
சமூக நல இயக்குநரின் கடிதத்தில் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பேரூராட்சியிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 19.06.2026 அன்று மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படாததால், அதற்கு மாற்றாக பிஸ்கட் வழங்கப்பட்டதாக செய்தி வெளியிடப்பட்டது எனவும்,
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், அனைத்து ஊராட்சி ஒன்றிய தொடக்க/நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவியர்கள் சத்தான காலை உணவை உட்கொண்டு வகுப்பினை ஆரோக்கியமாகத் தொடங்குவதையும், ஊட்டச் சத்து குறைபாடு மற்றும் கவனச் சிதறலைத் தவிர்த்து சிறந்த கற்றல் சூழலை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, திட்டத்தின் செயல்பாட்டில் எந்தவித குறைபாடுகளும் ஏற்படாதவாறு கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டியது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுபோன்ற நிகழ்வுகள் மீள ஏற்படாவண்ணம், உணவுப் பொருட்கள் உரிய அளவில் இருப்பதை உறுதி செய்வதுடன், மாணவ, மாணவியர்களுக்கு தினசரி தரமான, போதுமான அளவு உணவு வழங்கப்படுகிறதா என்பதையும், அவர்கள் உணவை முறையாக உட்கொள்கிறார்களா என்பதையும் தொடர்ந்து கண்காணிக்குமாறு தங்கள் துறையின் கீழ் செயல்படும் பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் அறிவுறுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அளவு எனவே, இதுபோன்ற நிகழ்வுகள் மீள ஏற்படாவண்ணம், உணவுப் பொருட்கள் உரிய அளவில் இருப்பதை உறுதி செய்வதுடன், மாணவ, மாணவியர்களுக்கு தினசரி தரமான, போதுமான உணவு வழங்கப்படுகிறதா என்பதையும், அவர்கள் உணவை முறையாக உட்கொள்கிறார்களா என்பதையும் தொடர்ந்து கண்காணிக்குமாறு அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்குமாறு, அனைத்து மாவட்டக் கல்வி (தொடக்கக் கல்வி) அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...