Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசு உத்தரவுக்காக காத்திருக்கும் பதிவுதாரர்கள்?

          பதிவு மூப்பை மீண்டும் பெறும் சிறப்பு சலுகைக்கான அரசு உத்தரவை விரைவாக வெளியிடவேண்டும், என பதிவுதாரர்கள் காத்திருக்கின்றனர்.

          தமிழகத்தில் கடந்த கடந்த 2011 முதல் 2013 வரை மூன்றாண்டுகளில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்கள், தங்கள் பதிவு மூப்பை மீண்டும் பெற சிறப்பு சலுகை அளிக்கப்பட்டுள்ளதாக சட்டசபையில் அமைச்சர் மோகன் கடந்த 11ம் தேதி அறிவித்தார். இதையடுத்து, வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கத் தவறியவர்கள்,

          மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு வந்த வண்ணம் உள்ளனர். அதற்கான அரசு உத்தரவு விரைவில் வந்துவிடும், அதன் பிறகு வாருங்கள் என அதிகாரிகள் கூறி அனுப்புகின்றனர். 

          ஆசிரியர் தேர்வு வாரியத்தில் தேர்ச்சி பெற்ற பலர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவை புதுப்பிக்காமல் உள்ளனர்
 
               இது போன்றவர்களுக்கும், மாத உதவித் தொகை பெறுவோருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் அரசு உத்தரவுக்காக பதிவுதாரர்கள் காத்திருக்கின்றனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive