Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 30.10.21

   திருக்குறள் :

பால்: பொருட்பால்

இயல்: அரசியல்

அதிகாரம்: தெரிந்து செயல் வகை

குறள் எண்: 461

குறள்:
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும
ஊதியமுஞ் சூழ்ந்து செயல்.

பொருள் :
எந்த அளவுக்கு நன்மை கிடைக்கும் அல்லது தீமை ஏற்படும் என்று விளைவுகளைக் கணக்குப் பார்த்த பிறதே ஒரு செயலில் இறங்க வேண்டும்.

பழமொழி :

Do good to those who harm you


பகைவனை நேசித்துப்பார்

இரண்டொழுக்க பண்புகள் :

1. பெற்ற உதவிக்கு நன்றி சொல்லுவேன். செய்த தவறுக்கு மன்னிப்பு கோருவேன். 

2. இதன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்து என் வாழ்வில் சிறந்த மனிதனாக விளங்குவேன்

பொன்மொழி :

கண்களை மட்டும் கவருவது அழகு! அன்புடன் கூடிய நற்செயல்கள் மனதையும், ஆன்மாவையும் கவரும். ---- அல்க்ஸாண்டர் போவ்

பொது அறிவு :

1. உலகின் அகலமான நதி எது? 

அமேசான் நதி. 



2. குறைந்த நேரத்தில் சூரியனை சுற்றி வரும் கோள் எது? 

புதன் கோள் (மெர்குரி).

English words & meanings :

Donate - give money to charity or poor people, 

deposit - a sum of money people put in their bank account

ஆரோக்ய வாழ்வு :

கண்களைப் பாதுகாப்பதற்கான குறிப்புகள்

  • இரண்டு தேக்கரண்டி உப்பை ஒரு லிட்டர் இளம் சூடான நீரில் சேர்த்து, கண்களைக் கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும்.
  • ஒரு சிறிய வெந்நிறத்துண்டை, மஞ்சள் நீரில் நனைத்து நிழலில் உலர்த்தி வைத்து கொள்ள வேண்டும். கண்நோய் உள்ளவர்கள் அந்த வெண்ணிறத் துண்டுகளைக் கொண்டு கண்களை துடைத்துவர கண்சிவப்பு, கண்வலி, கண்ணில் நீர்கோர்த்தல் இவைகள் சரியாகும்.
  • உடல் சூட்டினால் அல்லது கண்ணில் அடிபட்டதாலோ கண் சிவந்து காணப்படுவது உண்டு. இதற்கு புளியம்பூவை அரைத்து கண்களைச் சுற்றிப் பற்று போட்டு வந்தால் கண்கள் சிவப்பது சரியாகும்.
  • மருதோன்றி இலையை அரைத்து தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து குளித்தால் கண் சிவப்பு நீங்கும்.
  • நந்தியாவட்டைப் பூவை கண்களில் ஒற்றிக்கொண்டால் கண்வலி நீங்கும்.
  • கண் பார்வைத் தெளிவு பெற கொடி முந்திரிப் பழம் சாப்பிட்டு வர வேண்டும்.
  • நெல்லிக்காயை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் கண்கள் குளிர்ச்சிபெறும்.
  • மிளகு, சீரகம் இவற்றில் சிறிதளவு எடுத்து பொடி செய்து, எண்ணெயில் காய்ச்சி, அந்த எண்ணெயைத் தலையில் தேய்த்துக் குளித்தால் கண்ணிலிருந்து நீர்வடிதல் மற்றும் கண் எரிச்சல் குணமாகும்.
  • பொன்னாங்கண்ணிக் கீரையுடன் நெய்யையும் சேர்த்து வதக்கி அடிக்கடி சாப்பிட்டு வந்தால் கண் நரம்புகள் பலப்படும், பார்வை தெளிவடையும்.
  • மல்லித்தழை மற்றும் கேரட்டை தேங்காய்ப்பால் சேர்த்து அரைத்து தினமும் குடித்துவர கண் நரம்புகள் பலப்படும்.

கணினி யுகம் :

Shift + R - Add rounded box, 

Shift + S - Add segmented line


நீதிக்கதை

 மனித மனத்தின் ஆசை

இந்த உலகத்தையே ஆளுகின்ற அதிகாரம் என் ஒருவனுக்கு மட்டுமே கிடைக்கவேண்டும் என்று பேராசை கொண்டான் ஒரு மன்னன். தன் குருவிடம் சென்று அதற்கு வழியும் கூறுமாறு கேட்டான். குருஜி, மன்னனுக்கு புத்தி புகட்ட விரும்பினார். அவர் அரசனிடம், சொல்கிறேன். அதற்கு முன்பு எனக்கு ஒரு காரியம் ஆக வேண்டும் என்றார். அரசன் ஆவலுடன், சொல்லுங்கள்! சொல்லுங்கள்! என்றான். ஒன்றுமில்லை, இந்த செப்புக்குடுவையை உன்னால் முடிந்ததைக் கொண்டு நிரப்பித் தருவாயாக! என்றார்.

அட! இதென்ன பெரிய விஷயம் என்று எண்ணியபடியே, பணியாளரை அழைத்தான். அவரிடம், பொற்காசுகள் நிறைந்த பட்டுத்துணி மூட்டை ஒன்றைத் தந்து அந்தக் குடுவையை நிரப்பச் சொன்னான். அவரும் பொற்காசுகளை அந்தக் குடுவையில் கொட்டினர். குடுவை நிறையவேயில்லை! அது மிகவும் சிறியதுதான். போடப்போட பாதிக்குமேல் காலியாகவே இருந்தது. இன்னும் நிறையக் காசுகள் கொட்டப்பட்டன. அதுவோ நிறையாமலே இருந்தது.

குருஜி, என்ன அரசரே, இந்த சின்னக் குடுவையை நிறைக்க முடியவில்லையா? என்று கேலியாகக் கேட்டார். மன்னனுக்கு அவமானமாகிவிட்டது. கஜானாவிலிருக்கும் பொற்காசுகள், மற்றும் விலையுயர்ந்த மணிகள் எல்லாவற்றையும் கொண்டுவரச் சொன்னான். அனைத்தையும் போட்டாகிவிட்டது. அப்போதும் அந்த மாயப்பாத்திரம் நிறையவே இல்லை. கஜானாவும் காலியாகிவிட்டது. மன்னன் மனம் கலங்கினான். உடலும் உள்ளமும் ஓய்ந்து போனது.

ஐயா, இது என்ன மாயம்? என்ன பாத்திரம் இது? என் மொத்த கருவூலமும் காலியாகி விட்டதே! பாத்திரம் மட்டும் நிறையவே இல்லையே? என்று கலங்கிப்போய்க் கேட்டான். அரசே, இது மனித மனத்தின் ஆசை என்ற பொருளினால் செய்யப்பட்ட குடுவை! இதை நிரப்பவே முடியாது! ஆசைக்கு ஏது அளவு? என்றார். மன்னனுக்குப் புரிந்தது. அவன் குருவை வணங்கினான். மனம் தெளிவு பெற்றது.

இன்றைய செய்திகள்

30.10.21

* மேற்கு வங்கத்தில் அனைத்து வகை பட்டாசுகளையும் வெடிக்கவும், விற்பனை செய்யவும் உயர்நீதிமன்றம் தடை.

* அரசுப் பள்ளி வறுமையின் அடையாளம் அல்ல, பெருமையின் அடையாளம் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். அரசு பள்ளிகளுக்கு பலரும் உதவி செய்வது பெருமையாக உள்ளது. அரசு பள்ளிகளுக்கு உதவ இணையதள பக்கம் உருவாக்க உள்ளோம், அதன்மூலம் உதவலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

* கீழடியில் அகழாய்வு பணி நடைபெற்ற இடங்களை பார்வையிட்டார்  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் .

*  காஷ்மீரில் பனிப்பொழிவால் ஆப்பிள் தோட்டங்களுக்கு ஏற்பட்ட பெரும் சேதத்தை இயற்கை பேரிடராக அரசு அறிவித்துள்ளது. பனிப்பொழிவால் பாதிக்கப்பட்ட ஆப்பிள் தோட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும். எந்த விவசாய நிலமும் வெளியாட்களுக்கு வழங்கப்படவில்லை, நிலத்தை பாதுகாப்பது அரசின் பொறுப்பு என்று ஆளுநர் மனோஜ் சின்கா தெரிவித்துள்ளார்.

* 11 ஆண்டுகளுக்கு பின்னர் கர்நாடக மாநிலத்தில் உள்ள 124.80 அடி உயரம் கொண்ட கிருஷ்ணராஜ சாகர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது. அணை நிரம்பியதால் இன்று மதியத்துக்குள் அதிப்படியான தண்ணீர் வெளியேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* டி20 உலகக்கோப்பை தொடர்:  சார்ஜாவில் இன்று நடைபெற்ற  23-வது லீக் ஆட்டத்தில்  வங்காளதேசத்தை 3 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெஸ்ட்  இண்டீஸ் அணி ’திரில்’ வெற்றி பெற்றது.

* பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து மற்றும் லட்சயா சென் 3வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

Today's Headlines

* The West Bengal high Court banned all types of crackers and their sales.

* Education Minister Anbil Mahesh said, "Government schools are the symbol of pride, not poverty". And also he said "I am proud by the fact that many are helping government schools. So we are going to create a platform for the people who are willing to help the government schools. They can help through this"

* Tamil Nadu CM visited the excavation site at keezhadi

* The damage of Apple Orchards at Kashmir is declared a Natural Disaster by the Government. The government also said the farmers will get the compensation amount for their loss. " No farmland is given to outside people. It is our duty to protect the land" said Governor Sinha Manoj

* After 11 years the Krishnaraja Sahar Dam in Karnataka reached its full capacity of 124.80 feet. As the dam is filled it is expected that there will be the release of water.

*T20 World cup: In the 23rd League Play West Indies won Bangladesh by only 3 runs and gave a thrill to everyone who is watching it.

* In French open Badminton match P. V. Sindhu and Latchaya of India reached the 3rd round.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

ஆசிரியர்கள் தேவை - 29.10.2021

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 2020-21ஆம் ஆண்டிற்கான CPS கணக்கீட்டுத் தாள் வெளியிடப்பட்டுள்ளது!!!

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 2020-21ஆம் ஆண்டிற்கான CPS கணக்கீட்டுத் தாள் வெளியிடப்பட்டுள்ளது!!!

Flash news : 7 மாவட்ட பள்ளிகளுக்கு கனமழை விடுமுறை அறிவிப்பு.

கனமழை விடுமுறை அறிவிப்பு.( 29.10.2021) 

10th Tamil - Pre Quarterly Exam 2021 - Model Question Paper

 

 

PGTRB 2021 Exam - New circular

TIME TABLE- CLASS- 6,7,8- PDF

DSE - அரசுப் பணியாளர் ஒவ்வொருவரும் தன்னுடைய சொத்து மற்றும் கடன் விவர அறிக்கையினை சமர்ப்பிக்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.

பள்ளிக் கல்வி - தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதிகள் 1973 - சொத்து மற்றும் கடன் விவர அறிக்கையை சமர்ப்பிக்க பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு .
.com/img/a/

இணைப்பு:

 மனித வள மேலாண்மைத் துறையின் கடிதம்.

.com/img/a/

அரசுப் பணியாளர்கள் தமது சொத்து மற்றும் கடன் விவர அறிக்கையினை உரிய காலத்தில் சமர்ப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டது.

தமிழ்நாடு அரசு பணியாளர் நடத்தை விதிகள் 1973 ( Tamil Nadu Government Servant Conduct Rules 1973 ) விதி 7 ( 3 ) -ன்படி அரசுப் பணியாளர் ஒவ்வொருவரும் தன்னுடைய சொத்து மற்றும் கடன் விவர அறிக்கையினை அவ்விதியில் குறிப்பிட்டுள்ளவாறு ( அட்டவணை 1 ல் உள்ள படிவம் 1 முதல் V வரையிலான ) உரிய காலத்தில் சமர்ப்பித்தலை உறுதி செய்யுமாறு அனைத்து துறைச் செயலாளர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

PGTRB English - Unit 1 Study Materials

 

Polytechnic - IT - Unit Test Question Papers

 

PGTRB Economics - Model Question Paper

 

 

11th Commerce - Study Notes

 

 

11th Accountancy - Practice Notes

 

 

 

12th Tamil - Revision Test Model Question Paper

 


 

TNPSC Group Exam 2 - Biology Study Notes

 

 

10th Maths - One Marks Question Paper

 

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 27.10.21

   திருக்குறள் :

பால்: பொருட்பால்

இயல்: அரசியல்

அதிகாரம்: குற்றம் கடிதல் 
எண்: 438

குறள்:
பற்றுள்ள மென்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதொன் றன்று.

பொருள்:
எல்லாக் குற்றங்களையும்விடத் தனிப்பெருங் குற்றமாகக் கருதப்படுவது பொருள் சேர்ப்பதில் பற்றுக்கொண்டு எவருக்கும் எதுவும் ஈ.யாமல் வாழ்வதுதான்.

பழமொழி :

A hearty laugh dispels disease.
வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்

இரண்டொழுக்க பண்புகள் :

1. பெற்ற உதவிக்கு நன்றி சொல்லுவேன். செய்த தவறுக்கு மன்னிப்பு கோருவேன். 

2. இதன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்து என் வாழ்வில் சிறந்த மனிதனாக விளங்குவேன்

பொன்மொழி :

ஒவ்வொருவரின் விதியும் அவனவன் கையில்தான் உள்ளது.விதையின் சக்திதான் மரமாக வளர்கிறது.காற்றும் நீரும் அதற்கு வெறும் உதவி மட்டுமே செய்ய முடியும்

பொது அறிவு :

1.மனிதனின் பற்களிலுள்ள எனாமல் எதனால் ஆனது? 

கால்சியம் பாஸ்பேட்.

2. மனிதனின் கால் பாதங்களில் எத்தனை எலும்புகள் உள்ளன? 

16 எலும்புகள்.

English words & meanings :

Get cold feet - suddenly become nervous to do the things already planned, கடைசி நேரத்தில் ஒரு பணி முடிக்க பயம் கொள்ளுதல், 

piece of cake - very easy to do, எளிதாக ஒரு காரியம் செய்தல்

ஆரோக்ய வாழ்வு :

நீங்களே முதல் உதவி செய்யலாம்

பொதுவான விதிகள்

விதி 1: பாதிக்கப்பட்டவருக்குத் தெரிந்தோ, தெரியாமலோ… நம்மால் எந்த ஊறும் நேர்ந்துவிடக் கூடாது. ‘உதவி செய்கிறோம்’ என்று போய், நம்மை அறியாமல் அவர்களுக்கு எந்தக் கூடுதல் கஷ்டத்தையும் ஏற்படுத்திவிடக் கூடாது. சாதாரண எலும்பு முறிவாக இருந்தது, கூட்டு எலும்பு முறிவாக மாறிவிட நாமே காரணமாக இருந்துவிடக் கூடாது.

உதாரணத்துக்கு, ஒரு வாகன விபத்தில் அடிபட்டவரின் ஹெல்மெட்டைக் கழற்றும்போது கூட, மிக மிகக் கவனமாகக் கழற்ற வேண்டும். ஏனெனில், கழுத்தில் எந்தப் பிரச்னையும் இல்லாமல், நிலையாக இருப்பது முக்கியம். அதேபோல் கட்டடத்தின் உயரத்திலிருந்து ஒருவர் விழுந்துவிட்டால், அவரைத் தூக்கும்போது கழுத்துக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.

விதி 2: பாதுகாப்பு மிக முக்கியம். எந்த ஒரு அவசரகட்டத்திலும் மூன்று நபர்கள் இருப்பார்கள். அதாவது, பாதிக்கப்பட்டவர், உதவச் செல்லும் நாம், நமக்கு அருகில் இருப்பவர்கள்… இந்த மூன்று பேருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

விதி 3: பொது அறிவு முக்கியமாகத் தேவை. அங்கே உடனடியாகக் கிடைக்கும் அல்லது இருக்கும் வசதிகளைவைத்து எப்படி உதவலாம் என்ற சமயோசித புத்தியுடன் சாமர்த்தியமாகச் செயல்படும் வேகமும் வேண்டும்.ரத்தக்காயம் / வெட்டுக்காயம்: குழந்தைகள் விளையாடும்போதும் சாதாரணமாக நடக்கும்போதும் கீழே விழுந்து அடிபடுவதும் ரத்தம் வருவதும் சகஜம். அப்போது, காயம்பட்ட இடத்தை, குழாயிலிருந்து வரும் சுத்தமான நீரால் (running water) கழுவ வேண்டும்.

சோப் போட்டுக் கூடக் கழுவலாம்.காயம்பட்ட இடத்தில் ரத்தம் வந்தால், சுத்தமான துணியால் அழுத்திக் கட்டுப்போட வேண்டும். பவுடர், சந்தனம், மஞ்சள், காப்பித் தூள் என்று எந்தப் பொருளையும் காயத்தின் மீது போடக் கூடாது.

சமீபத்தில் ‘டெட்டனஸ் டெக்ஸாய்டு’ தடுப்பூசி போடப்பட்டிருந்தால், திரும்பவும் அது போடத் தேவை இல்லை. இப்போதெல்லாம் எல்லோருமே தொடர்ந்து தடுப்பூசிகள் போட்டு வருவதால், 10 வருடங்களுக்கு ஒருமுறை ‘டி.டி’ போட்டால் போதும்.குழந்தைகளுக்கு உடலில் வலுக்குறைவு என்பதால், வெட்டுக்காயம், பூச்சிக்கடி போன்ற என்ற விபத்தாக இருந்தாலும், அவர்களால் அதிக நேரம் தாக்குப்பிடிக்க முடியாது. எனவே முதல் உதவிக்குப் பிறகு, உடனே மருத்துவமனைக்குச் சென்றுவிட வேண்டும். அலட்சியமாக இருக்கக் கூடாது.




கணினி யுகம் :
Alt + F4 - Close current open program. 
Alt + Enter - Open properties window of selected icon or program
அக்டோபர் 27
அக்பர் அவர்களின் நினைவுநாள்  




அபுல்-பத் சலால்-உத்-தின் முகம்மத் அக்பர் அக்டோபர் 1542– 27 அக்டோபர் 1605),என்ற இயற்பெயரும், மகா அக்பர் என்று பொதுவாகவும்,(அக்பர்-இ-ஆசம் اکبر اعظم) மேலும் முதலாம் அக்பர் என்றும் அழைக்கப்படும் இவர்  மூன்றாவது முகலாயப் பேரரசர் ஆவார். இவர் 1556 முதல் 1605 ஆம் ஆண்டு வரை ஆட்சி புரிந்தார். அக்பர் தனது தந்தை உமாயூனுக்கு பிறகு ஆட்சிக்கு வந்தார். 14 வயதிலேயே ஆட்சிக்கு வந்த அக்பர் பைரம் கான் என்கிற பிரதிநிதியின் உதவியுடன் ஆட்சி புரிந்தார். இந்தியாவில் முகலாயர் பகுதிகளை விரிவாக்கவும் நிலைநிறுத்தவும் இளம் பேரரசருக்கு பைரம் கான் உதவி புரிந்தார்.

நீதிக்கதை

ரௌத்திரம் பழகு

ஒரு ஊருல ஒரு திமிர் பிடிச்ச யானை வாழ்ந்துகிட்டு வந்துச்சு ,அது ரொம்ப பெருசா இருக்குறதால ரொம்ப திமிரா இருந்துச்சு. அந்த யானை எப்பவும் மத்த மிருகங்களுக்கு தொல்லை கொடுத்துகிட்டே இருந்துச்சு . அந்த யானைய பாத்தாலே எல்லா மிருகங்களும் ஓடி போயிடும். அந்த காட்டுல ஒரு எறும்பு கூட்டமும் வாழ்ந்துகிட்டு இருந்துச்சு , அந்த எறும்புங்க எப்பவும் சுறுசுறுப்பா இருந்துச்சுங்க. அதுங்க எப்பவும் தங்களோட உணவ சேமிச்சு வைக்கிற வேலைய பாத்துகிட்டே இருந்துச்சுங்க.

ஒருநாள் அந்த எறும்புங்க செய்ற வேலைய பாத்த அந்த யானை பக்கத்துல இருந்த குளத்துக்கு போயி தண்ணிய தன்னோட துதிக்கையால எடுத்துட்டு வந்து அந்த எறும்புங்க மேல அடிச்சி விட்டுச்சு,அந்த எறும்புங்க தங்களோட சாப்பாடு எல்லாம் நனைஞ்சு போனத பாத்து ரொம்ப வறுத்த பட்டுச்சுங்க. தொடர்ந்து அந்த எறும்புகளுக்கு தொல்லை கொடுத்துகிட்டே இருந்துச்சு அந்த யானை.

ஒருநாள் ரொம்ப கோபமான ஒரு எறும்பு தன்னோட தாத்தா கிட்ட போயி நடந்த சொல்லுச்சு ,அதுக்கு அந்த தாத்தா சொன்னாரு.ரௌத்திரம் பழகு ,அப்படிங்கிற பழமொழிக்கு என்ன அர்த்தம் தெரியுமா ,கோபப்பட வேண்டிய விசயத்துக்கு சகிச்சிக்கிட்டு இருக்க கூடாது அப்படின்னு சொல்லுச்சு.

உடனே அந்த சின்ன எறும்பு அந்த யானை இருக்குற இடத்துக்கு போச்சு ,அங்க அந்த யானை படுத்து தூங்கிக்கிட்டு இருந்துச்சு. அதோட துதிக்கைக்குள்ள போன அந்த எறும்பு மெதுவா கடிக்க ஆரம்பிச்சது.வலிதாங்காத யானை யார் என்னோட துதிக்கைக்குள்ள கடிக்கிறதுன்னு கேட்டு அலறுச்சு.

எங்களை சின்ன விலங்குன்னு தான நீ எங்க மேல தண்ணி ஊத்தி விளையாண்ட இப்ப உன்ன என்ன பண்றேன்னு பாருன்னு சொல்லி திரும்ப திரும்ப கடிச்சது. வலிதாங்க முடியாத யானை,  துதிக்கைல இருந்து வெளிய வந்த அந்த எறும்ப பாத்து சொல்லுச்சு தயவு செஞ்சு என்ன மன்னிச்சுடுங்க என்னால உங்களுக்கு இனிமே தொந்தரவு இருக்காதுன்னு சொல்லுச்சு

குழந்தைகளா நாம பலசாலியா இருந்தா அடுத்தவங்கள தொல்லை படுத்தக்கூடாது ,அதே நேரத்துல பலம் குறைவா இருந்தா யார பாத்தும் பயப்பட கூடாது.


இன்றைய செய்திகள்

27.10.21

★பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் சிலம்பாட்டத்தை சேர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மாநில சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

★தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது: கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.

★தீபாவளி இனிப்பு வழங்கும்பட்சத்தில் ஆவின் இனிப்பு வகைகளையே கொள்முதல் செய்ய வேண்டும் என அரசுத்துறை செயலாளர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

★தமிழகத்தில் செயல்பட்டு வரும் அனல்மின் நிலையங்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக நச்சு வாயுக்களை வெளியிட்டு வருவது, 'பூவுலகின் நண்பர்கள்' அமைப்பு மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

★இந்தியாவில் கடந்த 2020-ம் ஆண்டில் மட்டும் இயற்கைப் பேரழிவுகளான புயல், வெள்ளம் மற்றும் வறட்சி ஆகியவற்றால் ரூ.65.33 லட்சம் கோடி  இழப்பு ஏற்பட்டுள்ளது என்று உலக வானிலை மையம் கணித்து அறிவித்துள்ளது.

★சீனாவில் மீண்டும் பரவும் கரோனா டெல்டா வைரஸ்: மக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை.

★உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் முதல் சுற்றில் இந்திய வீரர்கள்   
ஆகாஷ் சங்வான்,  ரோஹித் மோர் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

★பார்முலா1 கார்பந்தயத்தில் நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் முதலிடத்தை பிடித்து 25 புள்ளிகளை தட்டிச் சென்றார்.


Today's Headlines

 🌸 Minister of State for Environment, Climate Change, and Youth Welfare and Sports Development said that steps are being taken to include Silambattam in the school curriculum.

 🌸 Northeast monsoon begins in southern states including Tamil Nadu: Meteorological Department warns for heavy rains.

🌸The Chief Secretary has sent a circular to all the Secretaries of State asking them to purchase only Avin sweets while purchasing sweets for Deepavali distribution.

 🌸 Thermal power plants operating in Tamil Nadu are emitting more toxic gases than allowed, according to a study by 'Friends of the Earth'.

 🌸 The World Meteorological Organization (WMO) has estimated that India will lose Rs 65.33 lakh crore due to natural disasters such as storms, floods, and droughts in 2020 alone.

 🌸Corona delta virus spreading again in China: People were banned from leaving their homes.

 🌸 Indian Akash Sangwan and Rohit More won the first round of the World Boxing Championship.
 

 🌸 Netherlands' Max Verstappen took first place in Formula 1 car racing and scored 25 points.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

12th Bio Botany - Answer Keys for Refresher Course Module 2021-2022

 

Covid slogans for Schools

 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive