Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

டி.இ.டி., தேர்ச்சி, 7 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்பு: டி.ஆர்.பி., நம்பிக்கை


                  மூன்றாவது முறையாக, இன்றும், நாளையும் நடக்கும் டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதல், இரு தேர்வுகளில், 3 சதவீதத்தை தாண்டாத தேர்ச்சி சதவீதம், இந்த தேர்வில், 7 சதவீதமாக அதிகரிக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம், 7 லட்சம் பேரில், குறைந்தபட்சம், 50 ஆயிரம் பேர், தேர்ச்சி பெறலாம்.

குரூப்-1 மெயின் தேர்வு தேதிகள் அறிவிப்பு: செப்., 27 முதல் 29 வரை நடக்கிறது


             "குரூப்-1 மெயின் தேர்வு, செப். 27, 28, 29 ஆகிய தேதிகளில், சென்னையில் நடக்கும். இத்தேர்வை, 1,391 பேர் எழுத அனுமதிக்கப்படுவர்," என, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நவநீதகிருஷ்ணன் கூறினார்.

பத்தாம் வகுப்புக்கு முப்பருவ கல்விமுறை அறிமுகம்


           பத்தாம் வகுப்புக்கு முப்பருவ கல்விமுறை வரும் கல்வியாண்டியல் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதில் அரசு பொதுத்தேர்வு தான் நடத்த வேண்டும், என பள்ளிக்கல்வித்துறை அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

சத்துணவு தயாரிக்க "சோலார் குக்கர்": மாநகராட்சி பள்ளியில் அறிமுகம்


          கோவை மாநகராட்சி சார்பில், வடகோவை மேல்நிலைப்பள்ளியில் சத்துணவு திட்டத்தில் "சோலார் குக்கர்" முறை பரீட்சார்த்த முறையில் கையாளப்படுகிறது. இத்திட்டம் வெற்றியடைந்தால், மாநகராட்சி பள்ளிகளில் "சோலார் குக்கர்" திட்டம் விரிவடையும்.

இங்கிலாந்துடன் கை கோர்க்கும் தமிழக மருத்துவக் கல்லூரிகள்


         சி.எம்.சி., மற்றும் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரிகள், இங்கிலாந்தை சேர்ந்த கே.இ.பி., (Knowledge Economy Partnerships) புரோகிராமுடன் ஒருவருட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இணைந்துள்ளன.

கூடுதலாக வசூலித்த கல்விக் கட்டணத்தை பெற்றோருக்கு வழங்க உத்தரவு


           கூடலூரில், கூடுதலாக வசூல் செய்த கல்வி கட்டணத்தை பெற்றோருக்கு வழங்க தனியார் பள்ளிக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

ஆய்வுக்கட்டுரை தயாரிக்கும் போட்டி: மாணவர்கள் பங்கேற்று சாதிக்கலாம்


            தமிழ்நாடு அறிவியல் இயக்க ஆய்வுக் கட்டுரைகள் தயாரிக்கும் போட்டியில் பங்கேற்க, மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மருத்துவம் சார் பட்டப்படிப்பு: 19ம் தேதி கலந்தாய்வு துவக்கம்


          எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கான கலந்தாய்வு நேற்றுடன் முடிந்தது. மருத்துவம் சார் பட்டப் படிப்புகளுக்கான, மாணவர் சேர்க்கை கலந்தாய்வு 19ம் தேதி துவங்குகிறது.

மதிய உணவு விவகாரம்: மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்


           "பீகாரில், மதிய உணவு சாப்பிட்ட பள்ளிக் குழந்தைகள், 22 பேர் பலியானது போன்ற சம்பவம், மீண்டும் நடக்காமல் தடுக்கவும், குழந்தைகளுக்கு சுகாதாரமான உணவு வழங்கவும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன என்பதை, மத்திய, மாநில அரசுகள் தெரிவிக்க வேண்டும்" என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு : உயர்நீதிமன்றம் தடை விதிக்க மறுப்பு


             ஆசிரியர் தகுதித் தேர்வு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.


குரூப்-1 முதன்மை தேர்வு அறிவிப்பு


            குரூப் 1 முதன்மை தேர்வு செப்டம்பர் 27, 28, 29ம் தேதிகளில் நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. இது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நவநீதகிருஷ்ணன் கூறுகையில், முதன்மை தேர்வு சென்னையில் மட்டும் நடைபெறும்.



ஐ.ஐ.டி.,யின் தனித்தன்மை குறைகிறதா?


                  இந்தியாவில் உயர்கல்வி நிறுவனங்களில் முதன்மையாக திகழ்வது ஐ.ஐ.டி., இன்று அதன் தனித்துவம் குறைகிறதா என சந்தேகம் எழுந்துள்ளதாக பீகார் "சூப்பர்  30" நிறுவன இயக்குனர் ஆனந்த் குமார் தெரிவித்துள்ளார். இவர் பீகாரில் ஆண்டுதோறும் ஏழை மாணவர்கள் 30 பேருக்கு, இலவசமாக ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வு பயிற்சி அளித்து வருகிறார்.

நாளை டி.இ.டி., தேர்வு ஆரம்பம்: 73 சதவீதம் பேர் பெண்கள் ஏழு லட்சம் பேர் பங்கேற்கும், டி.இ.டி., தேர்வு, நாளை துவக்கம்


              நாளை நடக்கும் முதல் தாள் தேர்வை, 2.67 லட்சம் பேரும், நாளை மறுநாள், 18ம் தேதி நடக்கும், இரண்டாம் தாள் தேர்வை, 4.11 லட்சம் பேரும் எழுதுகின்றனர். தேர்வெழுதுவோரில், 73 சதவீதம் பேர், பெண்கள்.




ஆசிரியர் தகுதி தேர்வு மையத்திற்கு செல்போன், எலக்ட்ரானிக் பொருட்கள் கொண்டு செல்ல தடை


                  ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறுகின்ற தேர்வு மையத்திற்கு செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது என்று  பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் ராமானுஷம் கூறினார்.


என்.ஓ.சி., பெற தேவையில்லையா? சி.பி.எஸ்.இ., அறிவிப்பால், கல்வித்துறை அதிர்ச்சி


               "சி.பி.எஸ்.இ., பள்ளிகள் துவங்க, மாநில அரசுகளிடம், என்.ஓ.சி., வாங்கத் தேவையில்லை" என, சி.பி.எஸ்.இ., அறிவித்தித்திருப்பது, தமிழக கல்வித் துறையை, அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. "இந்த பிரச்னையை, முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்வோம்" என கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.




ஆசிரியர் மீதான பாலியல் புகார்: அதிகாரி குழு விசாரிக்க கோரிக்கை


               "ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார்களை, இணை இயக்குனர் தலைமையிலான குழு விசாரணை நடத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கம் வலியுறுத்தி உள்ளது.




பி.எட்., படிப்பு: விண்ணப்பிக்க இன்றே கடைசி


        பி.எட்., படிப்பிற்கான விண்ணப்பங்கள் விற்பனை, இன்றுடன் முடிவடைகிறது. இதுவரை, இப்படிப்பிற்கு, 10 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனையாகி உள்ளன.தமிழகத்தில், ஏழு அரசு கல்வியியல் கல்லூரிகளும், 14 அரசு உதவி பெறும் கல்லூரிகளும், 600க்கும் மேற்பட்ட தனியார் கல்வியியல் கல்லூரிகளும் உள்ளன.


         

மண்டல மையங்களில்பி.எட்., மதிப்பெண் பட்டியல் வினியோகம்


               "பி.எட்., மதிப்பெண் பட்டியல்களை, மண்டல மையங்களில் நாளை பெற்று கொள்ளலாம்' என, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.இதுகுறித்து, பல்கலைக்கழக துணைவேந்தர் விஸ்வநாதன் கூறியதாவது:




சத்தீஷ்கார் மாநிலத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 62 ஆக உயர்வு: முதல் மந்திரி அறிவிப்பு


              சத்தீஷ்கார் மாநிலத்தில் நடந்த சுதந்திரதின விழாவில் முதல்–மந்திரி ராமன்சிங் தேசிய கொடி ஏற்றி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் அரசு ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்தார்.

புதிய பென்ஷன் மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி ஆக.23ல் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்


                     புதிய பென்ஷன் எதிர்ப்பு நடவடிக்கைக் குழு கூட்டம் செவ்வாயன்று (ஆக. 13) சென்னையில் சிஐடியு மாநிலத் தலை வர் அ.சவுந்தரராசன் எம்எல்ஏ தலைமை யில் நடைபெற்றது.


சிறப்பு வழிகாட்டி புத்தகம் தயாரிக்கும் பணி தீவிரம்


             பொருளாதாரத்தில் பின்தங்கிய, எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த, பள்ளி மாணவர்களுக்கு, வினாக்கள் அடங்கிய, "சிறப்பு வழிகாட்டி” புத்தகம் தயாரிக்கும் பணியில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஈடுபட்டு உள்ளது.



சுதந்திர தின விழா - தேச பக்தர்களின் நினைவை போற்றி பாதுகாக்கும் மகிழ்ச்சியான விழா? - சிறப்புக்கட்டுரை


             தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், மேல் நிலைபள்ளிகள் என அனைத்திலும் பல்வேறு குழுக்கள் செயல்படுகின்றன.

                உதாரணமாக உயர்நிலை பள்ளிகளில் கிராம கல்விக் குழு ( VEC ), பெற்றோர் ஆசிரியர் கழகம் (PTA), பள்ளி மேலாண்மைக் குழு ( SMC ), பள்ளி கட்டிட வளர்ச்சிக் குழு ( SMDC ), அன்னையர் தின குழு என பல்வேறு குழுக்கள் செயல்படுகின்றன.

TET தேர்வுக்கு "சூப்பர் டிப்ஸ்"



              ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,) நேர மேலாண்மை மிகவும் அவசியம் என, மதுரை நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பாங்கிங் நிர்வாக இயக்குனர் பெ.வெங்கடாச்சலம் கூறினார்.


* ஆசிரியர் தகுதித் தேர்வை எழுத தயாராவோர், பதட்டம் இல்லாமல் படித்து தேர்வை எதிர்கொள்ள வேண்டும். இனி, புதிய பாடங்களை படித்தல் கூடாது. ஏற்கனவே படித்துள்ளவற்றையே திருப்புதல் செய்ய வேண்டும்.

Re-Option Chance - No Benefit.



               G.O.240. நாள்.22.7.2013. இன் படி அனுமதிக்கப்பட்ட RE-OPTION வாய்ப்பை பயன்படுத்தி ஊதிய நிர்ணயம் செய்தால் இப்போது பெற்று வருகிற அடிப்படை ஊதியத்தை விட குறைவான ஊதியமே நிர்ணயம் செய்யும் நிலை உள்ளது பற்றிய ஓர் ஆய்வு.

            (இதில் தவறுகள் ஏதும் இருப்பின் சுட்டிக்காட்டுங்கள். சரிசெய்து வெளியிடுவோம்)
               தலைப்பில் உள்ளவாறு உள்ள பாதிப்பை விளக்கும் முன்னர் OPTION & RE-OPTION  பற்றி ஒரு சிறு விளக்கம்.
OPTION பற்றிய விளக்கம். 


டி.இ.டி., தேர்வு பணிகளில் முழுமையாக ஈடுபடுவோம்: பட்டதாரி ஆசிரியர்கள்



              "ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும், டி.இ.டி., தேர்வு பணிகளை, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் புறக்கணித்துள்ள நிலையில், அப்பணிகளில் முழுமையாக ஈடுபடுவோம்" என பட்டதாரி ஆசிரியர் சங்கங்கள் கருத்து தெரிவித்து உள்ளன.



வருகின்றன 300 பாலிடெக்னிக் கல்லூரிகள்



           "பப்ளிக் பிரைவேட் பார்ட்னர்ஷிப்" (ppp) முறையில் புதிதாக 300 பாலிடெக்னிக் கல்லூரிகளை தொடங்கவுள்ளதாக மத்திய மனிதவள இணை அமைச்சர் சசி தரூர் தெரிவித்தார்.


உடனடி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பள்ளியில் சேர முடியாமல் பரிதவிப்பு



                பத்தாம் வகுப்பு உடனடித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர், பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் சேர முடியாமல் பரிதவிக்கின்றனர்.



தொலைதூர கல்வி மாணவர்களுக்கு சென்னை பல்கலை அறிவுறுத்தல்


           "சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வியில், 2005-06ம் ஆண்டு முன் பட்டப்படிப்பில் சேர்ந்து, இதுவரை பட்டப்படிப்பை முடிக்காதவர்கள், புதிய பாடத் திட்டத்தில் தேர்வு எழுதுமாறு, அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.


மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 62 ஆ?


          சுதந்திர தின விழாவை முன்னிட்டு இன்று நடைபெறும் விழாவில் நமது பாரதப் பிரதமர் திரு. மன்மோகன் சிங் அவர்கள் மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 60 லிருந்து 62 ஆக அதிகரிப்பது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கிறோம். 

தொடக்கக்கல்வித் இயக்குனர் செயல்முறை


             7வயது முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு குடியரசு தின சதுரங்கப் போட்டிகள் நடத்துவதற்கான செயல்த்திட்டம் வகுத்து தொடக்கக்கல்வித் இயக்குனர் செயல்முறை வெளியீட்டுள்ளார்


BRC Training to 40 % SG & BT Teachers


             Communicate English என்ற தலைப்பில் வட்டார வள மைய அளவில் 40% தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ( 24.08.2013) அன்றும் 40% உயர் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு (07.09.2013) அன்றும் பயிற்சி அளிக்க முதன்மை கருத்தாளர்களுக்கு பயிற்சி SCERT உத்தரவு

AEEO Promotion - 2013-14

             2013-14 ஆம் கல்வியாண்டு - தகுதி வாய்ந்த நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு உதவி/ கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலராக பணிமாறூதல் கலந்தாய்வு முன்னுரிமை பட்டியல் வரிசை எண் 251 முதல் 350 வரை 20.08.2013 அன்று தொடக்கக்கல்வி இயக்ககத்தில் நடைபெறுகிறது.

டி.இ.டி., தேர்வு பணிகள்: ஆசிரியர்கள் புறக்கணிப்பு


               ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும், ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) பணிகளை புறக்கணிப்பதாக, முதுகலை ஆசிரியர்கள் திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.


Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive