இயல் : அரசியல்
அதிகாரம்:46 சிற்றினம் சேராமை
குறள் எண்:452
குறள்:
நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு.
பொருள்:
தான் சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீர் தன் இயல்பை இழந்து, நிலத்தின் இயல்பாகவே மாறிவிடும்; மனிதரின் அறிவும் அவர் சேர்ந்த இனத்தின் இயல்பாகவே ஆகிவிடும்.
Fact is stronger than fiction.
கற்பனையை விட உண்மை விசித்திரமானது.
இரண்டொழுக்க பண்புகள் :.
1. சூழ்நிலைக்கேற்றவாறு சிந்தித்து அளவான வார்த்தைகளைப் பேசுவேன்.
2. தகாத வார்த்தைகளை ஒருபோதும் பயன்படுத்த மாட்டேன்.
பொன்மொழி :
“மாற்றம் ஒன்றே மாறாதது.”
Thought for the Day :
Time is precious; once it is lost, it never comes back. Use it wisely.
பொது அறிவு :
1. சிறைகள் இல்லாத நாடு எது?
நெதர்லாந்து.
2. இந்தியாவில் சூரிய ஒளி முதலில் தோன்றும் மாநிலம் எது?
அருணாச்சல் பிரதேசம்
English words :
**Vague** - Not clear or specific, தெளிவற்ற.
**Reluctant** - Unwilling and hesitant, தயக்கமுள்ள.
புவியியலும் சுற்றுசூழலும் :
"மாநிலங்கள் மாவட்டங்களாகப் பிரிக்கப்படுகின்றன.
உதாரணம்: தமிழ்நாட்டில் 38 மாவட்டங்கள்.
5.
மாவட்டங்கள் தாலுகாக்கள் அல்லது வட்டங்களாகப் பிரிக்கப்படுகின்றன."
NMMS :
MAT
"CONCEPTUALIZATION" என்ற வார்த்தையில் உள்ள எழுத்துகளைக் கொண்டு உருவாக்க முடியாத வார்த்தை எது??
(1) ACTUAL.
(2) TOTAL.
(3) PLANTATION.
(4) EXPLANATION.
விடை: (4) EXPLANATION
ஜூலை 17
நீதிக்கதை
"சுத்தமே செல்வம்"
ஒரு கிராமத்தில் சித்தார்த் மற்றும் பவின் என்ற இரு சகோதரர்கள் வாழ்ந்து வந்தனர். சித்தார்த் தினமும் வீட்டைச் சுத்தம் செய்து, பொருட்களை ஒழுங்காக அடுக்கி வைப்பான். ஆனால் பவின் பயன்படுத்திய பொருட்களை அப்படியே போட்டுவிடுவான். வீட்டில் ஒட்டடை , தூசி படிந்திருந்தாலும் அதைப் பற்றி கவலைப்படமாட்டான்.
ஒருநாள் அவர்களது தாத்தா வீட்டிற்கு வந்தார். அவர் ஒரு முக்கியமான நிலப்பத்திரத்தை எடுத்துக் காட்டச் சொன்னார். சித்தார்த் உடனே அலமாரியைத் திறந்து, சுத்தமாக அடுக்கி வைத்திருந்த கோப்பிலிருந்து பத்திரத்தை எடுத்துக் கொடுத்தான்.
அதே நேரத்தில், பவின் தனது பள்ளிச் சான்றிதழைத் தேடினான். ஆனால் தூசிபடிந்த அறையிலும், சிதறிக் கிடந்த பொருட்களிலும் தேடியும் கிடைக்கவில்லை .
இறுதியில், பழைய செய்தித்தாள்களுக்கு நடுவே அது மடிந்து கிடந்தது.
அப்போது தாத்தா, “வீட்டைச் சுத்தமாக வைத்திருப்பது அழகுக்காக மட்டும் அல்ல; தேவையான நேரத்தில் பொருட்களை எளிதாகக் கண்டுபிடிக்கவும், ஆரோக்கியமாக வாழவும் உதவுகிறது," என்று அறிவுரை கூறினார்.
அந்த நாளிலிருந்து பவினும் தினமும் வீட்டைச் சுத்தம் செய்து, பொருட்களை ஒழுங்காக வைத்துப் பழகினான்.
நீதி:
"வீட்டைச் சுத்தமாகவும் பொருட்களை ஒழுங்காகவும் வைத்திருப்பது நல்லபழக்கம்; அது ஆரோக்கியத்தையும், ஒழுக்கத்தையும், மனநிம்மதியையும் தரும்.”
இன்றைய செய்திகள்








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...