![]() |
| அனைத்துலக சதுரங்க நாள் |
இயல் : அரசியல்
அதிகாரம்:46 சிற்றினம் சேராமை
குறள் எண்:453
குறள்:
மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்
இன்னான் எனப்படுஞ் சொல்.
பொருள்:
மக்களுக்கு இயற்கையறிவு மனத்தால் ஏற்படும்,
இப்படிப்பட்டவன் என்று உலகத்தாரால் மதிக்கப்படும் சொல், சேர்ந்த இனத்தால் ஏற்படும்
Familiarity breeds contempt.
பழக பழக பாலும் புளிக்கும்.
இரண்டொழுக்க பண்புகள் :.
1. பொது அறிவு மற்றும் நற்பண்புகளால் என்னை நான் உயர்த்திக் கொள்வேன்.
2. என் பெற்றோரையும் ஆசிரியர்களையும் துன்புறுத்தும் எந்த ஒரு செயலையும் நான் ஒருபோதும் செய்ய மாட்டேன்.
பொன்மொழி :
“எதையும் தாங்கும் இதயம் வேண்டும்.”
Thought for the Day :
🌱 “A person who values time can achieve great success in life.”
பொது அறிவு :
1. தமிழ்நாட்டின் அதிக பரப்பளவு கொண்ட மாவட்டம் எது?
திண்டுக்கல்.
2. தமிழ்நாட்டின் குறைந்த பரப்பளவு கொண்ட மாவட்டம் எது?
சென்னை.
English words :
Cautious - Careful to avoid danger or mistakes, எச்சரிக்கையான.
Diligent - Hardworking and careful, விடாமுயற்சியுள்ள
புவியியலும் சுற்றுசூழலும் :
பாலைவனங்கள் (Deserts) – மிகக் குறைந்த மழைப்பொழிவு பெறும் வறண்ட நிலப்பகுதிகள்.
காடுகள் (Forests) – அடர்ந்த மரங்கள் நிறைந்த பகுதிகள்.
புல்வெளிகள் (Grasslands) – புற்கள் அதிகமாக வளரும் பரந்த நிலப்பகுதிகள்.
NMMS :
SAT -
கொடுக்கப்பட்டுள்ள படங்களில் வேறுபட்டதைத் தேர்ந்தெடு
விடை:(3)
ஜூலை 20
நீதிக்கதை
"கையில் இருந்த போன், கண்ணில் மறைந்த உலகம்"
ஒரு சிறிய ஊரில் ஷாலினி என்ற மாணவி வாழ்ந்தாள். அவளுக்கு படிப்பிலும், ஓவியம் வரைவதிலும் நல்ல திறமை இருந்தது.
ஒருநாள் அவளுடைய பெற்றோர் புதிய செல்போன் வாங்கிக் கொடுத்தார்கள்.
ஆரம்பத்தில் பாடங்களுக்காக மட்டும் பயன்படுத்திய சாலினி, நாளடைவில் வீடியோக்கள், விளையாட்டுகள், சமூக வலைத்தளங்கள் என்று மணி கணக்கில் போனிலேயே மூழ்கிவிட்டாள். வீட்டில் அம்மா அழைத்தாலும் கேட்கவில்லை. நண்பர்களுடன் விளையாடுவதையும் நிறுத்திவிட்டாள்.
ஒருநாள் பள்ளியில் ஓவியப் போட்டி நடந்தது. முன்பு எப்போதும் முதல் பரிசு வாங்கிய சாலினி, இந்த முறை சரியாக வரைய முடியவில்லை. காரணம், பயிற்சி செய்யாமல் நேரம் முழுவதும் போனில் செலவழித்ததுதான்.
அன்று மாலை அவளுடைய தாத்தா தோட்டத்திற்கு அழைத்துச் சென்று ஒரு வாடிய செடியைக் காட்டி, "இந்தச் செடிக்கு தண்ணீர் ஊற்றாமல் விட்டதால் வாடிவிட்டது. அதுபோல திறமையையும் நேரத்தையும் கவனிக்காமல், போனில் மட்டும் மூழ்கினால் வாழ்க்கையும் வாடிவிடும்," என்றார்.
தன் தவறை உணர்ந்த ஷாலினி, போனை தேவையான நேரத்தில் மட்டும் பயன்படுத்த ஆரம்பித்தாள். மீண்டும் படிப்பிலும், ஓவியத்திலும் கவனம் செலுத்தி, அடுத்த போட்டியில் முதல் பரிசை வென்றாள்.
நீதி:
"போன் நம் வாழ்க்கைக்கு உதவும் கருவி; அது நம் வாழ்க்கையையே ஆளக்கூடாது. நேரத்தை மதிப்பவரே வெற்றியை அடைவார்.”
இன்றைய செய்திகள்







.jpg)

.png)
.jpg)









