருமே திறமையானவர்கள் தான்!' என்றன புள்ளிமான்கள்.
சூரியன் சற்று யோசித்துவிட்டு சரி, அப்படியென்றால் நான் ஒரு போட்டி வைக்கிறேன். அதோ அங்கு ஒரு மரம் இருக்கிறது பாருங்கள். உங்களில் அந்த மரத்தை யார் முதலில் தொடுகிறார்களோ அவர்கள் தான் திறமையானவர்கள். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நான் ஒரு பரிசு தருவேன் என்றது.
சூரியன் பரிசு தருவதாகச் சொன்னதும் இரண்டு மான்களும் ஓடத்தொடங்கின. ஆனால் மரத்தைத் தொடாமல் நின்று கொண்டிருந்தன.
சூரியன் ’ஏன் மரத்தைத் தொடாமல் அப்படியே நின்று கொண்டிருக்கிறீர்கள்?’ என்று கேட்டது.
ஒரு புள்ளி மான் சொன்னது, ”நான் என் நண்பனுக்கு விட்டுக்கொடுத்து விட்டேன்” என்றது.
இன்னொரு புள்ளிமானும், ”நானும் என் நண்பனுக்கு விட்டுக்கொடுத்து விட்டேன்” என்று சொன்னது.
இன்றைய செய்திகள்







.jpg)
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...