![]() |
| தன்ராஜ் பிள்ளை |
இயல் : அரசியல்
அதிகாரம்:46 சிற்றினம் சேராமை
குறள் எண்:451
குறள்:
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்.
பொருள்:
தீய குணத்தாரோடு சேரப் பெரியோர் அஞ்சுவர்; சிறியாரோ அவர்களைத் தம் உறவாகவே கருதி விடுவர்.
Experience is the best teacher.
அனுபவமே சிறந்த ஆசான்.
இரண்டொழுக்க பண்புகள் :.
1. சூழ்நிலைக்கேற்றவாறு சிந்தித்து அளவான வார்த்தைகளைப் பேசுவேன்.
2. தகாத வார்த்தைகளை ஒருபோதும் பயன்படுத்த மாட்டேன்.
பொன்மொழி :
“மக்களுக்காக வாழ்வதே உண்மையான வாழ்க்கை.”
Thought for the Day :
The future belongs to those who believe in their dreams.
பொது அறிவு :
1.சூரியன் உதிக்கும் நாடு எது?
ஜப்பான்.
2. சூரியன் மறையும் நாடு எது?
பிரிட்டன்.
English words :
**Peculiar** - Strange or unusual, விசித்திரமான.
**Sufficient** - Enough for a particular purpose, போதுமான.
புவியியலும் சுற்றுசூழலும் :
நாடுகள் நிர்வாக வசதிக்காக மாநிலங்கள் அல்லது மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
உதாரணம்: இந்தியா – 28 மாநிலங்கள், 8 ஒன்றியப் பிரதேசங்கள்.
NMMS :
MAT
"PAINTER" என்ற சொல்லில் எழுத்துகளை ஆங்கில அகர வரிசைப்படி வரிசைப்படுத்தி எழுதினால் தன் இடத்தை மாற்றிக் கொள்ளாத எழுத்துகளின் எண்ணிக்கை எத்தனை??
(1) 1.
(2) 2.
(3) 3.
(4) 4.
விடை: (2) 2
ஜூலை 16
நீதிக்கதை
"நேர்மையின் வெற்றி" ஒரு பள்ளியில் வெற்றி மற்றும் ஹேமந்த் என்ற இரு மாணவர்கள் படித்து வந்தனர். ஆண்டு இறுதித் தேர்வு தொடங்கியது. இருவரும் நன்றாகப்
படித்திருந்தாலும், கணிதப் பாடம் ஹேமந்துக்கு மிகவும் கடினமாக இருந்தது.
தேர்வு எழுதும்ப போது, ஹேமந்துக்கு சில கேள்விகளுக்குப் பதில் தெரியவில்லை .
உடனே வெற்றியின் விடைத்தாளைப் பார்த்து காப்பி அடிக்க நினைத்தான்.
அதை கவனித்த வெற்றி, தனது விடைத்தாளை மறைத்துக்கொண்டு, "தவறான
மதிப்பெண்ணை விட நேர்மையான முயற்சிதான் உயர்ந்தது. உனக்குத் தெரிந்ததை மட்டும் எழுது," என்று மெதுவாகச் சொன்னான்.
ஹேமந்த் அந்த வார்த்தையைக் கேட்டதும் மனம் மாறினான். தனக்குத் தெரிந்த விடைகளை மட்டும் எழுதினான்.
முடிவுகள் வந்தபோது, வெற்றி அதிக மதிப்பெண் பெற்றான். ஹேமந்த்
எதிர்பார்த்த அளவுக்கு மதிப்பெண் பெறவில்லை . ஆனால் ஆசிரியர்,
"மதிப்பெண்ணை விட நேர்மையே பெரிய செல்வம். இன்று நீ நேர்மையைத்
தேர்ந்தெடுத்தாய். அடுத்தத் தேர்வில் உழைப்பால் நிச்சயம் வெற்றி பெறுவாய்," என்று பாராட்டினார்.
அந்த நாளிலிருந்து ஹேமந்த் தினமும் நன்றாகப் படித்து, அடுத்தத் தேர்வில் தனது சொந்த முயற்சியால் வகுப்பின் முதல் ஐந்து இடங்களில் ஒன்றைப் பிடித்தான்.
நீதி:
"பரிட்சையில் காப்பி அடித்து பெறும் வெற்றி நிலைக்காது; நேர்மையாக உழைத்து பெறும் வெற்றியே என்றும் பெருமை தரும்.”
இன்றைய செய்திகள்








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...