Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர் தகுதித்தேர்வு விடைகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மதுரை உயர்நீதிமன்றம் வழக்கின் விவரம் 1..


           2013 ஆகஸ்டில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வு விடைகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மதுரை உயர்நீதிமன்றம் வழக்கின் விவரம் 1.

BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT

DATED: 13.11.2013


பொதுத்தேர்வு மையங்களுக்கு வாடகை ஜெனரேட்டர் வசதி


              பொதுத்தேர்வு நடக்கும் மையங்களில், வாடகை ஜெனரேட்டர் வசதியை ஏற்படுத்த, தேர்வுத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கிடையே, கடந்த பொதுத் தேர்வில், வாடகை ஜெனரேட்டர் பயன்படுத்தியதற்கான கட்டண நிலுவையை, உடனடியாக வழங்கவும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, உத்தரவிடப்பட்டு உள்ளது.

பிளஸ் 2 மாணவர்கள் விவரம்: டிச., 10ல் ஆன்லைனில் பதிவு


            பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும், மாணவர்களின் விவரங்கள், வரும், 10ம் தேதி, ஆன்லைனில் பதிவு செய்யப்படுகின்றன.

விடைத்தாள், காணாமல் போவது பிரச்னைகளுக்கு, தீர்வு காண முடியும் - தேர்வுத்துறை இயக்குனர்

            வரும் பொது தேர்வில், பிளஸ் 2 மாணவருக்கு, 38 பக்கங்கள் கொண்ட விடைத்தாள் கட்டும், 10ம் வகுப்பு மாணவருக்கு, 30 பக்கங்கள் கொண்ட விடைத்தாள் கட்டும் வழங்கப்படும். இதன்மூலம், விடைத்தாள், காணாமல் போவது மற்றும் வேறு விடைத்தாளில் கலப்பது போன்ற பிரச்னைகளுக்கு, தீர்வு காண முடியும்,'' என, தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன், நம்பிக்கை தெரிவித்தார்.


இந்திய அளவில் சிறப்பான பள்ளிக் கல்வி - லட்சத்தீவுகள் முதலிடம்


          இந்திய அளவில், சிறப்பான முறையில் பள்ளிக் கல்வி வழங்கும் செயல்பாட்டில், லட்சத்தீவுகள் முதலிடம் பெறுகிறது.

சிறார்களிடையே அதிகரிக்கும் குற்ற செயல்கள் - ஆய்வில் தகவல்


            சினிமா உள்ளிட்ட பொழுதுபோக்கு சாதனங்களின் உபயோகத்தால், வயதுக்கு மீறிய செயல்களில் ஈடுபடும் சிறார்கள், அதிகளவில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவதாக, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலகம் சார்பில் கூர்நோக்கு இல்ல சிறுவர்களிடம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இடைநிலை ஆசிரியர்களின் நிலை என்ன?


               மத்திய அரசு கடந்த 2010 ஏப்ரல் 1ஆம் தேதி கட்டாய கல்வி உரிமை சட்டத்தை கொண்டு வந்தது. பல்வேறு மாநிலங்களில் தமிழ்நாட்டில் உள்ளது போல் ஆசிரியர் பணிக்கென பிரத்யேக படிப்பு இல்லாததைக் கருத்தில் கொண்டு இடை நிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்திற்கு தகுதித்தேர்வை நடத்த அறிவுறுத்தியது.

ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கான முன்னுரிமை பட்டியல் ஜனவரி முதல் நாளில் வெளியிட கோரிக்கை


           ஆசிரியர்களின் உதவி உயர்வுக்கான முன்னுரிமை பட்டியலை ஜனவரி முதல் நாளில் இருந்து வெளியிட வேண்டும் என்று ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்து உள்ளது. 
 

9,25,000 கி.மீ பயணம் செய்து புவியீர்ப்பு மண்டலத்தை கடந்தது மங்கல்யான்


            செவ்வாய் கிரகத்தை நோக்கி பயணம் செய்யும் மங்கல்யான் விண்கலம் நேற்று பூமியிலிருந்து 9 லட்சத்து 25 ஆயிரம் கி.மீ தூரத்தை தாண்டியது. இதன் மூலம் புவியீர்ப்பு மண்டலத்தை கடந்துசென்ற முதல் இந்திய விண்கலம் என்ற பெருமை மங்கல்யானுக்கு கிடைத்துள்ளது.
 

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் - 2014 தேதி அறிவிப்பு

10ஆம் வகுப்பு தேர்வு தேதிகள்:
மார்ச் 26: தமிழ் முதல்தாள், 
மார்ச் 27: தமிழ் இரண்டாம் தாள், 

பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் - 2014 தேதி அறிவிப்பு

          12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு மார்ச் 3 முதல் 25 வரையும்,10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு மார்ச் 26 முதல் ஏப்ரல் 9 வரை நடைபெறும் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 12ஆம் வகுப்புக்கு காலை 10மணிக்கு தொடங்கி மதியம் 1.15மணிக்கு முடிவடைகிறது. 10ஆம் வகுப்பிற்கு காலை 9.15மணிக்கு 12மணிக்கு முடிவடைகிறது. கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும்.  

பாடவாரியாக தேர்வு தேதிகள்: 
மார்ச் 03: தமிழ் முதல்தாள்; 

10th Latest Study Material

Tamil Study Material

  • "Vetrikku Vitthu" - Tamil Best Material - Published by CEO, Vellore District - Tamil Medium
  • Tamil Minimum Material - Published By CEO, KrishnagiriDt. - Tamil Medium

Maths Study Material

Short Cuts & Easy Methods -  English Medium
Prepared by
Mr. K. Ravi Madheswaran, BT.Asst., Vallipattu, Vellure Dt

உண்மைத்தன்மை கண்டறிய அனைத்து பல்கலைக் கழகங்களின் வரைவோலை தொகை (DD AMOUNT)


1. அண்ணாமலைப் பல்கலைக் கழகம்- 600   2. அழகப்பா பல்கலைக்கழகம்- 250   3. தமிழ்நாடு பல்கலைக் கழகம்- 500  4. இந்திராகாந்தி பல்கலைக் கழகம் -200  

12th Latest Study Material



Biology-Botany 
Important Bio-Botany 3,5,10 Mark Questions -English Medium

Prepared By Mr. Bernatsha,
 P.G.Asst. in Zoology, Global Matric.Hr.Sec.School,
Kangayam- 638 701, Tiruppur District.


டி.இ.டி., சான்றிதழை பெற டி.ஆர்.பி., அறிவுறுத்தல்


           "ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) சான்றிதழை, ஜன., 5க்குள் பெற்றுக் கொள்ள வேண்டும்" என ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி., ) அறிவுறுத்தி உள்ளது.

அரசு துவக்க, நடுநிலைபள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்கள் அடிப்படைகல்வி பெறுவதில் சிக்கல்


            தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால் மாணவர்களுக்கு அடிப்படை கல்வி போதிப்பதில் சிக்கல் நிலவுகிறது. துவக்கப்பள்ளிகளில் அடிப்படை கல்வி சிறப்பாக அமைந்தால், குழந்தைகளின் உயர் கல்வி மேலோங்கும். அடிப்படைக்கல்வி வலுவிழந்தால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. 

ஆசிரியரின் கற்பிக்கும் திறனை மதிப்பிடும் மாணவர்கள்


            மேற்குவங்கத்தின், கோல்கட்டா பிரசிடென்சி பல்கலைக்கழகத்தில், ஆசிரியர்களின் தரம் மற்றும் கற்றுக் கொடுக்கும் திறனை மாணவர்கள் மதிப்பிட உள்ளனர். தேர்வு முடிந்தவுடன், மாணவர்களிடம், ஆசிரியர்களின் திறன் குறித்து மதிப்பீடு கேட்கப்பட உள்ளது.

நெல்சன் மண்டேலா காலமானார்


          தென் ஆப்ரிக்காவின் சுதந்திர போராட்ட வீரரும்,கறுப்பின தலைவருமான நெல்சன் மண்டலோ தனது 95-வயதில் மரணமடைந்தார்.

"புக்கிங்"கில் விற்பனையாகும் ஆங்கில "வினா-வங்கி" ஏடு

          பள்ளிக் கல்வித்துறை மேற்பார்வையில், பெற்றோர் - ஆசிரியர் கழகம் சார்பில், வெளியிடப்பட்ட 10ம் வகுப்பு ஆங்கில "வினா-வங்கி" ஏடு முன்பதிவில் விற்பனை செய்யும் அளவுக்கு தேவை அதிகரித்துள்ளது. அதே சமயம், தமிழ் வழி புத்தகங்களை வாங்குவதற்கு, மாணவர்கள் முன்வரவில்லை.

ஆசிரியர்களின் ஊதியம் அதிகரிப்பு


          ஒடிசா, பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தகுதி அடிப்படையில் ஊதியம் உயர்த்தி வழங்க ஒடிசா அரசு அறிவித்துள்ளது. பணி மூப்பு மற்றும் தகுதி அடிப்படையில் வழங்கப்படும் ஊதியம், தொழில் முன்னேற்ற மேம்பாட்டு காப்பீடு ஆகியவை இந்தாண்டு முதல் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது.
 

பிளஸ் 2 தேர்வெழுத இனி இல்லை தனித்தேர்வு மையம்

 
           பிளஸ் 2 தேர்வெழுதும் தனித்தேர்வர்களுக்கு, இனி தனி தேர்வு மையம் கிடையாது என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

பள்ளி தலைமையாசிரியர்களுக்கான படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனம்

       ராஜஸ்தான் மாநிலத்தில் பாகர் என்ற இடத்தில், பிராமல் தலைமைத்துவ படிப்பிற்கான கல்வி நிறுவனம் என்ற பெயரில் ஒரு கல்வி நிறுவனம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

12, 10-ம் வகுப்பு: பொதுத்தேர்வுகளில் புகைப்படத்துடன் கூடிய விடைத்தாள்கள்!


           தமிழகம் முழுவதும் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் ஆள்மாறாட்டத்தைத் தடுக்கும் வகையில் புகைப்படம், பார்கோடுடன் கூடிய விடைத்தாள் முறை 2014 மார்ச் முதல் அறிமுகமாகிறது.

TET 2013 - ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு எதிரான மனுக்கள் ஏற்கப்பட மாட்டாது

         ஆசிரியர் தேர்வு வாரியம் 2013 இல் நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு எதிரான மனுக்கள் இனி ஏற்கப்பட மாட்டாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. டிஇடி தேர்வின் கீஆன்சருக்கு எதிராக சி.ராஜேஸ்வரி உள்ளிட்ட 10 பேர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து, அந்த மனுக்களை தள்ளுபடி செய்தார்.

முதுகலை ஆசிரியர் தேர்வு மறுமதிப்பீடு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.


          முதுகலை ஆசிரியர்களுக்கான தேர்வு ஜீலை 21 -ல் நடைபெற்றது.அந்த தேர்வினை மிதிப்பீடு செய்து ஆசிரியர் தேர்வு வாரியம் தமிழ் தவிர்த்து பிற பாடங்களுக்கான முடிவுகள் வெளியிட்ட நிலையில், வணிகவியல் பாடத்தில் வினாத்தாள் குளறுபடி காரணமாக இரண்டு கேள்விக்கான சரியான விடை தரவில்லை என்று ஷெர்லி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
 

TNPSC Official - குரூப் - 2' தேர்வு விடை வெளியீடு (Tentative Answer Keys)


 Sl.No.
Subject Name
 (Date of Examination:01.12.2013 FN)

COMBINED CIVIL SERVICES EXAMINATION-II (GROUP-II SERVICES)
1
         2
         3
Note: Right Answer has been tick marked in the respective choices for each question. Representations if any shall be sent so as to reach the Commission's Office within 7 days. Representations received after 10th December 2013 will receive no attention.

ஈட்டிய விடுப்பு (EL) பற்றிய விளக்கங்கள்


* தகுதிகாண் பருவம் முடிக்கும் முன்பு (பணியில் சேர்ந்து 2 வருடங்களுக்குள்) மகப்பேறு விடுப்பு எடுத்தால் அந்த வருடத்திற்கான EL -ஐ ஒப்படைக்க முடியாது. EL நாட்கள் மகப்பேறு விடுப்புடன் சேர்த்துக்கொள்ளப்படும்.

விடைத்தாள்களின் பக்கங்களின் எண்ணிகையை அதிகரித்தல் சார்பான ஆணை வெளியீடு

    பள்ளிக்கல்வி - அ.தே.இ - HSC / SSLC பொதுத் தேர்வுகள் - மேல்நிலைத் தேர்வுகளில் அனைத்து முதன்மை விடைத்தாட்களையும் எடுகுறிச்சீட்டு இல்லாமல் அச்சடித்தல், விடைத்தாள்களின் பக்கங்களின் எண்ணிகையை அதிகரித்தல் சார்பான ஆணை வெளியீடு

வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் செயல்படும் - சி.பி.எஸ்.இ. முடிவு


           உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பிரிவுகளுக்கு, பள்ளி வேலை நாட்களை 2015ம் ஆண்டு முதல் 6 நாட்களாக அதிகரிப்பது என்ற முடிவை சி.பி.எஸ்.இ. மேற்கொண்டுள்ளது.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான சி.பி.எஸ்.இ. திறனறி தேர்வு


               பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தனது Optional proficiency தேர்வை, அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் 14 முதல் 18ம் தேதி வரை CBSE நடத்துகிறது. 2014ம் ஆண்டு மார்ச்சில், பத்தாம் வகுப்பு இறுதியாண்டு தேர்வை எழுதும் மாணவர்களுக்கானது இத்தேர்வு.

எழுத்துத்திறன் வளர்ப்பு - முயற்சியும், நோக்கமும்


          பேச்சுத்திறன் இருக்கும் ஒருவர் எந்தளவு புகழ் பெறுவாரோ, அதேயளவு, எழுத்துத்திறன் வாய்க்கப் பெற்றவரும் புகழ் பெறுவார். எனவே, சிறப்பாக எழுதப் பழகுங்கள்.

தாய்மொழியே உயிர்மொழி


               காலங்காலமாக நடுத்தர பெற்றோரிடையே தோற்றுவிக்கப்பட்ட ஆங்கிலவழிக் கல்வி மோகம், படிப்படியாகக் கல்வியினைத் தனியார்மயமாக்கத் துடிக்கும் அரசின் மறைமுக செயல்பாடுகளின் கூறாக மெட்ரிக் பள்ளிகளுக்குப் பெருவாரியான அனுமதி உள்ளிட்ட காரணங்களால் மொத்த தமிழ்வழிக் கல்வி மாணவ சமுதாயமும் அந்நிய, ஆங்கிலவழிக் கல்விக்கு மாற்றப்பட்டுள்ளனர் எனலாம்.

வயது சான்று காண்பித்தால் மட்டுமே திருமண பத்திரிகை அச்சடித்து தரவேண்டும்

          : "குழந்தை திருமணத்தை தடுக்க, பத்திரிகை அச்சடிக்கும் பிரஸ்களில், வயது சான்று அல்லது வி.ஏ.ஓ., சான்று காண்பித்தால் மட்டுமே அச்சடித்து தரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.' என மாவட்ட பாலகிருஷ்ணன் எஸ்.பி., தெரிவித்தார்.

விடைத்தாள்கள் வைக்க வகுப்பறை ஆக்கிரமிப்பால் தனியார் பள்ளிகள் தவிப்பு

          பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடத்தப்படும் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்2 பொதுத்தேர்வுகளில் திருத்தப்பட்ட விடைத்தாள்கள் குறிப்பிட்ட ஆண்டுகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பது வழக்கம். 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive