திருக்குறள்:
குறள் எண்:426
குறள்:
எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவ தறிவு.
பொருள்:
உலகத்துப் பெரியோர் எவ்வாறு வாழ்கின்றார்களோ, அவரோடு சேர்ந்து, தானும் அப்படியே வாழ்வது அறிவு.
Fortune favors the brave.
துணிவுடையோர்க்கே வெற்றி.
இரண்டொழுக்க பண்புகள் :.
1. செல்லும் இடமெல்லாம் ஒழுக்கம், நேர்மை, அன்பு என்னும் விதைகளை விதைத்து செல்வேன்.
2. அதன் மூலம் இவ்வுலகை நாம் நன்கு வாழக்கூடிய இடமாக மாற்ற முயற்சி செய்வேன்.
பொன்மொழி :
பொறுமை கசப்பானது; அதன் கனியோ இனிமையானது.
Thought for the Day :
Responsibility is the bridge between goals and achievements.
பொது அறிவு :
1. இந்திய முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக பதவி வகிப்பவர் யார்?
N .S.ராஜா சுப்பிரமணி.
2. தமிழகத்தில் முதல் முறையாக உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவுத் துறை (AI) அமைச்சர் யார்?
உயர் திரு. ஆர். குமார் அவர்கள்.
English words :
Benefit – Advantage, நன்மை.
Conceal – Hide, மறை.
NMMS :
1, 7, 3, 63, 5, 215, 7, ______
(1)342. (2) 511. (3)517. (4) 343.
1. ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு ஆகிய இடங்களில் ஒற்றை எண்கள் அமைந்துள்ளன.
2. இரண்டாமிடத்தில் உள்ள 7 என்பதற்கான சமன்பாடு
(முந்தைய எண் + 1)3 - 1
I) இரண்டாமிட எண் (1 + 1)3 - 1 = (2)3 - 1 = 8 - 1 = 7
II) நான்காமிட எண் (3 + 1)3 - 1 = (4)3 - 1 = 64 - 1 = 63
III) ஆறாமிட எண் (5 + 1)3 - 1 = (6)3 - 1 = 216 - 1 = 215
IV) எட்டாமிட எண் (7 + 1)3 - 1 = (8)3 - 1 = 512 - 1 = 511
விடை: (2) 511
புவியியலும் சுற்றுசூழலும் :
"இன்றைய மாணவர்கள் நாளைய பொறுப்புள்ள குடிமக்கள்." எனவே வாரத்தில் இரு நாட்கள் குடிமையியல் குறித்தும் பார்ப்போம்.
குடிமையியல் என்றால் என்ன?
குடிமையியல் என்பது ஒரு நாட்டின் ஆட்சி முறை, குடிமக்களின் உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றிய கல்வியாகும்.
ஜூன் 11
நீதிக்கதை
"வீட்டுப் பாடத்தின் மதிப்பு"
ஒரு கிராமத்தில் மணி என்ற மாணவன் இருந்தான். அவன் பள்ளிக்குச் சரியாகச் செல்வான். ஆனால் வீட்டுப் பாடம் செய்வதில் ஆர்வம் காட்டமாட்டான்.
ஒருநாள் ஆசிரியர் கணித வீட்டுப் பாடம் கொடுத்தார். மணிகண்டன் “நாளை பார்த்துக்கொள்ளலாம்” என்று நினைத்து விளையாடச் சென்றான். அவன் நண்பன் கோபி மட்டும் வீட்டுப் பாடத்தை கவனமாகச் செய்தான்.
மறுநாள் ஆசிரியர் அனைவரின் நோட்டுப் புத்தகத்தையும் பார்த்தார். கோபியின் வீட்டுப் பாடம் மிகவும் அழகாகவும் சரியாகவும் இருந்தது. ஆசிரியர் அவனைப் பாராட்டினார்.
மணி மட்டும் வீட்டுப் பாடம் செய்யாமல் வந்திருந்தான். பாடத்தில் ஆசிரியர் கேட்ட கேள்விகளுக்கும் அவனால் பதில் சொல்ல முடியவில்லை. அவனுக்கு வெட்கமாக இருந்தது.
அன்று மாலை மணி கோபியிடம், “நீ எப்படி பாடங்களை இவ்வளவு நன்றாகப் புரிந்துகொள்கிறாய்?” என்று கேட்டான்.
கோபி சிரித்துக்கொண்டு, “வீட்டுப் பாடம் செய்வது பாடத்தை மீண்டும் பயிற்சி செய்வது போல. அதனால்தான் எனக்கு எளிதாகப் புரிகிறது,” என்றான்.
அப்போது மணிக்கு தனது தவறு புரிந்தது. அந்த நாளிலிருந்து அவன் தினமும் வீட்டுப் பாடத்தை நேரத்திற்கு செய்து வந்தான். சில மாதங்களில் அவனும் வகுப்பில் சிறந்த மாணவர்களில் ஒருவனாக மாறினான்.
நீதி: வீட்டுப் பாடத்தை தவறாமல் செய்வதால் அறிவும் திறமையும் வளர்கின்றன. 📚✏️
இன்றைய செய்திகள்




























