Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Latest 12th Study Material | Chemistry - English Medium

  1. Chemistry - 3,5,10 Mark Study Material | Mr. S.Prabakar - English Medium

மாணவியர் படிக்கும் பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த திட்டம் !

                  கர்நாடகா மாநிலத்தில், மாணவியர் அதிக எண்ணிக்கையில் படிக்கும் அரசு பள்ளிகளில், கண்காணிப்பு கேமரா பொருத்த, கல்வித் துறை திட்டமிட்டு உள்ளதுமாணவியரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அரசு பள்ளிகளில், கண்காணிப்பு கேமரா பொருத்த, 60 கோடி ரூபாய் வழங்கும்படி, கல்வித் துறை, கர்நாடகா அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது
 

0 -18 வயது குழந்தைகள் வயது என அறிவிக்க வேண்டும்

            குழந்தைகளுக்கான வயது வரம்பை 14ல் இருந்து 18 ஆக உயர்த்தும் வகையில், அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தம் வேண்டும் என குழந்தை உழைப்பு எதிர்ப்பு பிரசார இயக்கம் வலியுறுத்தி உள்ளது.

பாலிசி பத்திரம்தொலைந்தாலும் பணம் பெறலாம்

        இன்சூரன்ஸ் பாலிசி யின் முதிர்வு தொகை பெறுவது குறித்து, எல்..சி.,யின் வாடிக்கையாளர் சேவைப் பிரிவின் மண்டல மேலாளர் வி.விஜயராகவன்: பாலிசி யின் தன்மையின் அடிப்படையில், பாலிசி முதிர்வு குறித்த தகவல்கள், மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு முன்பே, கடிதம், பதிவுத் தபால், மெயில் மூலமாக, பாலிசிதாரருக்கு தெரிவிக்கப் படும்.
 

கடந்த 4 நாட்களாக தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் நடத்தி வந்த வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்

      சென்னையில் இன்று போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜியுடன்போக்குவரத்து கழகத்தின் 11 சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவு எட்டப்பட்டதை அடுத்து போராட்டம் திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதனால், கடந்த நான்கு நாட்களாக போக்குவரத்து இல்லாமல் அவதிப்பட்டு வந்த பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளனர்.
 

குரூப்-1 தேர்வு அறிவிப்பு ஜனவரியில் வெளியாகிறது!

          காவல்துறையில் அதிகாரிகள் பணியிடங்கள் அதிகம் காலியாக இருப்பதால், குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு ஜனவரியில் வெளியாகிறது என்று சென்னையில் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் சி.பாலசுப்பிரமணியன் நேற்று கூறினார்.

சிறப்பு ஆசிரியர்களுக்கான‌ சம்பளம் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது

     தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள், உடல் ஊனமுற்றோர் உள்ளிட்ட சிறப்பு குழந்தைகள் பலர் படித்து வருகிறார்கள். இந்த குழந்தைகளுக்கான சிறப்பு ஆசிரியர்களுக்கு 2013-14-ம் ஆண்டு சம்பளம் வழங்கப்படாமல் இருந்தது.

குரூப் 1 முதல் நிலைத் தேர்வு முடிவுகள் 15 நாள்களில் வெளியாகும்: டி.என்.பி.எஸ்.சி.

            குரூப் 1 முதல் நிலைத் தேர்வின் முடிவுகள் அடுத்த 15 நாள்களில் வெளியாகும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் சி.பாலசுப்பிரமணியன் (பொறுப்பு) தெரிவித்தார்.

இரவில் அழைப்பு; காலையில் 'கவுன்சிலிங்'; அடித்து பிடித்து பங்கேற்ற ஆசிரியர்கள்

            மதுரையில் தொடக்க கல்வித் துறையில் இரவு அழைப்பு விடுக்கப்பட்டு மறுநாள் காலை 'கவுன்சிலிங்' நடத்தப்பட்டதால் ஆசிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
 

ஓட்டுனர், நடத்துனர் பணிகளுக்கு எழுத்து தேர்வு இல்லை: தனி நீதிபதியின் உத்தரவுக்கு 'டிவிஷன் பெஞ்ச்' தடை

            போக்குவரத்து கழகங்களில், ஓட்டுனர், நடத்துனர் பணியிடங்களுக்கு, எழுத்து தேர்வு மூலம் ஆட்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு, உயர் நீதிமன்ற 'டிவிஷன் பெஞ்ச்' தடை விதித்துள்ளது.

வணிகவரி துறை உட்பட 18 துறைகளுக்கு உதவி அதிகாரி பதவிகள்: குரூப்-2 தேர்வில் வெற்றிபெற்றவர்களின் சான்றிதழ்களை சரிபார்க்கும் பணி தொடங்கியது

          ஜனவரி 27-ந் தேதி வி.ஏ.ஓ. பணிக்கு கவுன்சிலிங் என்று டி.என்.பி.எஸ்.சி. தகவல்

           குரூப்-2 எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி நேற்று முதல் தொடங்கியது. கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஜனவரி 27-ந் தேதி முதல் சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

முதுகலை மருத்துவப் படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு.

          சர்தார் பட்டேல் பல்கலைக்கழகத்தில் முதுகலை மருத்துவப் படிப்புக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 2015-16ம் கல்வியாண்டில் எம்.டி, எம்.எஸ்., படிப்புகள் வழங்கப்படுகின்றன.

"சாதனைக்கு, வறுமையோ, சூழ்நிலையோ தடையல்ல"!!!

         சாதனைக்கு, வறுமையோ, சூழ்நிலையோ தடையல்ல; ஆர்வம், முயற்சி, கடின உழைப்புகளே தேவை என, கனடா நாட்டின் குயின்ஸ் பல்கலையின் கணித ஆய்வாளர் ராமமூர்த்தி பேசினார்.

TNPSC 2015-ம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை

         2015-ம் ஆண்டுக்கான-டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை ஜனவரி இறுதியில் வெளியிடப்படும் .,என சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய டிஎன்பிஎஸ்சி தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.

நல்லாசிரியர் விருது - தேர்வுக் குழு அமைத்தல்!

       2014-ம் ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருது - பெறுவதற்கு தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்து கருத்துகளை அனுப்புதல் மற்றும் மாவட்ட தேர்வுக் குழு அமைத்தல்

பள்ளி மாணவர் ஆதார் எண்ணை பெற்று பதிவு செய்யுங்கள்: தலைமை ஆசிரியர்களுக்கு கல்வி துறை உத்தரவு

          'பள்ளி மாணவர்களின் ஆதார் எண்களை பெற்று, அதை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்' என, தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

ஆசிரியர் போட்டி தேர்வு: புதிய விடைத்தாள் அறிமுகம்

           ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும், முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு, ஜன., 10ல் நடக்க உள்ளது. இதை கண்காணிக்க, மாவட்டங்களில் கலெக்டர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது.
 

தமிழக மாணவர்களுக்கு 17 தங்க பதக்கம்

         தேசிய அளவில், பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. இந்தாண்டு, இப்போட்டிகளை தமிழகம் நடத்துகிறது. சேலத்தில் நடக்கும் இதில், மேஜைப்பந்து, பேட்மிட்டன் உள்ளிட்ட போட்டிகள், பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்படுகின்றன.
 

அழகப்பா பல்கலை., தொலை நிலை கல்வி சான்றிதழில் குளறுபடி:மாணவர்கள் புகார்

          காரைக்குடி அழகப்பா பல்கலை கழகத்தின் சார்பில் மாணவர்களுக்கு அனுப்பிய மதிப்பெண் பட்டியல், பட்டய சான்றிதழில் படித்து தேர் வெழுதிய "கோர்ஸ்' பெயர் தவறுதலாக அச்சிடப்பட்டதாக மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
 

TNPSC : குரூப் 1 முதல் நிலைத் தேர்வு முடிவுகள் 15 நாள்களில் வெளியாகும்

            குரூப் 1 முதல் நிலைத் தேர்வின் முடிவுகள் அடுத்த 15 நாள்களில் வெளியாகும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் சி.பாலசுப்பிரமணியன் (பொறுப்பு) தெரிவித்தார்.

பிப். 22-இல் சைனிக் பள்ளி நுழைவுத் தேர்வு

           உடுமலையை அடுத்த அமராவதிநகர் சைனிக் பள்ளியில் வரும் ஜனவரி 4-ஆம் தேதி நடைபெறவிருந்த நுழைவுத் தேர்வுகள் பிப்ரவரி 22-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம், மகளே! - நா.முத்துநிலவன் கட்டுரை

         என் அன்பு மகளுக்கு, உன் அப்பா எழுதுவது. நானும் உன் அம்மாவும் இங்கு நலம். அங்கு உன்னோடு விடுதியிலிருக்கும் உன் தோழியரும், உன் வகுப்பு நண்பர்களும், உன் மதிப்பிற்குரிய பேராசிரியர்களும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

போக்குவரத்து ஊழியர்களுக்கு அகவிலைப்படி 107 சதவீதமாக உயர்வு

         அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியை 107 சதவீதமாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தொடர் நீட்டிப்பு ஆணை!

         இருபாலர் மேனிலைப்பள்ளிகளிலிருந்து 2014-2015ஆம் ஆண்டில் பிரிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட 20 அரசு பெண்கள் மே.நி.பள்ளிகளுக்கான தொடர் நீட்டிப்பு ஆணை

மாணவர்கள் தொழில்நுட்ப அறிவுக்கு முக்கியத்துவம், கணினி இனி அவசியம்

              போட்டிகள் நிறைந்த இன்றைய தொழில்நுட்ப உலகில், கம்ப்யூட்டர் சார்ந்த பயிற்சிகள் முற்றிலும் அல்லாமல், அரசு பள்ளி மாணவர்கள் வேலைவாய்ப்பில் பின்தங்குவதாக சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

ஆசிரியர் செயல்திறன் மதிப்பீடு: ஆன்-லைனில் பதிவு தீவிரம்

           ஒன்று முதல் எட்டாம் வகுப்பில், ஆசிரியர் செயல்திறன் மதிப்பீடு முடிந்து, அந்த விபரங்கள் அனைத்தும் ஆன்-லைனில் பதிவு செய்யும் பணி, வட்டார வளமையங்களில் தீவிரமாக நடக்கிறது.

வீடுகளில் தனியாக இருப்போர் பாதுகாப்பாக இருப்பது எப்படி? போலீஸ் அறிவுரை

போலீஸ் அறிவுரை
        காவல் ஆய்வாளர் சிவக் குமார் கூறுகையில், "காலிங் பெல் அடித்தவுடன் கதவைத் திறக்காமல் வந்திருப்பது யார் என்று உறுதிசெய்ய வேண்டும். கதவில் லென்ஸ் அல்லது கதவை கொஞ்சம் மட்டும் திறக்கும் சங்கிலி வைப்பது அவசியம். அறிமுகம் இல்லாதவர்களை அனு மதிக்க
வேண்டாம். மரக் கதவுக்கு முன்னால் ஒரு இரும்புக் கதவு அமைப்பது கூடுதல் பாதுகாப்பு.

பொங்கல் பரிசாக நிலுவை தொகை? பகுதி நேர ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

         முன் தேதியிட்டு அறிவிக்கப்பட்ட சம்பள உயர்வு, கடந்த மாதம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நிலுவை தொகை வரும் பொங்கல் பண்டிகைக்கு முன் வழங்கப்படுமா என, பகுதி நேர ஆசிரியர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

தமிழக அரசுப் பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்துகொள்வதற்கான வழிமுறைகள்

         வீட்டில் ஒரு பெயர் வைத்திருப்பார்கள், விரும்புவது வேறு பெயராக இருக்கும். சிலர் பெற்றோர் வைத்த பெயரை மாற்ற நினைப்பதும் உண்டு. தவிர, ஒருவர் தன் பெயரை நியூமராலஜிப்படியோ, ஜாதகப்படியோ அல்லது ஒரு நல்ல தமிழ்ப் பெயரையோ சூட்டிக்கொள்ளவும் விரும்பலாம். சரி, அதற்குரிய வழிமுறைகள் என்ன, தமிழக அரசுப் பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்வது எப்படி?

அதிகமாக பாலியல் வன்முறை ஏற்பட அடிப்படைக் காரணம் என்ன? by Dr.Shalini

          நாம் மனிதர்கள் மத்தியில்தான் வாழ்கிறோமா என்கிற ஐயத்தை அவ்வப்போதைய சம்பவங்கள் உணர்த்துகின்றன. அண்மைக்காலமாக இந்தியாவெங்கிலும் அதிகரித்துவரும் பெண்கள் மீதான பாலியல் வன்முறை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கிராமங்களில், சிறு நகரங்களில் தொடர்ந்து நடந்துவரும் இத்தகைய வன்முறைகளின் மீது கவனம் கொள்ளாத ஊடகங்கள், தலைநகர் டெல்லியில் நடைபெறும்போது அச்செய்தியை நாடெங்கும் கொண்டுசென்றுவிடுகின்றன.
 

ஆபாச தகவல் தேடலில் வராமல் Lock செய்வது எப்படி..?

         நாம் வீட்டில் இல்லாத போது குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க சிறந்த வசதி google வழங்குகிறது அது எப்படி?

1. முதலில் கூகிள் தளம் சென்று உங்கள் User name, password கொடுத்து Login செய்யுங்கள்.

"பின் நோக்கிய நினைவுகள் 2014” - சொதப்போ சொதப்பென்று சொதப்பி மன்னிப்பு கேட்ட பேஸ்புக்!

        உலக மக்கள் அனைவரையும் கட்டிப் போட்டுள்ள பிரபல சமூக வலைதளமான பேஸ்புக், தன்னுடைய ஒரே ஒரு சொதப்பலால் பயனர்களிடம் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுதான் "2014 ஆம் ஆண்டின் பின்னோக்கிய நினைவுகள்". 

இடஒதுக்கீட்டை 8% ஆக உயர்த்த மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தல்

            இடஒதுக்கீட்டை 5 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகளின் மாநில மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கான சக்ஷம் தொண்டு நிறுவனம் சார்பில் சக்ஷம் தக்ஷின் தமிழ்நாடு என்ற மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில மாநாடு திருப்பூர் காமாட்சியம்மன் மண்டபத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது.

அஞ்சல் துறை தேர்வு: 76,813 பேர் பங்கேற்பு

         அஞ்சல் துறையில் தமிழகத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எழுத்துத் தேர்வில் 76 ஆயிரத்து 813 பேர் கலந்து கொண்டு தேர்வெழுதினர்.

கவுரவ விரிவுரையாளர்களுக்குசம்பளம் வழங்க உத்தரவு

           அரசுக்கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஐந்து மாத சம்பள நிலுவை தொகையை வழங்க கல்லுாரிக்கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 72 அரசுக் கலைக் கல்லுாரிகள் உள்ளன. விரிவுரையாளர் பற்றாக்குறையை தவிர்க்க ரூ.10 ஆயிரம் சம்பளத்தில் கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். வகுப்புகள் நடக்கும் ஜூன் முதல் ஏப்ரல் வரை இவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும்.இரண்டாவது 'ஷிப்ட்'டில் இவர்கள் வகுப்பு எடுக்கின்றனர்.

பள்ளி மாணவர்களுக்காக முதல் இணைய அறிவுக்களஞ்சியம்: தமிழக கல்வித்துறை தொடங்குகிறது

          இந்தியாவிலேயே முதல் முறையாக பள்ளி மாணவர்களுக்கான இணைய தகவல் களஞ்சியம் தொடங்குவதென பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர் களுக்குத் தேவையான தகவல்கள் தொகுக்கப்படும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்கள் கல்விக்காக இணையதளங்களை நாடுவது அதிகரித்துள்ளது. இந்நிலையில் பல தகவல்கள்  

சராசரி தேர்ச்சிக்கு குறைவான பள்ளிகளில் எஸ்எஸ்எல்சி, பிளஸ்2 மாணவர்கள் தேர்ச்சியை அதிகரிக்க நடவடிக்கை

          சராசரி தேர்ச்சிக்கு குறைவான பள்ளிகளில் எஸ்எஸ்எல்சி, பிளஸ்2 மாணவர்கள் தேர்ச்சியை அதிகரிக்க நடவடிக்கை - தலைமை ஆசிரியர்களுக்கு இயக்குநர் உத்தரவு

மாணவர்களுக்கு ஆதார் அட்டை பள்ளிகளில் சிறப்பு ஏற்பாடு

       பள்ளி மாணவர்களுக்கு ஆதார் அட்டை வழங்க, மண்டல அளவில் சிறப்பு முகாம்களை நடத்த அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனர், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Primary CRC 03.01.2015

          03/01/2015 அன்று தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ‘Child Psychology and Enriching constitutional and cultural values” என்ற தலைப்பில் குருவள மைய பயிற்சிக் கூட்டம் நடைபெறும் - நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள்

Upper Primary CRC!

24/01/2015 அன்று உயர் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு "Managing Pre - Adolescent Children”என்ற தலைப்பில் குருவள மைய பயிற்சிக் கூட்டம் நடைபெறும் - நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள்

PG TRB- ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடி!

           தமிழகத்தில், வரும் ஜன., 10ம் தேதி முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித்தேர்வு நடக்கவுள்ளது. இத்தேர்வுகளில், முறைகேடுகளை தவிர்க்கும் நோக்கில், முதன் முறையாக,புகைப்படத்துடன் கூடிய ஓம்.எம்.ஆர்., சீட் தேர்வர்களுக்கு வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.
 

செல்போன் வெடித்து 5ம் வகுப்பு மாணவர் காயம்

                    பெரம்பலூர் அருகேயுள்ள எசனை கிராமத்தைச் சேர்ந்தவர் பூங்காவனம் மகன் ஆதிகேசவன் (வயது-12). இவர், எசனையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார்.

அடுத்த கல்வியாண்டு முதல் கேரளாவில் டிஜிட்டல் புத்தகங்கள்

             கேரள பள்ளிகளில், 'டிஜிட்டல்' பாடபுத்தகங்கள், அடுத்த கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. நாட்டிலேயே முதல் முறையாக, பள்ளிப் பாடங்கள் அனைத்தும், மல்டிமீடியா பாடங்களாக மாற்றப்பட்டு, காட்சிகள் மற்றும் ஒலிகள் மூலம் பாடங்கள் கற்றுக் கொடுக்கப்பட உள்ளன.

பதவி உயர்வு மூலம் 30.12.2014 அன்று கலந்தாய்வு

            தொடக்கக் கல்வி - புதியதாக உருவாக்கப்பட்ட 128 தொடக்கப்பள்ளிதலைமை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் தரம் உயர்த்தப்பட்ட44 நடுநிலைப்பள்ளிகளில் முதல்கணிதம்/அறிவியல் பட்டதாரி ஆசிரியர் பணியிடம் பதவி உயர்வு மூலம் 30.12.2014 அன்று கலந்தாய்வு மூலம் நிரப்ப இயக்குனர் உத்தரவு

எச்சரிக்கை.... ! ! கறிக்கோழி சாப்பிடுவோர்க்கு எச்சரிக்கை ! !

          கறிக்கோழி சாப்பிடுவோருக்கு நோய் எதிர்ப்பு மருந்துகள் வேலை செய்யாது, இது மிகப்பெரிய ஆபத்தில் போய் முடியும் என்று எச்சரிக்கிறது இந்திய விஞ்ஞானம் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (சி.எஸ்.இ) நடத்திய ஆய்வு. இதற்கு காரணம் கோழி இறைச்சியில் அதிக அளவு ஆன்ட்டி பயாடிக் இருப்பதுதானாம்.
 

TET Posting...அரசுக்கு கண்ணீருடன் கோரிககை.......

அரசுக்கு கண்ணீருடன் கோரிககை.......

         கலப்பு திருமணம் மற்றும் முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட2010-2011 ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரியிடையாக தேர்ந்து எடுக்கப்பட்ட ஆசிரியர்கள் மத்தியில் பீதி...மிகுந்த மன வேதனையில் ஆசரியர்கள்..... பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களை கவனிக்க முடியாமல் மனவேதனை..

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையில் மாற்றம் வருமா? - எதிர்பார்ப்பு

         பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை - கிராமப்புற மாணவர்கள் பாதிப்பு

           கடந்த சில நாட்களுக்கு முன் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்டது. இந்த அட்டவணை ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

CRC News ?????

Pri:03/01/15
Topic: PRI-(i)Child Psy and Enriching(i)Constitutional and
Cultural values
 
Up Pri:24/01/15 Topic- Managing Pre-adolescent children and RTE CRC News
 

சத்துணவு ஊழியர் சம்பள முரண்பாடு தமிழக அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

   ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா கடம்பூரை சேர்ந்த சண்முகசுந்தரம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
 

ஆங்கிலத்தில் மார்க் அள்ளுவது எப்படி?

           மொழிப்பாடங்களில் ஒப்பீட்டளவில் தமிழை விட எளிமையானது ஆங்கிலம். தமிழ் அளவுக்கு மெனக்கெடல் ஆங்கிலத்தில் தேவையில்லை. ஆங்கிலத்தை ஊன்றிப் படிப்பவர்களால் இதை உணர முடியும்.

Cell Phone Doubts - Simcards


 
சிம் கார்டுகள்
     நாம் 1100 காலத்தில் பயன்படுத்திய சிம்கார்டுகள் தற்காலத்தில் மிகப்பெரிய உருவ அளவு கொண்டதாக கருதப்படுகின்றன. ஏனெனில் பெரும்பாலான ஸ்மாரட் போன் நிறுவனங்கள் தங்கள் போன்களில் மைக்ரோ சிம் எனப்படும், அளவில் சிறிய சிம்கார்டுகளை பொருத்த மட்டுமே போனில் இடம் அமைத்திருப்பர். 

Padasalai's Centum Coaching Team - 12th Maths

12th Centum Coaching Team | Special Question Paper
  • Maths | Mr. M. Anand (Tamil Medium) - Click Here

10th Science Study Material

10th Science Study Material
  • Science Practical Exam Point of View | Mr. R. Amudhan - English Medium

TNPSC Group 4 Exam 2014 Answer Key With Source

             21.12.2014 அன்று நடைபெற்ற Group 4 Exam 2014 கீ ஆன்சர்களை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. அதில் உள்ள கீ ஆன்சர்களில் தவறு இருப்பின் 30.12.2014-க்குள் சுட்டிக்காட்டுமாறு டி.என்.பி.எஸ்.சி அறிவுறுத்தியுள்ளது. எனவே ஒவ்வொரு கேள்விகளுக்கும் உரிய விடைகளை உரிய ஆதாரங்களுடன் பாடசாலை வலைதளத்திற்காக தேனி, புதிய விடியல் பயிற்சி மையம் பட்டியலிட்டுள்ளது. வாசகர்களின் பார்வைக்காக.
27.12.2014 | TNPSC Group 4 Answer Key
Thanks to Pudhiya Vidiyal Coaching Centre, Theni.

Useful TNPSC Group4 Exam 2014 Links:

அடுத்த கல்வியாண்டில் 10ம் வகுப்புக்கு முப்பருவ கல்வி: பொதுத்தேர்வு முறையில் மாற்றம் வர வாய்ப்பு?

              வரும், 2015 - 16ம் கல்வியாண்டில், எஸ்.எஸ்.எல்.சி., எனப்படும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, முப்பருவ கல்வி முறையை அமல்படுத்த, மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இந்த திட்டம் அமலுக்கு வந்தால், பொதுத்தேர்வு முறையில் மாற்றம் உட்பட பல பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறி, கல்வி அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.


அரசாணை குளறுபடியால் Full Time Ph.D பயிலும் மாணவர்கள் (SC மற்றும் ST) உதவித்தொகை பெறுவதில் சிக்கல்

               ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின முழு நேர முனைவர் பட்டப்படிப்பு பயிலும் 700 மாணவர்களுக்கு ஆண்டுக்கு ஸீ50 ஆயிரம் வீதம் 4 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. 
 

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் கட்டடம் இல்லை: இடப்பற்றாக்குறையால் தேர்ச்சி குறையும் அபாயம்

          தமிழகத்தில், நான்கு ஆண்டுகளாக தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப்பள்ளிகளுக்கு, கட்டடம் உள்ளிட்ட வசதி வாய்ப்பு ஏற்படுத்தித்தராததால், ஆசிரியர்கள் விரக்தியடைந்துள்ளனர். இதனால், தேர்ச்சி விகிதம் சரியவும் வாய்ப்பிருப்பதாக, அச்சம் தெரிவித்துள்ளனர்.

உதவி பேராசிரியர் நியமனம்: மதிப்பெண் வெளியீடு

                அரசு கலை அறிவியல் கல்லூரி களுக்கு 1,095 உதவி பேராசிரியர் களை தேர்வு செய்யும் பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொண்டு வருகிறது. 

Teachers Job Portal


பள்ளிகளில் திருடு போன 'லேப்டாப்'புக்கு தலைமை ஆசிரியரே பொறுப்பு

           தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவசமாக 'லேப்டாப்' வழங்கப்படுகிறது. பல பள்ளிகளில் இரவு காவலர் இல்லாததால் லேப்டாப் திருடு போனது.
 

10ம் வகுப்பு தமிழ் மாதிரி வினாத்தாள் வெளியீடு

      தமிழ் சங்கம் வெளிட்டுள்ள அறிக்கையில், தலைவர் தாமோதரன், செயலர் ஸ்ரீதரன், காமராஜர் உயர்நிலைப் பள்ளி தாளாளர் இராசுமாறன் கூறியிருப்பதாவது:

இருப்பிடம், ஜாதி, வருவாய் உட்பட 5 சான்றிதழ்: கூட்டுறவு சங்கம் மூலம் விரைவில் வழங்க முடிவு

            ஆன் - லைன் மூலம் ஜாதி, வருவாய், இருப்பிடம் உட்பட, 5 சான்றிதழ்களை பெற்று தரும் பணியை, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம், விரைவில் துவங்க உள்ளது. இதன் மூலம் வருவாய் துறை அலுவலகத்தில் சான்றிதழுக்காக கிராமப்புற மக்கள் அலைக்கழிக்கப்படுவது தவிர்க்கப்படும்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive