வாக்குச்சாவடி நிலை அலுவலர் வீடுதோறும் சென்று தற்போதைய வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவத்தினை வழங்கி வருகின்றனர்.
பொதுமக்களின் விண்ணப்பங்களை BLOக்கள் டிசம்பர் 15ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் (SIR) நடைபெற்று வருகின்றன. கடந்த 4ஆம் தேதி தொடங்கிய கணக்கெடுப்பு பணி டிசம்பர் 4ஆம் தேதியுடன் முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
வாக்குச்சாவடி நிலை அலுவலர் வீடுதோறும் சென்று தற்போதைய வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவத்தினை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த படிவத்தை ஒப்படைப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 11ஆம் தேதி வரை நீட்டித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பொதுமக்களின் படிவத்தை BLO-க்கள் டிசம்பர் 15ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 16ஆம் தேதியும் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14ஆம் தேதியும் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...