Affection grows where kindness lives.
கருணை இருக்கும் இடத்தில் அன்பு வளரும்.
இரண்டொழுக்க பண்புகள் :
1. மலருக்கு மணம் அவசியம் போல மனிதனுக்கு குணம் முக்கியம்.
2. எனவே மனிதரின் குணங்களை வைத்தே அவர்களை மதிப்பிடுவேன்.
பொன்மொழி :
மது உள்ளே சென்றதும் அறிவு வெளியேறி விடுகிறது மது அருந்தக்கூடாது .- தாமஸ் பேகன்
பொது அறிவு :
1.இயற்பியலில் இரண்டு முறை நோபல் பரிசு வென்றவர் யார்?
ஜான் பார்டீன் -John Bardeen
2.செயற்கை முறையில் இதயத் துடிப்பை உருவாக்க உதவும் சாதனம் எது?
இதயமுடுக்கி -Pacemaker
English words :
Clampdown -crackdown
Stalemate-deadlock
தமிழ் இலக்கணம்:
அறிவியல் களஞ்சியம் :
உலக வெப்பநிலை 1850ல் இருந்து கணக்கிடப்படுகிறது. ஆண்டு சராசரி வெப்பநிலையில் உலகின் வெப்பமான ஆண்டாக 2024 உள்ளது. இது தொழிற்புரட்சிக்கு (1850 - 1900) முந்தைய சராசரி வெப்பநிலையுடன் ஒப்பிடுகையில் 1.55 டிகிரி செல்சியஸ் அதிகம். 2ம் இடத்தில் 2023 (1.48 டிகிரி செல்சியஸ்) இருந்தது. தற்போது 2025 (ஜன., - நவ.,) சராசரி வெப்பநிலை 1.48 டிகிரி செல்சியஸ். இன்னும் ஒரு மாதம் இருப்பதால் இது 2ம் இடம் பெறுவது உறுதி. உலக சராசரி வெப்பநிலை உயர்வை, 1.5 செல்சியசுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என 'பாரிஸ் ஒப்பந்தம் - 2015' குறிப்பிடுகிறது.
டிசம்பர் 22
நீதிக்கதை
சுயமரியாதை வேண்டும்
ஒரு நாள் புவனேஸ்வரிதேவி தம் மகன் நரேந்திரனிடம், மகனே! நீ என்றும் தூயவனாகவும், சுயமரியாதையுடன் இரு. அதே சமயத்தில் மற்றவர்களின் சுயமரியாதைக்கு மதிப்புக் கொடுத்து வாழவும் கற்றுக்கொள். மென்மையானவனாகவும், சமநிலை குலையாதவனாகவும் இரு. ஆனால் தேவைபடும்போது, உன் இதயத்தை இரும்பாக்கிக் கொள்ளவும் தயங்காதே! என்று கூறினார்.
தம் தாய் கூறிய இந்த அறிவுரைகளை, நரேந்திரர் துறவறம் மேற்கொண்டு சுவாமி விவேகானந்தர் ஆனபிறகும் மறவாமல் பின்பற்றினார். தன்மானம், சுயமரியாதை உணர்வு விவேகானந்தரிடம் முழுமையாக இருந்தது. தம்மைப் போலவே இந்திய மக்களும் தன்மானத்துடன், இணையற்ற பெருமைக்குரிய தங்கள் பாரம்பரியங்களை அறிந்தவர்களாக வாழ வேண்டும் என்று அவர் விரும்பினார்.
ஒரு முறை விவேகானந்தரும் மற்றோர் அன்பரும் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது டிக்கெட் பரிசோதகர் அங்கு வந்தார். அவர் வெள்ளைக்காரர். அவர் அன்பரிடம், நீங்கள் இந்தப் பெட்டியில் பயணம் செய்ய முடியாது! என்று முரட்டுத்தனமாகக் கூறி, அன்பரை அந்தப் பெட்டியிலிருந்து வெளியேறும்படி வற்புறுத்தினார்.
மேலும் அந்த வெள்ளைக்காரர், தமக்குச் சாதகமாக ஏதோ ஒரு ரயில்வே சட்டத்தையும் கூறினார். அன்பரும் ரயில்வேயில் பணிபுரியும் ஒருவர்தாம். அன்பர் டிக்கெட் பரிசோதகரிடம், நீங்கள் கூறுவதுபோல் ரயில்வேயில் அப்படி ஒரு சட்டம் இல்லை என்று கூறி, அந்த ரயில் பெட்டியிலிருந்து வெளியேற மறுத்தார். இவ்விதம் தம்மை ஓர் இந்தியன் எதிர்ப்பதைப் பார்த்து, அந்த வெள்ளைக்காரருக்குக் கோபம் தலைக்கேறியது. கடைசியில் இந்தப் பிரச்சனையில் விவேகானந்தர் தலையிட்டார். அதுவும் வெள்ளைக்காரரின் கோபத்தைத் தணிக்கவில்லை. அவர் கோபத்துடன் கடுமையான குரலில் விவேகானந்தரிடம் இந்தியில் பேசினார்.
வெள்ளைக்காரர்: நீ ஏன் இதில் தலையிடுகிறாய்?
விவேகானந்தர்: முதல் வகுப்பில் பயணம் செய்யும் ஒருவரை நீ என்று நீங்கள் மரியாதை இல்லாமல் அழைக்கிறீர்களே! முதலில் நீங்கள் மற்றவர்களிடம் மரியாதையாகப் பழகுவதற்குக் கற்றுக்கொள்ளுங்கள்.
வெள்ளைக்காரர்: தவறுதான், பொறுத்துக்கொள்ளுங்கள். எனக்கு இந்தி சரியாகத் தெரியாது. இவன் (This man).
விவேகானந்தர் (குறுக்கிட்டு): உங்களுக்கு இந்தி சரியாகத் தெரியாது என்று சொல்கிறீர்கள்! ஆனால் இப்போது உங்களுக்கு உங்கள் தாய்மொழியான ஆங்கிலமும் சரியாகத் தெரியாது என்று தெரிகிறது. இவன் (This man) என்று அல்ல, இவர் (This gentleman) என்று சொல்ல வேண்டும். தமது தவற்றை உணர்ந்த பரிசோதகர், பெட்டியைவிட்டு வெளியேறினார்.
பின்னர் ஒரு சமயம் விவேகானந்தர், கேத்ரி மன்னரின் தனிச்செயலாளர் ஜக்மோகனிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர் மேற்கூறிய நிகழ்ச்சியைக் குறிப்பிட்டுப் பின்வருமாறு கூறினார். வெள்ளைக்காரர்களுடன் பழகும்போது நாம் நமது சுயமரியாதையை விட்டுக் கொடுக்கக்கூடாது. உரியவருக்கு உரிய மரியாதை கொடுத்துப் பழகாததால்தான் வெள்ளைக்காரர்கள் நம்மை அவமதிக்கிறார்கள். நமக்கு சுயமரியாதை வேண்டும், பிறருக்கும் நாம் மரியாதை கொடுக்க வேண்டும்.
இன்றைய செய்திகள்








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...