அதன்படி, நடப்பாண்டு கலந்தாய்வில் பங்கேற்க 3.02 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் 2 லட்சத்து 41 ஆயிரத்து 641 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றனர். இவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த ஜூன் 27-ம் தேதி வெளியானது. பொறியியல் படிப்புகளுக்காக கலந்தாய்வு கடந்த ஜூலை 7-ந்தேதி தொடங்கியது.
தற்போது பொதுப்பிரிவு கலந்தாய்வு 2-ம் சுற்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவரை மட்டும் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பி.இ., பி.டெக். படிப்புக்கான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், பி.இ., பி.டெக்., முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் வரும் 18-ம் தேதி தொடங்குகிறது. இவர்களுக்கான முதலாம் செமஸ்டர் வகுப்புகள் வரும் டிசம்பர் 10-ம் தேதி முடிவடைகிறது.
முதல் செமஸ்டர் தேர்வுகள் டிசம்பர் மாதம் 16-ம் தேதி தொடங்குகிறது. 2-ம் செமஸ்டருக்கான வகுப்புகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 5-ம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...