![]() |
| பிடல் காஸ்ட்ரோ |
இயல் : அரசியல்
அதிகாரம்:48.வலியறிதல்
குறள் எண்:471
குறள்:
வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.
பொருள்:
செயலின் வலிமையும் தன் வலிமையும் பகைவனுடைய வலிமையும் ,இருவருக்கும் துணையானவரின் வலிமையும் ஆராய்ந்து செயல்பட வேண்டும்.
Look before you leap.
ஆழம் தெரியாமல் காலை விடாதே.
இரண்டொழுக்க பண்புகள் :.
1. இருளால் இருளை நீக்க முடியாது. ஒளி மட்டுமே அதை செய்யும். வெறுப்பால் வெறுப்பை நீக்க முடியாது. அன்பால் மட்டுமே அதை செய்ய முடியும் .
2. பெரியோர் தனது அனுபவத்தையே அறிவுரையாக தருவார்கள். எனவே பெரியோரது அனுபவத்தை கேட்டு நடப்பேன்.
பொன்மொழி :
மழை வானத்தின் பரிசு; அதைச் சேமிப்பது நம் பொறுப்பு.
Thought for the Day :
The sound of rain is the music of nature.
பொது அறிவு :
1 . ஈ.வெ.ராமசாமி அவர்களை "பெரியார் " என்றழைத்தவர்கள் யார்?
அன்னை மீனாம்பாள் சிவராஜ் மற்றும் நீலாம்பிகை அம்மையார்.
2. ஈ.வெ.ராமசாமி அவர்களுக்கு" பெரியார்" என்ற பட்டம் எதற்காக வழங்கப்பட்டது ?
பெண்களின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டதால் 1938, நவம்பர் 13- ல் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் வழங்கப்பட்டது.
English words :
Creative – Thinks in new ways, படைப்பாற்றலுள்ளவர்.
Courageous – Faces difficulties bravely, துணிச்சலானவர்.
புவியியலும் சுற்றுசூழலும் :
கிராம நிர்வாகம்
மக்களின் தேவைகளை விரைவாக அறிந்து தீர்வு காண உதவுகிறது.
ஜனநாயகத்தில் மக்களின் நேரடி பங்கேற்பை ஊக்குவிக்கிறது.
கிராம வளர்ச்சி மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு அடித்தளமாக விளங்குகிறது
NMMS :
MAT
ஒரு குறிப்பிட்ட குறியீட்டு மொழியில் 'Kit Mit Fit' என்பதை 'Some good films' எனவும், .'Zit Rit Kit' என்பதை ' Some real stories' எனவும், 'Sil Fit Rit' என்பதை 'Many good stories' எஎவும் கொண்டால் 'real' என்பதை எந்தக் குறியயீட்டால் குறிக்கலாம்?
(1) Zit.
(2) Sil.
(3) Rit.
(4)Kit.
விடை: (1) Zit
ஆகஸ்ட் 13
நீதிக்கதை
தனிமை வேண்டாம் – ஒற்றுமையே பலம்
ஒரு சிறிய கிராமத்தில் அருண், கார்த்திக்,ஹரிஷ் என்ற மூன்று நண்பர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்களுடன் பள்ளியில் படிக்கும் மாணவன் ரவி மிகவும் அமைதியானவன். அவன் அதிகமாக யாரிடமும் பேசமாட்டான்.
ஒருநாள் பள்ளியில் ஆசிரியர் மாணவர்களை குழுக்களாகப் பிரித்து ஒரு அறிவியல் மாதிரி செய்யச்சொன்னார். ரவியை எந்தக் குழுவிலும் சேர்க்காமல் சில மாணவர்கள், “அவன் அமைதியாக இருக்கிறான்; நம்முடன் சேர்ந்து வேலை செய்ய மாட்டான்” என்று கூறினர்.
அதைப் பார்த்த அருணுக்கு வருத்தமாக இருந்தது. அவன் ரவியிடம் சென்று, “நீ எங்களுடன் சேர்ந்து இந்த மாதிரியை ச் செய்யலாம். உனக்கும் நல்ல யோசனைகள் இருக்கலாம்!” என்றான்.
ரவி முதலில் தயங்கினான். பின்னர் அவர்களுடன் சேர்ந்து வேலை செய்யத்தொடங்கினான். ஆச்சரியமாக, மாதிரியை எப்படி அழகாக அமைக்கலாம் என்பதற்கான சிறந்த யோசனையை ரவிதான் கூறினான். அனை வரும் சேர்ந்து உழைத்து, அந்தக் குழு பள்ளியில் முதல் பரிசைப் பெற்றது. ஆசிரியர் அவர்களை ப் பாராட்டி, “ஒருவரை அவர் அமைதியாக இருப்பதற்காகவோ, வித்தியாசமாக இருப்பதற்காகவோ தனியாக ஒதுக்கக்கூடாது. ஒவ்வொருவரிடமும் ஏதாவது ஒரு சிறப்பு திறமை இருக்கும். அதை அறிய வாய்ப்பு கொடுத்தால்தான் அது வெளிப்படும்” என்றார்.
அன்று முதல் மாணவர்கள் யாரையும் தனியாக ஒதுக்காமல், அனைவரையும் தங்களுடன் சேர்த்துக்கொள்ளத் தொடங்கினர்.
நீதி:
யாரையும் தனிமைப்படுத்தவோ, ஒதுக்கவோ கூடாது. ஒவ்வொருவருக்கும் தனித்திறமை உண்டு; அன்பும் ஒற்றுமையும் அந்தத் திறமையை வெளிக்கொண்டு வரும்.
இன்றைய செய்திகள்



























