Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தற்காலிக பணிகளுக்கு நேரடி நியமனம் இல்லை: கல்வி துறைக்கு அரசு உத்தரவு

         பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வித் துறையில், அனைத்து தற்காலிக பணியிடங்களும், வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் மட்டுமே நிரப்ப வேண்டும், என, உத்தரவிடப்பட்டுள்ளது.

10, 12ம் வகுப்பு தேர்வில் தோல்வி : பள்ளிகளில் சிறப்பு வகுப்பு நாளை முதல் தொடக்கம்

      பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு நாளை முதல் பள்ளிகளிலேயே சிறப்பு வகுப்புகள் தொடங்குகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் கடந்த 7ம் தேதி பிளஸ் 2, 22ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.
 

மே 25-ம் தேதி தொடக்க நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டம் நடத்த இயக்குநர் உத்தரவு!!

        தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான சிறப்பு கூட்டத்தை மே 25-ம் தேதி (திங்கள்கிழமை), அந்ததந்த உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் நடத்தி அதில் இயக்குநர் கொடுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை விளக்க வேண்டும் என்று தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் கேட்டுக் கொண்டுள்ளார்.

பிறப்பு சான்று இருந்தால் மட்டுமே மாணவர் சேர்க்கை : அரசு உத்தரவு

         பிறப்பு சான்றிதழ் பெற்றிருந்தால் மட்டுமே தொடக்க பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு தொடக்க கல்வி இயக்குநர் அனுப்பி வைத்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
 

குரூப் 2 மெயின் தேர்வு கேள்விமுறையை மாற்றக்கூடாது: டி.என்.பி.எஸ்.சிக்கு கோரிக்கை

       தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) குரூப்2 மெயின்தேர்வில் கேள்விமுறையை மாற்றம் செய்துள்ளதை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை எழுந்துள்ளது.

தேர்ச்சி குறைந்த அரசுப் பள்ளிகள் கலக்கம்: விசாரணை நடத்த உத்தரவு

        பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைந்த அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்வித்துறை இணை இயக்குனர்கள் ஆய்வு நடத்த உள்ளனர்.

அரசு பள்ளிகளிடம் விளக்கம் கேட்கிறது கல்வி துறை

      பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், தேர்ச்சி சதவீதம் குறைந்த அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்க, கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைப்புப் பணி: மே 30-க்குள் முடிக்க உத்தரவு

        சென்னையில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை வருகிற 30-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைக்க இன்று கடைசி வாய்ப்பு

          சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் விக்ரம் கபூர் வெளியிட்ட அறிவிப்பு: தேசிய அளவில் வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தி உறுதிப்படுத்தும் திட்டம் 2015 மார்ச்  முதல் சென்னை மாவட்டத்தில் நடைமுறையில் உள்ளது.
வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடுதோறும் சென்று வாக்காளர்களின் ஆதார் அட்டை எண், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண் விவரங்களைச் சேகரித்து வருகிறார்கள்.

எஸ்.ஐ., தேர்வு வினாக்கள் எளிமை: பங்கேற்றவர்கள் மகிழ்ச்சி

        தமிழகத்தில் நடந்த எஸ்.ஐ., தேர்வில் உளவியலில் சில கேள்விகளை தவிர மற்றவை எளிதாக இருந்ததால் இளைஞர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். எஸ்.ஐ., நியமனத்திற்கான எழுத்துத் தேர்வு நேற்று நடந்தது. எப்போதும் கடினமாக இருக்கும் 'உளவியல்' வினாக்கள், இம்முறை எளிதாக இருந்தன.
 

கட்டண விதிப்பு எதிரொலி : வங்கி ஏ.டி.எம்., இயந்திரங்களை மக்கள் பயன்படுத்துவது குறைந்தது

        கட்டண உயர்வு, 'ஆன்லைன்' பயன்பாடு போன்ற காரணங்களால், வங்கி, ஏ.டி.எம்.,களின் பயன்பாடு கணிசமாக குறைந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பிட்ட முறை தான் பணம் எடுக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு, ஏ.டி.எம்., இயந்திரங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, ஆன்லைன் பயன்பாடு போன்ற பல காரணங்களால், ஏ.டி.எம்.,களின் பயன்பாடு குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது.

பள்ளிகளில் 'அம்மா உப்பு' படப்பிடிப்பு: தொடக்க கல்வி இயக்குனர் அறிவிப்பு

    'அம்மா உப்பு' குறித்த படப்பிடிப்பை, ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் நடத்திட, தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன், அனுமதி வழங்கி உள்ளார்.

அறிவுத்திறன் குறைபாடுடைய குழந்தைகளுக்கு கொள்ளுப் பொடி சிகிச்சை: சென்னையில் தொடங்கப்படுமா?

       அறிவுத்திறன் குறைபாடுடைய குழந்தைகளுக்கான கொள்ளுப் பொடி திமர்தல் சிகிச்சை சென்னை அரசு சித்த மருத்துவமனையில் தொடங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிக்க தனி இணையதளம்

       'காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிக்க உதவும் இணையதளம், ஜூன் மாதம் முதல் செயல்பட துவங்கும்,'' என, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா தெரிவித்து உள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:

நிர்வாக ஒதுக்கீட்டு மாணவர்களுக்கு கல்வி கடன் இல்லை: வங்கி நிர்வாகங்கள் அதிர்ச்சி முடிவு

        கல்லூரிகளில், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு (மேனேஜ்மென்ட் கோட்டா), கல்விக் கடன் வழங்குவதற்கு, இந்திய வங்கிகள் சங்கம், புதிய நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளன. இதனால், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் சேரும் மாணவர்களுக்கு, கல்விக் கடன் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

10ம் வகுப்பு தேர்வில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறாத பள்ளிகள் - பள்ளி அங்கீகாரம் அதிரடி ரத்து?

      பெங்களூரு: சமீபத்தில் வெளிவந்த, 10ம் வகுப்பு முடிவில், ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறாத பள்ளிகள் மீது சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்கும் நோக்கில், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, கல்வித் துறை தீர்மானித்து உள்ளது.

தனியார் பள்ளிகளுக்கு 97 கோடி ரூபாய் வழங்க எதிாப்பு: இலவச மாணவர் சேர்க்கையில் கூடுதல் கட்டணம் வசூல்

     இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி சேர்க்கப்பட்ட மாணவர்களிடமும், தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலித்துள்ளதால், பள்ளிகளுக்கு, அரசின், 97 கோடி ரூபாயை தரக் கூடாது என, கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

தேர்வு மையங்களில் 'வெப் கேமரா': பாரதியார் பல்கலை திட்டம்

      ''கோவை பாரதியார் பல்கலை, தொலைமுறை கல்வி தேர்வு மையங்களை கண்காணிக்க, 'வெப் கேமரா' பொருத்த திட்டமிட்டுள்ளது,'' என, பல்கலை துணை வேந்தர் ஜேம்ஸ் பிச்சை தெரிவித்தார்.

TNPSC Group4 2014 Result Published

            21.12.2014 அன்று நடைபெற்ற TNPSC Group 4 Result Published. (Junior Assistant, Surveyor, Draftsman, Typist,....) ஆகிய பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. - Click Here 
                    4,963 காலிப்பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23ம் தேதி நடந்த குரூப்4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

உங்கள் Android போனின் Pattern,Password,pin ஆகியவற்றை மறந்து விட்டிர்களா ?

உங்கள் Android போனின் Pattern,Password,pin ஆகியவற்றை மறந்து விட்டிர்களா ?
...
Service Center அல்லது வேறு கடைகாரரிடம் எடுத்துச் 
சென்றால் 300லிருந்து 350 வரை கேட்பார்கள்,,
...
நாம் இப்போது நாமலே எப்படி Unlock செய்வது என்று பார்க்கலாம்,,
...
உங்கள் pattern,password,pinஐ எடுக்க இரண்டு வழிகள் உள்ளன,,

அசத்தல் : அரசு துவக்கப் பள்ளி மாணவர்கள்...கணினியை கையாள்வதில் சாதனை

          மயிலம் அடுத்த கோபாலபுரம் அரசு பள்ளி மாணவர்கள் கணினியை கையாள்வதில் அசாத்திய திறமை பெற்று விளங்குகின்றனர்.


ஓய்வுக்கு முந்தைய நாள் பணியிடை நீக்கம்: உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு - ஓராண்டுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும்

              பணியிடை நீக்கம் தண்டனை அல்ல. ஓய்வுக்கு ஒரு நாளுக்கு முன் பணியிடை நீக்கம் செய்யக் கூடாது என எந்த சட்டத்திலும் கூறப்படவில்லை என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.தமிழ்நாடு குடிமைப்பொருள் வாணிபக் கழகத்தில் பணி புரிந்தவர் முருகன். இவர்ஏப்.1-ம் தேதி ஓய்வுபெற இருந்தார். இவரை மார்ச் 30-ம் தேதி பணியிடை நீக்கம் செய்து தூத்துக்குடி மண்டல மேலாளர் உத்தரவிட்டார். 

'கட்- ஆப்' 460; 459 'கெட்- அவுட்' : மாணவர்கள், பெற்றோர் அதிர்ச்சி

                கோவை மாவட்டத்தில், பெரும்பாலான பள்ளிகள், பிளஸ் 1 சேர்க்கைக்கு, 460 மதிப்பெண், 'கட்- ஆப்'பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், அதிக மதிப்பெண் பெற்றும், விரும்பிய துறையில் சேர முடியாமல், பல மாணவர்கள் தவிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனால், பெற்றோர், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


ஆயக்காரன்புலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி சாதனை



நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டத்தில் அமைந்துள்ளது ஆயக்காரன்புலம் -3 .இப்பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 1992 முதல் செயல்பட்டு வருகிறது.

குரூப் - 4 'ரிசல்ட்' வெளியீடு

            பத்து லட்சம் பேர் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த, குரூப் - 4 தேர்வு முடிவுகள், நேற்று வெளியிடப்பட்டன. நில அளவர், 702; வரைவாளர், 52; தட்டச்சர், 1,653; இளநிலை உதவியாளர், 2,872; குறுக்கெழுத்து தட்டச்சர், 331; வரித்தண்டலர், 22, உட்பட, பல பதவிகளுக்கான, 4,963 காலியிடங்களை நிரப்ப, குரூப் - 4 தேர்வு, கடந்த ஆண்டு டிச., 21ம் தேதி, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையமான, டி.என்.பி.எஸ்.சி., மூலம் நடத்தப்பட்டது.

யுபிஎஸ்சி தேர்வு மையமாக வேலூர் அறிவிப்பு

             மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள், சென்னை, மதுரை மற்றும் கோவையில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் தமிழகத்தின் 4வது யு.பி.எஸ்.சி., தேர்வு மையமாக வேலூர் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று போலீஸ் எஸ்.ஐ., தேர்வு: 1.66 லட்சம் பேர் எழுதுகின்றனர்

          தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும், போலீஸ் எஸ்.ஐ., தேர்வு இன்றும், நாளையும் நடக்கிறது.

ஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட 24 பதவிக்கு சிவில் சர்வீசஸ் தேர்வு அறிவிப்பு

            மத்திய அரசின் உயர் பதவியான, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட, 24 பதவிகளில், 1,119 காலியிடங்களை நிரப்புவதற்கான, சிவில் சர்வீசஸ் தேர்வு, ஆக., 23ம் தேதி நடக்கிறது; இதற்கு, இன்று முதல் ஆன் - லைனில் விண்ணப்பிக்கலாம்.

Bank employees scale finalised

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive