Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET Pass செய்ய 55 லட்சம் ரூபாய் செலவில் பயிற்சி!

           ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதிபெற வழிவகை செய்யும் வகையில்; 55 லட்சம் ரூபாய் செலவில் தனியார் பயிற்சி நிறுவனங்கள் வாயிலாகவும் பயிற்சி அளிக்கப்படும் : ஜெயலலிதா அறிவிப்பு


TNTET: 30th July, இதுவும் கடந்து போனதோ?

         பட்டதாரி ஆசிரியர் :தயார் நிலையில் இறுதி தேர்வுப் பட்டியல்.இன்றாவது வெளியிடப்படுமா?

         பட்டதாரி ஆசிரியர் இறுதி தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் ஓரிரு நாளில் வெளியிடவுள்ளது.பள்ளிக் கல்வித் துறை, தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள அரசு பள்ளிகளில் 10,726 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப் படையில் நிரப்பப்பட உள்ளன.

ஏர்ஃபோர்ஸில் எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு பணி..

         இந்தியன் ஏர்ஃபோர்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள கமிஷன் மற்றும் ஷார்ட் கமிஷன் அலுவலர்களுக்கான பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள ஆண், பெண் இரு தரப்பினரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பட்டதாரிகளுக்கு ராணுவ பள்ளிகளில் ஆசிரியர் பணி..

          இந்திய ராணுவத்தின் ஆர்மி ஏஜிகேஷன் கார்பஸ் எனும் ராணுவத்துக்கான கல்விப் பிரிவில் காலியாக உள்ள கல்வி புகட்டும் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மாணவர்களின் நம்பிக்கையையும் மதிப்பையும் இழப்பதைப் போல இன்னொரு தண்டனை ஆசிரியனுக்கு உண்டா? மாலன் நாராயணன்

         தீர்ப்புகளும் கொந்தளிப்புகளும் திரையிலும் தாளிலும் இறைந்து கிடக்கின்றன. வரி பிளந்து வாசிக்கும் எனக்குள்ளோ கேள்விகள் நிறைந்து கிடக்கின்றன.
 

மாணவர்சேர்க்கைக்கான காலகெடு 30.09.2014 வரை நீட்டித்து ஆணை வெளியீடு

            பள்ளிக்கல்வி - மாணவர் சேர்க்கை 2014-15ம் கல்வியாண்டில் உயர் நிலை / மேல் நிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான காலகெடு 30.09.2014 வரை நீட்டித்து ஆணை வெளியீடு

Flash News: 10,726 BT, 4224 SG, Post will be filled by TRB

        சற்றுமுன் தமிழகத்தில் 15000 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வுவாரியம் தயார்....

RTI News: பி.காம்.,எம்.காம் மற்றும் பி.எட் படித்து முடித்த ஆசிரியர்க்கு ஊக்க ஊதியம் வழங்கலாம்.

         பி.காம்.,எம்.காம் மற்றும் பி.எட் படித்து முடித்த ஆசிரியர்க்கு ஊக்க ஊதியம் வழங்கலாம் ......தகவல் அறியும் உரிமை சட்டம்

SG Asst Pay Scale News:

       ஒரு நபர் குழு திரு . ராஜீவ் ரஞ்சன் .இ .ஆ .ப. .அவர்களால் டிப்ளமோ கல்வித்தகுதியை காரணம் காட்டி ஊதியம் 5200-20200+2800 -இருந்து 9300-34800+4200 மாற்றி அமைக்கப்பட்ட பணியிடங்கள்.

தாய், தந்தையை இழந்த மாணவர்களின் கல்விக்காக வைப்பீடு செய்யப்படும் நிதி உயர்வு

          தாய், தந்தையை இழந்த மாணவர்களின் கல்விக்காக வைப்பீடு செய்யப்படும் நிதி ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.75 ஆயிரமாக உயர்த்தப்படும் முதல்வர் அறிவிப்பு

10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சொல்வதை குறிப்பெடுக்க நாட்காட்டியுடன் இணைந்த குறிப்பேடு

110வது விதியின் கீழ் முதல்வர் ஜெயலலிதா ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:
 
           நடப்பு கல்வியாண்டில், 25 மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் அதிகம் உள்ள 128 குடியிருப்பு பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த குடியிருப்பு பகுதிகளில், தலா ஒரு தொடக்க பள்ளி வீதம் 128 புதிய தொடக்க பள்ளிகள் துவங்கப்படும். ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு தலைமை ஆசிரியர் மற்றும் ஓர் இடைநிலை ஆசிரியர் என மொத்தம் 256 ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவர்.

அரசு உத்தரவுக்காக காத்திருக்கும் பதிவுதாரர்கள்?

          பதிவு மூப்பை மீண்டும் பெறும் சிறப்பு சலுகைக்கான அரசு உத்தரவை விரைவாக வெளியிடவேண்டும், என பதிவுதாரர்கள் காத்திருக்கின்றனர்.

எஸ்.எஸ்.ஏ., - ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டங்களுக்கு மத்திய அரசு ரூ.2,400 கோடி நிதி ஒதுக்கீடு

           தமிழகத்தில், எஸ்.எஸ்.ஏ., (அனைவருக்கும் கல்வி திட்டம்), ஆர்.எம்.எஸ்.ஏ.,(அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம்) திட்டங்களுக்காக, நடப்பாண்டில், 2,400 கோடியை, மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
 

ஆசிரியர் பணியிடங்கள் புதிதாக தோற்றுவிப்பு சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

              புதிதாக 128 தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்படும் என்றும், 192 பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும் என்றும் சட்டசபையில் நேற்று அறிவித்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா, இதன் மூலம் புதிதாக 1,682 ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

கலந்தாய்வுக்கு முன்பே 200 ஆசிரியர்கள் பணியிடமாறுதல் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு.

                  புதுச்சேரியில் ஆசிரியர் பணியிட மாறுதலில் முறைகேடு என ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள்புகார்.புதுச்சேரி சட்டமன்ற சபாநாயகர் சபாபதியிடம் என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 4 பேர் மனு.
 

ஆக.,4ல் கல்வி அதிகாரிகள் கூட்டம்

                  சென்னையில் ஆக.,4ல் மாவட்ட முதன்மைக்கல்விஅதிகாரிகளின் நேர்முக உதவியாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. பள்ளிகல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில், அத்துறை உயரதிகாரிகள், 32 மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளின்நேர்முக உதவியாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
 

சிறந்த ஆசிரியருக்கான விருது ஆக., 20க்குள் முடிக்க திட்டம்

            ராதாகிருஷ்ணன் விருதுக்கு, தகுதி வாய்ந்த ஆசிரியர் பட்டியலை, ஆக., 20ம் தேதிக்குள் இறுதி செய்ய, கல்வி துறை திட்டமிட்டுள்ளது. கற்றல், கற்பித்தலில் சிறந்து விளங்குதல், பள்ளி மேம்பாட்டிற்கான பங்களிப்பு உள்ளிட்ட, பல்வேறு அம்சங்களில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு, 'டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது' வழங்கப்படுகிறது.
 

தேர்வு குழப்பத்திற்கு விரைவில் தீர்வு'

           ராஜ்யசபாவில் நேற்று, மத்திய பார்லிமென்ட் விவகார இணை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பேசியதாவது: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான, யு.பி.எஸ்.சி., நடத்தும் தேர்வு தொடர்பாக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
 

சமஸ்கிருத வாரம் கொண்டாடதடை கோரிய வழக்கு தள்ளுபடி.


       சிபிஎஸ்இ பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாட தடை கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில், வக்கீல் புகழேந்தி தாக்கல் செய்த வழக்கு:
 

ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்ளுதல் சார்பான இயக்குனரின் உத்தரவு

          தொடக்கக் கல்வி - மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் செயலர் அவர்களின் தலைமையில் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்ளுதல் சார்பான இயக்குனரின் உத்தரவு

TRB Paper 2: இறுதி தேர்வுப் பட்டியல் எந்த நேரத்திலும் வெளியிடப்படலாம்

TRB பட்டதாரி ஆசிரியர் :தயார் நிலையில் இறுதி தேர்வுப் பட்டியல்


      பட்டதாரி ஆசிரியர் இறுதி தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் ஓரிரு நாளில் வெளியிடவுள்ளது.

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அறிவிப்பு

1.128 தொடக்கப் பள்ளிகள் திறக்கப்படும்
2. 50 அரசு நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.

1000 புதிய ஆசிரியர் பணி இடங்கள்-ரூ.72 கோடியில் கூடுதல் வகுப்பறைகள்: ஜெயலலிதா தகவல்

         சட்டசபையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா 110–வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறி இருப்பதாவது:–செல்வத்துள் பெரும் செல்வம் ஆகிய கல்வியை அனைவரும் கற்று, கல்லாதவர்களே இல்லாத மாநிலம் தமிழகம் என்ற குறிக்கோளை அடையும் வகையில் எனது தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது.இதன் அடிப்படையில், கீழ்க்காணும் அறிவிப்புகளை இந்த மாமன்றத்தில் அறிவிப் பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.


PG TRB Court Case News:

       MADURAI BENCH OF MADRAS HIGH COURT :வேலைவாய்ப்பக சீனியாரிட்டி அடிப்படையில் முதுகலை ஆசிரியர்கள் நியமனம் கோரிய மனு தள்ளுபடி

         வேலைவாய்ப்பக சீனியாரிட்டி அடிப்படையில் முதுகலை ஆசிரியர்கள் நியமனம் கோரிய மனு தள்ளுபடி  DETAILS OF JUDJEMENT

கல்லூரி ஆசிரியர் நியமனத்தில் மதிப்பெண் கணக்கிடும்முறை எதிர்த்த மனு தள்ளுபடி.

         கல்லூரி ஆசிரியர் நியமனத்தில் மதிப்பெண் கணக்கிடும் முறையை எதிர்த்த மனு ஐகோர்ட்டில் தள்ளுபடியானது. மதுரையை சேர்ந்த மகாராஜன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆசிரியர் பணியிடங்களைநிரப்புவது தொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் 2008ல் அறிவிப்பு வெளியிட்டது. 
 

கண்ணகி போல் நீதிகேட்டு வென்ற ஆசிரியை சங்கீதா!- நீதியரசர் நாகமுத்து அவர்களின் முழுத்தீர்ப்பு

       கண்ணகி போல் நீதிகேட்டு வென்ற ஆசிரியை சங்கீதா!- நீதியரசர் நாகமுத்து அவர்களின் முழுத்தீர்ப்பு

பள்ளிகளை தரம் உயர்த்தி முதல்வர் உத்தரவு

         2014-15ம் கல்வியாண்டில் புதியதாக 128 தொடக்கப் பள்ளிகளும், 42 தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகவும், 50 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 உயர்நிலைப் பள்ளிகளை மேல் நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தி முதல்வர் உத்தரவு

கும்பகோணம் தீ விபத்து | 9 பேருக்கு சிறை; 11 பேர் விடுவிப்பு- தஞ்சை நீதிமன்றம் தீர்ப்பு

          கும்பகோணம் தீ விபத்து வழக்கில் பள்ளி நிறுவனருக்கு ஆயுள் தண்டனை; 9 பேருக்கு சிறை; 11 பேர் விடுவிப்பு- தஞ்சை நீதிமன்றம் தீர்ப்பு

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் தங்கள் குழந்தைகளை இழந்த பெற்றோர். | கோப்புப் படம்         கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில், ஸ்ரீ கிருஷ்ணா பள்ளி நிறுவனர் புலவர் பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனை விதித்து, தஞ்சை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

           மேலும், அந்தப் பள்ளியின் தாளாளரும், பழனிச்சாமியின் மனைவியுமான சரஸ்வதி, தலைமை ஆசிரியர் சாந்தலெட்சுமி, சத்துணவு அமைப்பாளர் விஜயலட்சுமி, சமையல்காரர் வசந்தி ஆகியோருக்கு தலா 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

காலிப் பணியிடங்களை நிரப்பாவிட்டால் சென்னையில் பேரணி

          உடற்கல்வி ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிறைவு செய்யவில்லை எனில், சென்னையில் பேரணி நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வி துறை இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு நியமன ஆணை

            திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், பள்ளிக்கல்வி துறையில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு, கவுன்சலிங் மூலம் நியமன ஆணை வழங்கப்பட்டது.

தமிழகத்தில் டிஇஓ பதவி உயர்வு : 15 மாவட்ட கல்வி அலுவலர்களாக தலைமை ஆசிரியர்கள் நியமனம்

             தமிழகத்தில் மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு தாமதம் காரணமாக 15 மாவட்ட கல்வி அலுவலர் பதவிகளுக்கு தலைமை ஆசிரியர்களை கூடுதல் பொறுப்பாக நியமித்து பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் மாவட்ட கல்வி அலுவலர்களாக பணியாற்றிய 15 பேருக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களாக கடந்த 25ம் தேதி பதவி உயர்வு அளிக்கப்பட்டது. இவர்கள் உடனே புதிய பணியிடங்களில் சேரவும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டது.

10th Science Study Material ( Latest )

Science - Study Material

இந்த ஆண்டு 887 இடைநிலை ஆசிரியர்கள் நியமனம்

           தமிழக அரசு தகவல் இந்த ஆண்டு புதிதாக 887 இடைநிலை ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமிக்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2012-ஆம் ஆண்டில் 9,692 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இதன் காரணமாக, இப்போது இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் குறைவான காலிப் பணியிடங்களே உள்ளன.

ஆசிரியர் பயிற்றுனர்களை நியமிக்க வழக்கு : அதிகாரிகளுக்கு நோட்டீஸ்

           ஆசிரியர் பயிற்றுனர்களை பள்ளியில் நியமிப்பது தொடர்பாக, ஆசிரியர்தேர்வு வாரியம், பள்ளிக் கல்வித்துறை இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்குத் தடை கோரி வழக்கு.

     885 வட்டார வளமைய ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பணி அமர்த்தாமல் தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர்களை நியமிக்கத் தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

TNTET : பட்டதாரி ஆசிரியர் பட்டியல் ஓரிரு நாளில் வெளியீடு?

               பட்டதாரி ஆசிரியர் இறுதி தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் ஓரிரு நாளில் வெளியிடவுள்ளது. பள்ளிக் கல்வித் துறை, தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள அரசுபள்ளிகளில் 10,726 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.


தமிழ் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை அதிகரிக்க வேண்டி கோரிக்கை

1.   தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தைப் பின்பற்றும் பள்ளிகள் அனைத்தும் தமிழ் மொழியை கட்டாயம் பயிற்றுவிக்க வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், நடுநிலைப் பள்ளிகளில் தமிழாசிரியர் பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படுவதில்லை.


பள்ளி பஸ்களுக்கு 'கிடுக்கிப்பிடி' : விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை

    பெங்களூரு நகரப் பள்ளிகளுக்கு, வழிகாட்டுதல் நெறிமுறைகளை நிர்ணயித்துள்ள போலீஸ் கமிஷனர், எம்.என்.ரெட்டி, பள்ளி பஸ்கள், வாகன டிரைவர்களுக்கு சீருடை, பேட்ஜ் அணிவதை கட்டாயமாக்கி உள்ளார்.

பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும் : 8,000 போலீசார் முதல்வருக்கு கோரிக்கை

          கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், காவல் துறையில் சேர்ந்த, 8,000 காவலர்கள், தங்களை பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும்' என, முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தங்கம். தங்கம், தங்கம்; காமன்வெல்த் போட்டியில் 10 தங்கப்பதக்கங்களை அள்ளிய இந்தியா

          கிளாஸ்கோ: காமன்வெல்த் போட்டியில், மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு இன்று ஒரே நாளில் 3 தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. மல்யுத்தத்தில் இந்திய வீரர்கள் சுஷில்குமார்,அமித்குமார், மற்றும் இந்திய வீராங்கனை வினேஸ் தங்கப்பதக்கம் வென்றனர். இதுவரை 36 தங்கப்பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.

பள்ளி இடைநிற்றல் விகிதம் குறைந்தது உண்மையா?

            தமிழகத்தில், மாணவர்களின் இடைநிற்றல் (டிராப் அவுட்ஸ்) விகிதம் குறைந்து விட்டதாக, தமிழக அரசு தெரிவித்து உள்ளது.கல்வித் துறை புள்ளி விவரப்படி, 2001 - 02ல், தொடக்கநிலைவகுப்பில், மாணவர் இடைநிற்றல், 12 சதவீதமாக இருந்தது, 2013 - 14ல், 0.95 சதவீதமாக குறைந்துவிட்டது என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
 

கல்லூரி ஆசிரியர் நியமனத்தில் மதிப்பெண் கணக்கிடும்முறை எதிர்த்த மனு தள்ளுபடி.

          கல்லூரி ஆசிரியர் நியமனத்தில் மதிப்பெண் கணக்கிடும் முறையை எதிர்த்த மனு ஐகோர்ட்டில் தள்ளுபடியானது.

நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்த மெகா பட்ஜெட்டில் புது திட்டம்: அரசு பள்ளி மாணவியர் சாதனை

           நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்த, மழைநீர் சேமிப்பு கட்டமைப்பை கட்டாயப்படுத்தும் பணிகள் நடக்கின்றன. இது, மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை உணர, அரசு பள்ளி மாணவர்களுக்கு, சமீபத்தில் அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது.இதில், குளங்களை இணைத்து, ஒருங்கிணைந்த நீராதாரத்திற்கு வழிவகை செய்ய, மெகா பட்ஜெட்டில் திட்டம் தீட்டிய, ஒண்டிப்புதூர் அரசு பள்ளி மாணவியர், சவுமியா மற்றும் லதாவுக்கு, முதல் பரிசு கிடைத்தது.

பாதுகாப்பு நலனுகாக வழிக்காட்டு நெறிமுறைகள் வழங்கி அரசு உத்தரவு

       சமூக நலம் - குழந்தைகள் நலம் - வீட்டை விட்டு வெளியே தங்கும் பெண் குழந்தைகள், வளர் இளம் பெண்கள் மற்றும் பெண்கள், சிறார் இல்லங்கள், பெண்கள் விடுதிகள் ஆகியவற்றில் உள்ளுறைவோர்களின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு நலனுகாக வழிக்காட்டு நெறிமுறைகள் வழங்கி அரசு உத்தரவு

குழப்பமான ஆசிரியர் தகுதித் தேர்வு முறை

          இந்தப் பள்ளிகளில் அரசு கல்வித்திட்டப்படி இரண்டு ஆண்டு பட்டயப் பயிற்சிப் படிப்பு வழங்கப்படுகிறது. தேர்வில் வெற்றி பெற்ற பிறகு டி..டி. (T.E.T.) ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று, தேர்வு, பெற்றால் அரசு ஆரம்பப் பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்ற முடியும்.(இப்படி ஒரு வடி கட்டலுக்குப் பதில் படித்து வெளியேறும் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தேர்வு முறையையும் பாட திட்டத்தையும் ஒழுங்குபடுத்தினால், இந்த இரட்டைத் தொல்லை நீங்கக் கூடும்). இதில் எத்தனை வழக்குகள், தேவையற்ற விமர் சனங்கள், போராட்டங்கள், அரசுக்கும் தலைவலிஇவற்றை அடிப்படை மாறுதல்கள் மூலம் தவிர்க்க வேண்டும் அரசுகள். இப்போதும் காலந்தாழ்ந்து விடவில்லை

19 ஆண்டுகளில் 583 ஏழை மாணவர்களை தத்தெடுத்து உயர்த்திய ஐஏஎஸ் அதிகாரி

            19 ஆண்டுகளில் 583 ஏழை மாணவர்களை தத்தெடுத்து உயர்த்திய ஐஏஎஸ் அதிகாரி: சத்தமில்லாமல் ஓர் அசாத்திய சாதனை

தமிழகத்தில் அரசு வேலைப்பெற்ற முதல் திருநங்கை




         குணவதி, தமிழகத்தில் முதல் அரசு வேலைப் பெற்ற திருநங்கை, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவில் பணியாற்றுகிறார்.
 

கருகிய மலர்கள்!


        கருத்தாய் கற்பதற்கு கல்விநிலையம் சென்ற பிஞ்சுப்பூக்கள் 94பேர் கரிக்கட்டையாய் கிடந்த அவலநிலையெ கண்ட அத்தனை பேரின் மனதிலும்  அழியாத தழும்புகளாய் இருக்கின்றன...

TNTET:ஆகஸ்ட் 1 க்குள் ஆசிரியர் தேர்வு பட்டியல் : டி.ஆர்.பி.,அறிவிப்பு.!

         ஆகஸ்ட், 1ம் தேதிக்குள், 10 ஆயிரம் ஆசிரியர் தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும்'என, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) வட்டாரம், நேற்று மாலை தெரிவித்தது.

இந்தியன் வங்கியில் 251 சிறப்பு அதிகாரிகள் பணிக்கு தேர்வு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 251 சிறப்பு அதிகாரிகள் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

7TH CENTRAL PAY COMMISSION TABLE

          CONFEDERATION OF CENTRAL GOVERNMENT EMPLOYEES & WORKERS SUBMITTED MEMORANDUM TO 7TH CENTRAL PAY COMMISSION

பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை படிப்படியாக அமலாகும்

          பயோமெட்ரிக் வருகைப்ப திவு முறை, படிப்படியாக, மற்ற அமைச்சகங்களின் அலுவலகங்கள் மற்றும் மத்திய அரசு அலுவலகங்களிலும் அமலாகும்

வெயிட்டேஜ் மதிப்பெண்: சிறப்பு முகாம்களுக்கு 4 ஆயிரம் பேர் வருகை - தினமணி

          பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கான வெயிட்டேஜ் மதிப்பெண்ணில் திருத்தம் கோரி 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சிறப்பு முகாம்களுக்கு வந்தனர்.

சொத்து விவரங்களை சமர்ப்பியுங்கள் மத்திய அரசு ஊழியர்களுக்கு உத்தரவு

                'மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும், செப்டம்பர், 15ம் தேதிக்குள், புதிய சொத்து விவர பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும்' என, மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

பிளஸ் 2 உடனடி தேர்வு விடைத்தாள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்

           "பிளஸ் 2 உடனடித்தேர்வு எழுதியோர், விடைத்தாள் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு, நாளை முதல் விண்ணப்பிக்கலாம்,”என அரசு தேர்வுகள் துறை இயக்குனர் தேவராஜன் தெரிவித்துள்ளார்.

காமன்வெல்த்தில் தங்கம் வென்ற தமிழர் சதீஷுக்கு ரூ.50 லட்சம் பரிசு: முதல்வர் ஜெ. அறிவிப்பு!

            காமன்வெல்த் போட்டியில் தங்க பதக்கம் வென்ற தமிழர் சதீஷுக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா  அறிவித்துள்ளார்.

Easy Photo Edit - Free Tool

மதுரை காமராஜ் பல்கலையில் எம்.எட்., படிப்பு துவங்கப்படுமா?

          'மதுரை காமராஜ் பல்கலையில் எம்.எட்., படிப்பு துவங்க வேண்டும்' என, ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர். இப்பல்கலை அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஏராளமாக உள்ளன. அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் 10 ஆயிரத்திற்கும் மேல் ஆசிரியர்கள் இந்த மாவட்டங்களில் பணியாற்றுகின்றனர்

வெளி மாநிலங்களில் ஆசிரியர் பயிற்சி : 6 சான்றிதழ் அனுப்ப கல்வி துறை உத்தரவு

         'வெளி மாநிலங்களில், ஆசிரியர் பயிற்சிப் படிப்பை முடித்த மாணவர்கள், தங்கள் சான்றிதழ்களை மதிப்பீடு செய்ய, ஆறு வகை சான்றிதழ்களை அனுப்ப
வேண்டும்' என, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் தெரிவித்து உள்ளது.

நிரப்பப்படாத சிறப்பு ஆசிரியர் ஆசிரியர் பணியிடங்களால் சிக்கல்

                   "தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில், சிறப்பு ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாததால், மாணவ, மாணவியருக்கான சிறப்பு கல்வி போதிப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளுவர் பல்கலை. முதுகலை பட்டப் படிப்பு தேர்வு முடிவுகளில் குளறுபடி.?

          திருவள்ளுவர் பல்கலைக்கழக முதுகலை பட்டப் படிப்பு தேர்வு முடிவுகள் வெளியிட்டதில் பல குளறுபடிகள் காணப்படுவதாக ஆட்சிமன்றக் குழு முன்னாள் உறுப்பினர் பேராசிரியர் அய்.இளங்கோவன்புகார் தெரிவித்துள்ளார்

100 இடைநிலை ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மூடப்பட்டன.

            வேலைவாய்ப்பு பதிவு மூலம் வேலை கொடுக்காததால் இந்த வருடம் 100 இடைநிலை ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மூடப்பட்டன.

            இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களாக தேர்ந்து எடுக்கப்படாததால் 100 சுயநிதி இடைநிலை ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் இந்த ஆண்டு மூடப்பட்டன.

ஆசிரியர் தகுதித்தேர்வில் தோல்வி இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை - Dinamlar

           
              ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி, இரண்டு முறையும் தோல்வி அடைந்ததால், மனமுடைந்த இளம்பெண், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நாமக்கல், முல்லை நகரை சேர்ந்தவர் சசிகுமார், 37. இவர், இந்துசமய அறநிலையத் துறையில், டைப்பிஸ்டாக உள்ளார். இவரது மனைவி இளவரசி, 28, எம்.எஸ்சி., முடித்துள்ளார். இவர்களுக்கு, நான்கு வயதில் ஆண் குழந்தை உள்ளது.

ஸ்காட்லாண்ட்: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தமிழக வீரர் சிவலிங்கம் தங்க பதக்கம் வென்றுள்ளார்.

                                                                 

          காமன்வெல்த் 4 வது நாள், விளையாட்டுப் போட்டிகளில், 77 கிலோ எடைப்பிரிவு பளுதூக்கும் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த சதீஸ் சிவலிங்கம் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இதே எடைப்பிரிவில் இந்தியாவின் ரவி கட்லு இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.

’புதிய திருக்குறள்’ - சேலம் தமிழ் ஆசிரியர் சாதனை!

 சேலம் பனமரத்துப்பட்டியில் உள்ள நிலப்பரப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வீரபத்திரன் (வயது 44). இவர் அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
                               


"டெஸ்லா மாடல் S " - எவர் “க்ரீன்” எலெக்ட்ரிக்! உலகின் நம்பர் -1 எலெக்ட்ரிக் கார்!

          மின்சார கார்களா? அதெல்லாம் ஓட்ட நல்லாவும் இருக்காது; ஸ்பீடாகவும் போகாது. என்ன இருந்தாலும் பெட்ரோல் இன்ஜின் ஃபீல் இருக்காது’ என சிலர் சொன்னாலும், காலம் மாறிவிட்டது நண்பர்களே! இனி, மின்சார கார்களைத் தவிர்க்க முடியாது.

தடய அறிவியல் துறையில் பணி ..

        குற்றங்களை விஞ்ஞானபூர்வமாக நிரூபிப்பதற்குத் தடய தாவரவியல் உதவுகிறது. தாவரங்களின் தடயங்களை கொண்டு குற்றச்செயல்களை கண்டுபிடிக்கும் முறையினைத் தடய தாவரவியல் எனக் கூறலாம்.

உடற்கல்வி பயிற்சியாளர்கள் மேலும் 80 பேர் நியமிக்கப்படுவர்:அமைச்சர் சுந்தர்ராஜன் தெரிவித்தார்.

          தமிழ்நாடு முழுவதும் 80 உடற் கல்விப் பயிற்சியாளர்கள் தேவைப்படும் இடங்களுக்கு நியமிக்கப்பட உள்ளனர் என்று, தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சுந்தர்ராஜன் தெரிவித்தார். 

மூன்று மாதங்களில் குரூப் - 1 தேர்வு முடிவுகள்: டி.என்.பி.எஸ்.சி. தலைவர்

      "கடந்த வாரம் நடந்த, டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 1 தேர்வு முடிவுகள், மூன்று மாதங்களில் வெளியிடப்படும்" என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பாலசுப்ரமணியன் தெரிவித்தார்.

உபரி ஆசிரியர்களை கணக்கெடுக்க கல்வித்துறை உத்தரவு

          பல அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கை படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால், பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் பணியாற்றி வருவது அதிகரித்துள்ளது. அவ்வாறு பணியாற்றும் ஆசிரியர்கள் பற்றி கணக்கெடுக்க, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இடஒதுக்கீட்டிற்கு அனுமதி மறுக்கப்பட்ட பள்ளிகளின் பட்டியல் கோரி உத்தரவு

           இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 - 2014-15ம் கல்வியாண்டில் சிறுபான்மையற்ற தனியார் சுய நிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கு 25% இடஒதுக்கீடு, இடஒதுக்கீட்டிற்கு அனுமதி மறுக்கப்பட்ட பள்ளிகளின் பட்டியல் கோரி உத்தரவு

த.ஆ மற்றும் ஆய்வு அலுவலர்கள் கூட்டம்!

         பள்ளிக்கல்வி - மண்டல வாரியாக ஆய்வுக் கூட்டம் - 70% குறைவாக தேர்ச்சி பெற்ற அரசு உயர் /மேல்நிலைப் பள்ளி த.ஆ மற்றும் ஆய்வு அலுவலர்கள் கூட்டம் 13.08.2014 முதல் 01.09.2014 வரை மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது

தகுதியிருந்தும் பதவி உயர்வு பெற முடியாத ஐ.டி.ஐ. ஊழியர்கள்

              சிறப்பு விதிகளில் இடம் பெறாத ஒரே காரணத்தால், தகுதியிருந்தும், பதவி உயர்வு பெற முடியாமல் ஐ.டி.ஐ., ஊழியர்கள் தவிக்கின்றனர். தமிழகத்தில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ், மாணவர்களுக்கு தொழிற்கல்வி தரும் பணியில், 72 ஐ.டி.ஐ.,க்கள் செயல்படுகின்றன. அங்கு, பல துறைகளிலும், டிப்ளமோ முடித்தோர், இளநிலை பயிற்சி அலுவலர், உதவி பயிற்சி அலுவலர், பயிற்சி அலுவலர்களாக பணிபுரிகின்றனர்.

12th Computer Science Study Material (Latest)

Computer
  1. Computer C++ - E.Sakthivel & M. Shanmugajothi - Tamil Medium

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive