Home »
» தடய அறிவியல் பணி: விண்ணப்பிக்க 3 நாளே அவகாசம்
இளநிலை அறிவியல் அதிகாரி பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்னும் மூன்று
நாட்களே அவகாசம் உள்ளது.தமிழக அரசின், தடய அறிவியல் துறையில் காலியாக
உள்ள, 30 இளநிலை தடய அறிவியல் அதிகாரி பணியிடங்கள், நேரடியாக நியமனம்
செய்யப்பட உள்ளன.
இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் குற்றவியலில்,
முதுநிலை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு அரசு பணியாளர்
தேர்வாணையம், அக்., 16ல் எழுத்து தேர்வை நடத்துகிறது. இதற்கு, ஜூலை, 29ம்
தேதி, விண்ணப்ப பதிவு துவங்கியது. வரும், 28ம் தேதியுடன் விண்ணப்பங்களை
பதிவு செய்யும் அவகாசம் முடிகிறது. விடுபட்ட பட்டதாரிகள், மூன்று நாட்களில்
விண்ணப்பிக்க வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...