![]() |
| உசைன் போல்ட் |
இயல் : அரசியல்
அதிகாரம்:48.வலியறிதல்
குறள் எண்:478
குறள்:
ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை.
பொருள்:
வருமானம் அளவில் சிறிது என்றாலும் செலவினம் பெரிதாகாதபோது கேடு இல்லை.
Might is right.
வல்லான் வகுத்ததே சட்டம்.
இரண்டொழுக்க பண்புகள் :.
1. பெரியோருக்கு பணிவதும், பிறருக்கு உதவுவதும் இளைஞருக்கு அழகு என்பதை நான் அறிவேன்.
2.கல்வி ஒன்றே என்னை உயர்த்தும். எனவே நன்கு படிப்பேன் .
பொன்மொழி :
“உன் கையில் ஒரு திறமை இருந்தால், உன் எதிர்காலத்தில் ஒரு வாய்ப்பு இருக்கும்.”
Thought for the Day :
“Education gives you knowledge; skills turn that knowledge into achievement.”
பொது அறிவு :
1.மனித மூக்கினால் எத்தனை விதமான வாசனைகளை உணர முடியும்?
50,000
2.மனித உடலில் தன்னை தானே சரி செய்து கொள்ள முடியாத உறுப்பு எது?
பற்கள்
English words :
1. Adaptable – Able to adjust easily, சூழ்நிலைகேற்ப மாறக்கூடிய.
2.Optimistic – Having a positive outlook, நம்பிக்கையான.
புவியியலும் சுற்றுசூழலும் :
கிராமங்கள் தங்களை நிர்வகிக்கப் பஞ்சாயத்து ராஜ் முறை அவசியமெனக் காந்தியடிகள் கருதினார்.சுத்தமும் சுகாதாரமும்: கிராமங்களில் தூய்மை மற்றும் கூட்டுறவை மேம்படுத்துவது சமூகத்தின் அடிப்படைப் பலமாகும் என்பதை அறிவுறுத்தினார்.
NMMS :
SAT - SOCIAL
ஷாகு என்றால் ____________________ என்று பொருள்.
(1) போர் முறை
(2) நேர்மையானவர்
(3) வரி முறை
(4) அஷ்டபிரதான்
விடை: (2) நேர்மையானவர்
ஆகஸ்ட் 21
நீதிக்கதை
திறமையை நல்ல வழியில் பயன்படுத்த வேண்டும்
ஒரு சிறிய கிராமத்தில் விக்னேஷ் என்ற சிறுவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு ஓவியம் வரைவதில் மிகுந்த திறமை இருந்தது. அவன் வரையும் ஓவியங்கள் அனைவரையும் கவரும்.
ஒருநாள் பள்ளியில் ஓவியப் போட்டி அறிவிக்கப்பட்டது. விக்னேஷ் தன் திறமையைப் பயன்படுத்தி அழகான ஓவியம் வரைந்தான். ஆனால், நண்பன் ஒருவனை கேலி செய்யும் வகையில் ஒரு ஓவியத்தையும் வரைந்து, அதை மற்ற மாணவர்களிடம் காட்டி சிரிக்க வைத்தான்.
அதைப் பார்த்த ஆசிரியர் விக்னேஷிடம், “உனக்கு கிடைத்த திறமை மற்றவர்களை மகிழ்விக்கவும், நல்ல விஷயங்களைச் சொல்லவும் பயன்பட வேண்டும். ஒருவரை காயப்படுத்துவதற்காகப் பயன்படுத்தக் கூடாது,” என்றார்.
ஆசிரியரின் வார்த்தைகளை நினைத்துப் பார்த்த விக்னேஷ், தன் தவறை உணர்ந்தான். பின்னர் தனது ஓவியத் திறமையைப் பயன்படுத்தி பள்ளியின் சுவர்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ஒற்றுமை, கல்வியின் முக்கியத்துவம் போன்ற நல்ல கருத்துகளை வரைந்தான்.
அவனுடைய ஓவியங்கள் பள்ளி முழுவதும் பாராட்டப்பட்டன. விக்னேஷும் தனது திறமைக்கு ஒரு நல்ல நோக்கம் கிடைத்ததை உணர்ந்து மகிழ்ந்தான்.
நீதி:
ஒவ்வொருவரிடமும் இருக்கும் திறமையை நல்ல செயல்களுக்காகப் பயன்படுத்தினால், அது நமக்கும் பிறருக்கும் பயனையும் மகிழ்ச்சியையும் தரும்.
இன்றைய செய்திகள்



























.jpeg)



