அரும்பொருள் யாதொன்றும் இல்.
Broken trust is like a cracked mirror.
உடைந்த நம்பிக்கை , விரிசல் விழுந்த கண்ணாடியைப் போன்றது.
இரண்டொழுக்க பண்புகள் :
1. கடலையும் கடல் சார்ந்த பகுதியையும் பாதுகாப்பேன்.
2. நெகிழி மற்றும் பிற குப்பைகளை கடலில் வீச மாட்டேன்.
பொன்மொழி :
கற்பவர்களிடம் கற்றுக் கொள்வதை விட கற்றுக் கொண்டு இருப்பவர்களிடம் கற்றுக் கொள்
– காரல் மார்க்ஸ்
பொது அறிவு :
01.மொழி வாரியாகப் பிரிக்கப்பட்ட முதல் இந்திய மாநிலம் எது?
02.சந்திரனின் மறுபக்கத்தை முதலில் புகைப்படம் எடுத்த விண்கலம் எது?
English words :
replenishment-refill
conceited-proud
தமிழ் இலக்கணம்:
அறிவியல் களஞ்சியம் :
இந்தியாவின் கங்கை நதியை போல, கோடிக்கணக்கான ஆண்டுக்கு முன் செவ்வாய் கோளில் பெரிய நதி அமைப்பு இருந்ததாக அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது. செவ்வாய் தரைப்பரப்பில் பள்ளத்தாக்கு, நீரோடை, ஏரி, வண்டல் படிவு உள்ளிட்ட 16 முக்கிய அமைப்புகளை ஆய்வு செய்தனர். இவை ஒரு லட்சம் சதுர கி.மீ., பரப்பளவிலான நீர்நிலைகளை உள்ளடக்கியுள்ளது என கண்டறிந்தனர். இது செவ்வாயில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆய்வு செய்யும் எதிர்கால திட்டங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.
டிசம்பர் 17
ஓய்வூதியர் நாள் (Pensioners’ Day), இந்தியாவில் ஆண்டு தோறும் டிசம்பர் 17 ஆம் நாளன்று கொண்டாடப்படுகிறது. டிசம்பர் 17, 1982-ஆம் நாளில், இந்திய உச்ச நீதிமன்றம், ஓய்வூதியம் குறித்து வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை நினைவுகூரும் வகையில் இந்நாள் ஒவ்வொரு ஆண்டும் ஓய்வூதியர்களால் இந்தியாவில் கொண்டாடப்படுகிறது
நீதிக்கதை
கடமையே வெற்றி தரும்
ஒரு குரு நாதருக்கு வயதாகி விட்டதால் அவரால் வேலை செய்ய முடியவில்லை. சீடர்களை அழைத்து எனக்கு பிறகு நம் ஆசிரமத்தைக் கவனிக்க தகுதியானவர் யாரோ அவரை நியமிக்க உள்ளேன். இன்று முதல் உங்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் உன்னிப்பாக கவனிப்பேன் சிறந்த ஒருவரை தலைவராக அறிவிப்பேன் என்றார்.
தலைவராகும் ஆசையில் எல்லா சீடர்களும் கடுமையாக உழைத்தனர். குரு நாதரின் தேவையறிந்து நிறைவேற்றினர். ஒரு முடிவுக்கு வந்தவராக குரு நாதர் சீடர்களை ஒன்று கூட்டினார். வயதில் இளைய சீடனைக் காட்டி இவரே நம் மடத்தின் புதிய தலைவர் என அறிவித்தார். மற்றவர்கள் அதிர்ந்தனர்.
குரு நாதரே இவனை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் என்பது புரியவில்லை. குறிப்பிட்டுச் சொல்லும் விதத்தில் எந்த சாதனையும் இவர் செய்யவில்லையே என்றனர். அது தான் அவரது நற்குணமே நீங்கள் பதவிக்காகத் தான் என்னைக் கவனித்தீர்கள். இவரோ எப்போதும் போல் இயல்பாக இருந்தார். பதவிக்காக அலையும் பண்பு இவரிடம் இல்லை. என்னிடம் தேவையற்ற நெருக்கத்தை உண்டாக்கிக் கொள்ளவில்லை. அவரது கடமையில் மட்டும் கவனம் செலுத்தியதால் பொறுப்பை ஒப்படைத்தேன். கடமை என்னும் மூன்றெழுத்தே வெற்றி தரும் என்றார் குரு நாதர்.
இன்றைய செய்திகள்







.png)

















