Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13.02.2026

 

உலக வானொலி நாள்



 






திருக்குறள்: 

குறள் 442: 

உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும் 
பெற்றியார்ப் பேணிக் கொளல் 

விளக்க உரை: 

வந்துள்ள துன்பத்தை நீக்கி, இனித் துன்பம் வராதபடி முன்னதாகவே காக்கவல்ல தன்மையுடையவரைப் போற்றி நட்புக் கொள்ள வேண்டும்.

பழமொழி :

Small steps build big journeys. 

சிறிய படிகளே பெரிய பயணத்தை உருவாக்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. உலகில் உயர்வானது அனைத்து உயிர்களிடமும் நாம் காட்டும் அன்பும் பரிவும் தான்.

2. எனவே அனைத்து உயிர்களிடமும் அன்பு காட்டுவோம்.

பொன்மொழி : 

மோசமான தோல்வியை எதிர்கொள்ளும் தைரியம் உடையவர்களே வாழ்வில் மிகப் பெரிய வெற்றியைப் பெற முடியும் - கென்னடி

பொது அறிவு : 

1. Which Indian city became a UNESCO Creative City of Gastronomy? 

யுனெஸ்கோவின் கிரியேட்டிவ் சிட்டி ஆஃப் காஸ்ட்ரோனமியாக எந்த இந்திய நகரமாக  மாறி உள்ளது?

Mumbai - மும்பை

2. Who controls monetary policy in India? 

இந்தியாவில் பணவியல் கொள்கையை யார் கட்டுப்படுத்துகிறார்கள்? 

 Reserve Bank of India (RBI).  - இந்திய ரிசர்வ் வங்கி (RBI).

English words :

Monetary - பணவியல்

Mechanics - இயக்கவியல்

தமிழ் இலக்கணம்: 

 இன்று சும்மா என்ற சொல்லை குறித்து சற்று பார்ப்போம்.
சும்மா என்ற சொல்லை ஒரு நாளில் நாம் ஒரு முறையாவது உபயோகப் படுத்துவது உண்டு. ஆனால் இதற்கு அகராதியில் பொருள் இல்லை. ஏனென்றால் இது இடத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொண்டு பொருள் தரும். வாருங்கள் சில எடுத்துக் காட்டுகள் பார்ப்போம்
1. சும்மா கிடந்த சங்கை எடுத்து
பொருள் –பயன்படாமல் கிடந்த 
2. நான் சும்மா சொன்னேன்
பொருள் –நான் பொய் சொன்னேன்
3. இதை நீ சும்மா எடுத்துக்கோ
பொருள் – இலவசமாக எடுத்துக் கொள்
ஆக இந்த மூன்று வாக்கியங்களிலும் மூன்று சும்மாவும் மூன்று பொருள் தருகிறது அல்லவா.
  இன்னும் தொடரும்

அறிவியல் களஞ்சியம் :

அண்டார்டிகா என்றாலே நம் நினைவுக்கு வருவது மைல் கணக்கில் பரந்து விரிந்திருக்கும் வெண்மையான பனிப்பாறைகள் தான். ஆனால், அந்த உறைந்த அமைதிக்கு அடியில் "நெருப்பு உலகம்" ஒளிந்திருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா? சீன விஞ்ஞானிகள் தலைமையிலான சர்வதேசக் குழு, அண்டார்டிகாவின் பனிக்கு அடியில் புதைந்து கிடக்கும் 207 ராட்சத எரிமலைகளை கண்டறிந்து உலகையே அதிரவைத்துள்ளது.

பிப்ரவரி 13

உலக வானொலி நாள்

உலக வானொலி நாள் (World Radio Day) என்பது ஆண்டு தோறும் பெப்ரவரி 13 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளை ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பு (யுனெசுக்கோ) 2011 நவம்பர் 3 ஆம் நாள் உலக வானொலி நாளாக அறிவித்தது. வானொலி ஒலிபரப்புச் சேவையைக் கொண்டாடவும், பன்னாட்டு வானொலியாளர்களுக்கிடையே கூட்டுறவை ஏற்படுத்தவும், முடிவெடுப்பவர்களை வானொலி, மற்றும் சமூக வானொலிகள் மூலமாக தகவல்கள் பரிமாற ஊக்குவிக்கவும் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.


கவிக்குயில் சரோஜினி அவர்களின் பிறந்தநாள்


சரோஜினி நாயுடு அல்லது சரோஜினி சட்டோபத்யாயா (பிப்ரவரி 13,1879, ஹைதராபாத் - மார்ச் 2,1949, லக்னோ) அவர் பாரத்திய கோகிலா  (இந்தியாவின் நைட்டிங்கேல்) என்றும் அழைக்கப்படுகிறார். இவர் ஒரு பிரபலமான சிறுமுது அறிஞர், கவிஞர், எழுத்தாளர் ,சுதந்திரப் போராளி மற்றும் சமூக ஆர்வலர் ஆவார். இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது பெண் தலைவரும். உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல் பெண் ஆளுரும் ஆவார்.அவரது பிறந்த நாள் இந்தியாவில் மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது.

நீதிக்கதை

 பசி


ஒரு நாட்டில் ஒரு இளவரசன் இருந்தான். அவன் சிறந்த போர் வீரன். அவனுடைய வாள் வீச்சிற்கு அந்த நாடே ஈடு கொடுக்க முடியாது. அந்த அளவிற்குச் சிறந்த வீரன். அவன் ஒருமுறை அரண்மனையில் வாள் வீசி பயிற்சி செய்துக் கொண்டிருக்கையில், ஒரு எலி குறுக்கே ஓடியது. உடனே அதன் மீது வாளை வீசினான். அந்த எலி தப்பித்துச் சென்றது. பிறகு மீண்டும் அதனைத் துரத்தி வாளை வீசினான், மீண்டும் தப்பித்து வளைக்குள் புகுந்துகொண்டது. உடனே மனம் உடைந்து போனான்.

அப்போது வந்த அரசர், ஏன் சோகமாக இருக்கிறாய்? என கேட்டார். அதற்கு இளவரசன், இந்த நாடே எனது வாள் வீசும் திறமைக்கு ஈடு கொடுக்க முடியாதபோது, இந்த சாதாரண எலியை என்னால் கொல்ல முடியவில்லையே! என விவரித்தான் இளவரசன். மன்னர் சிரித்துவிட்டு எலியைக் கொள்ள வாள் பயிற்சி எதற்கு? அரண்மனைப் பூனையைக் கொண்டு வந்தாலே போதுமே! என்றார். உடனே அரண்மனை பூனை வரவழைக்கப்பட்டது.

அந்தப் பூனையும் எலியை வேட்டையாட முயன்றது. ஆனாலும் அந்த எலி எளிதாக அதனிடம் இருந்து தப்பித்து, தப்பித்துச் சென்றது. மீண்டும் இளவரசருடன் அரசரும் சோகமானார். அப்போது மந்திரி வந்தார். என்ன அரசே.. நீங்களும் இளவரசரும் சோகமாக இருக்கிறீர்கள்? என்றார். அதற்கு அரசர் நடந்ததை கூறினார். நம் நாட்டு பூனைகள் எதற்கு உதவாது. ஜப்பான், பாரசீகம் போன்ற நாடுகளில் உள்ள பூனைகள் புலி உயரம் உள்ளன. எனவே அங்கிருந்து வரவழைப்போம் என்றார் மந்திரி. அதேபோல் அந்நாடுகளில் இருந்து பூனைகள் வரவழைக்கப்பட்டன.

ஆனால் அவற்றிடமிருந்தும் அந்த எலி சாமர்த்தியமாகத் தப்பித்துச் சென்று வளைக்குள் புகுந்தது. எலிக்கு இவ்வளவு திறமையா! என அனைவரும் வியந்து கொண்டிருக்கையில், அங்கே இருந்த அரண்மனைக் காவலன் இளவரசே! இந்த எலிக்குப் போய் ஜப்பான், பாரசீகப் பூனையெல்லாம் எதுக்கு? எங்க வீட்டுப் பூனையே போதும் என்றான். மன்னருக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. என்ன.. அரண்மனையில் வளர்ந்து வரும் பூனையால் முடியாதது சாதாரண பூனையால் முடியுமா? என்றார்.

உடனே இளவரசர் மறித்து சரி... எடுத்து வா உனது பூனையை என்றார். வீட்டிற்குச் சென்று தனது பூனையைக் கொண்டு வந்தான் காவலன். அந்தப் பூனை அந்த எலியை ஒரே தாவலில் லபக் என்று கவ்விச்சென்றது. இதனைப் பார்த்த இளவரசருக்குப் பெருத்த ஆச்சரியம். என்ன இது அதியசம்! ஜப்பான், பாரசீக, அரண்மனையில் வளர்ந்த பூனைகளிடம் இல்லாத திறமை எப்படி இந்தச் சாதாரண பூனைக்கு ஏற்பட்டது? எப்படி சாத்தியம்? என்ன பயிற்சி கொடுத்துப் பூனையை வளர்க்கிறீர்கள்? என்று வியந்தவாறே கேள்விகளை கேட்க தொடங்கினார். அதற்குக் காவலாளி பெரிதாக என் பூனைக்குத் திறமையோ, பயிற்சிகளோ எதுவும் இல்லை இளவரசே...என் பூனைக்கு ரொம்பப் பசி அவ்வளவுதான் என்றான்.

உடனே இளவரசருக்கு சுரீர் என்றது. அரண்மனைக்குள் பூனைகள் நன்கு தின்று கொழுத்திருப்பதால் அவற்றுக்கு பசி என்பதே என்னவென்று தெரிய வாய்பில்லை, எனவே அவற்றால் எலியை எப்படி பிடிக்கமுடியும்? ஆக எந்த ஒரு வேலையையும் வெற்றிகரமாகச் செய்து முடிக்க வேண்டுமென்றால், முதலில் அதனைப் பற்றிய பசி அல்லது தேவை இருக்க வேண்டும். அப்போதுதான் அந்தக் காரியத்தை கச்சிதமாக செய்து முடிக்க முடியும்

இன்றைய செய்திகள்

13.02.2026

⭐தொழில் வளர்ச்சியில் தமிழகம் முன்னிலையில் உள்ளது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

⭐AI தொழில்நுட்பத்தின் தாக்கத்தால்இந்தியாவின் முன்னணி IT நிறுவனங்களின் பங்குகள் கடும் வீழ்ச்சி

⭐வருகிற 15-ந்தேதி உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி... தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

⭐ எகிப்து நாட்டில் மன்னர்களின் கல்லறைகளில் நடத்தப்பட்ட ஆய்வில், 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழ்-பிராமி கல்வெட்டுக்கள் கண்டுபிடிப்பு.

⭐9801 பேருக்கு பணி நியமன ஆணைகள் - முதலமைச்சர் இன்று வழங்குகிறார்.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀சேப்பாக்கம் மைதானத்தில் 3-வது லீக் ஆட்டம்: நெதர்லாந்து-அமெரிக்கா இன்று மோதல்

Today's Headlines

⭐ Chief Minister M.K. Stalin said that Tamil Nadu is leading in industrial development.

⭐ Shares of India's leading IT companies have fallen sharply due to the impact of AI technologies

⭐The Meteorological Department has announced that there is a possibility of moderate rain in Tamil Nadu due to a new low-pressure area forming on February 15th onwards.

⭐ 2000-year-old Tamil-Brahmi inscriptions discovered during a survey conducted in the tombs of kings in Egypt. 

⭐ Appointment orders for 9801 people - The Chief Minister to provide today.

 SPORTS NEWS 

🏀3rd league match at Chepauk Stadium: Netherlands-USA clash today

Covai women ICT_போதிமரம்

Revision Exam Questions Answer Keys 10th, 11th, 12th Standards

   
 

6th, 7th, 8th, 9th, 10th, 11th, 12th Standards - 3rd Mid Term Exam - Question Papers with Answer Keys


6th, 7th, 8th, 9th, 10th, 11th, 12th Standards - 3rd Mid Term Exam - Question Papers with Answer Keys




10th Revision Question Paper 2026 - 2nd Revision Test

  
 

12th Revision Question Paper 2026 - 2nd Revision Test

 
 



11th Revision Question Paper 2026 - 2nd Revision Test

 
 



10th Revision Question Paper 2026 - 1st Revision Test

  

12th Revision Question Paper 2026 - 1st Revision Test

 

11th Revision Question Paper 2026 - 1st Revision Test

  

Tamilnadu Revision Exams Time Table 2026 Download

 


12th Revision Question Paper 2026 - 3rd Revision Test

 



11th Revision Question Paper 2026 - 3rd Revision Test

   

10th Revision Question Paper 2026 - 3rd Revision Test

  
 


10th Revision Question Paper 2026 - 4th Revision Test

  



TNUSRB - ANNUAL PLANNER - 2026

 

NEET Exam Date - NTA அறிவிப்பு

 

HSHM TO PG CASE UPDATE

  

POLLING OFFICERS PAYMENT 2026

240705

 

12th Commerce Guide 2026-2027

 


12th Economics EM & TM Important Questions 2026-2027

12th Economics - Important 3 Marks Questions

 


12th Economics - Important and Interior Questions

11th Commerce Guide 2026-2027

10th Maths - Revision Test - Question Paper

Careers

10th Social Science - 5 Marks - Study Material

10th Social Science - One Marks - Study Material

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.02.2026

சார்லஸ் டார்வின்




 






திருக்குறள்: 

குறள் 303: 

மறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய 
பிறத்தல் அதனான் வரும்.     

விளக்க உரை: 

யாரிடத்திலும் சினம் கொள்ளாமல் அதை மறந்து விட வேண்டும், தீமையான விளைவுகள் அச் சினத்தாலேயே ஏற்படும்.

பழமொழி :

Time respect those who value it.        

நேரத்தை மதிப்பவர்களை நேரமும் மதிக்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. உலகில் உயர்வானது அனைத்து உயிர்களிடமும் நாம் காட்டும் அன்பும் பரிவும் தான்.

2. எனவே அனைத்து உயிர்களிடமும் அன்பு காட்டுவோம்.

பொன்மொழி : 

கடுமையான உழைப்பைத் தவிர வெற்றிக்கு இரகசியம் வேறு இல்லை -  டர்னர்

பொது அறிவு : 

01. தலையில் இதயம் கொண்ட விலங்கு எது?

           இறால் -Shrimp

02. உலகின் மிக நீளமான கடற்கரையாக கருதப்படுகிறது,

  பிரயா டோ காசினோ-பிரேசில்

  Praia do Cassino-Brazil

English words :

surge –a  sudden strong movement of people or things in a particular direction.

பெரும் எண்ணிக்கையிலான ஆட்களின் அல்லது பொருள்களின் குறிப்பிட்ட திசையிலான இயக்கம்

தமிழ் இலக்கணம்: 

 நாம் எழுதும்போது கமா, முற்றுப் புள்ளி, கால் புள்ளி, அரைப் புள்ளி போன்றவற்றை அவ்வப்போது பயன்படுத்துவது உண்டு. இதை நிறுத்தக்குறிகள் / நிறுத்தற்குறிகள் என்று நாம் அழைப்பது உண்டு. இன்று  
நிறுத்தக்குறிகள் / நிறுத்தற்குறிகள்
இவற்றில் எது சரி ? என்று 
பார்ப்போம் வாருங்கள்

நிறுத்தக்குறிகள் = நிறுத்தம் + குறிகள்
என்று பிரிக்கலாம். நிறுத்தம் என்றால் சென்று கொண்டிருக்கும் ஒன்றை நிறுத்துவது ஆகும்

நிறுத்தற்குறிகள் = நிறுத்தல் + குறிகள் என்று பிரிக்கலாம்
நிறுத்தல் என்றால் ஒரு பொருளை நிறுப்பது என்று பொருள் படும். 
எனவே நிறுத்தக்குறிகள் என்பதே சரியானது.

அறிவியல் களஞ்சியம் :

பார்சனின் நோய் (Parkinson's disease) பரவலில் குடலில் உள்ள நோய் எதிர்ப்பு செல்களின் பங்கு முக்கியமானது என கண்டறியப்பட்டுள்ளது. மேலும், பல் எனாமலை மீண்டும் உருவாக்கும் புதிய ஜெல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 12

டார்வின் நாள் - darwin day

டார்வின் நாள் (Darwin Day) என்பது ஒவ்வோர் ஆண்டும் பெப்ரவரி 12 ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளிலேயே 1809 ஆம் ஆண்டில் பரிணாமத் தத்துவத்தை உலகுக்கு அளித்த சார்ல்ஸ் டார்வின் பிறந்தார். அறிவியலையும் அறிவியலை மேம்படுத்தவும் உதவிய டார்வினின் பணிகளை இந்நாளில் நினைவு கூaருகிறார்கள்.

நீதிக்கதை

 ஓநாயும் ஆட்டுக்குட்டியும்


ஒரு நாள் ஓநாய் ஒன்று அதிகமான தாகத்துடனும், பசியுடனும் தவித்துக் கொண்டு இருந்தது. அதனால் அது தண்ணீர் குடிக்க ஒரு ஓடைக்குச் சென்றது. சிறிது தூரத்தில் ஒரு ஆட்டுக்குட்டி தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தது. அதனை கண்டு ஓநாய்க்கு கோபம் வந்தது. அது ஆட்டுக் குட்டியைப் பார்த்து டேய் முட்டாள்! நான் தண்ணீர் குடித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கவில்லையா! ஓடையைக் கலக்குகிறாயே என்றது. ஆட்டுக்குட்டி மிகுந்த பயத்துடன் நான் உங்களுக்குக் கீழ்ப் பாகத்தில் உள்ள தண்ணீர்ரைக் குடிக்கிறேன். நீங்களோ மேல் பாகத்தில் உள்ள தண்ணீர்ரைக் குடிக்கிறீர்கள். அப்படியிருக்க தண்ணீர் எப்படி கலங்கும் என்றது. 

ஆறு மாதத்திற்கு முன்னால் உன் தந்தை இப்படித்தான் என்னிடம் வாயாடினார். வாயாடியதற்காக அவருடைய தோல் அன்று உரிக்கப்பட்டது. அது போல் உன் தோலையும் உரித்தால் தான் நீ வாயாடுவதை நிறுத்துவாய் என்று கோபமாகச் சொல்லியது ஓநாய். ஆட்டுக்குட்டியோ மிகவும் பயந்தது. ஐயா! நான் சொல்வதை நம்புங்கள். நான் பிறந்து இன்னும் ஆறு மாதம் கூட ஆகவில்லை என்று மிகப் பணிவாகச் சொல்லியது. 

ஓநாய் கோபமாகப் பற்களைக் கடித்துக் கொண்டு எங்கள் இனத்தாரிடம் விரோதம் காட்டுவதே உங்கள் இனத்தாருக்கு வழக்கமாகி விட்டது. இப்போது நீ உன் முன்னோர்கள் செய்த கொடுமைகளுக்கு எல்லாம் சேர்த்து தண்டனை அடைந்தே தீர வேண்டும் என்று சொல்லிக் கொண்டே ஆட்டுக் குட்டியின் மீது பாய்ந்து ஆட்டுக்குட்டியைக் கொன்றுத் தின்றது ஓநாய். 


நீதி :

கெட்டவர்களிடம் பேசாமல் இருப்பது தான் நல்லது.

இன்றைய செய்திகள்

12.02.2026

⭐ஊழலை ஒழிப்பதில் பிற நாடுகளை விட இந்தியா மிக பின்தங்கியுள்ளதாக குளோபல் டிரான்ஸ்பரன்சி வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.

⭐பிப்ரவரி 22 ல் TNPSC குரூப்-  2 க்கான ஹால் டிக்கெட் தகவல் வெளியிடப்படும்.

⭐ஈரானில் விலைவாசி உயர்வு மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக அரசுக்கும் மக்களுக்கும் இடையே கடும் மோதல் நிலவுகிறது

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀10-வது டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் கடந்த 7-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில்  24 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 18 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வி அடைந்தது.

🏀இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) வெளியிட்ட 2025-26ஆம் ஆண்டிற்கான வீரர்களின் வருடாந்திர ஒப்பந்தப் பட்டியலில், முகமது ஷமி மற்றும் இஷான் கிஷன் உள்ளிட்ட 5 முக்கிய வீரர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

Today's Headlines

⭐A report released by Global Transparency has revealed that India lags far behind other countries in eradicating corruption.

⭐Hall ticket information for TNPSC Group-2 will be released on February 22.

⭐In Iran, there is a sharp conflict between the government and the people due to rising prices and economic crisis.

 *SPORTS NEWS*

🏀The 10th T20 World Cup series is being played in India and Sri Lanka starting from the 7th. Chasing a target of 24 runs, Afghanistan lost by just 18 runs.

🏀In the annual contract list of players for 2025-26 released by the Board of Control for Cricket in India (BCCI), 5 key players, including Mohammed Shami and Ishan Kishan, have been abruptly removed.

Covai women ICT_போதிமரம்

Medical Fitness Form Download

 

Teacher Wanted with Government Salary

 




Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive