NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அடேங்கப்பா!!... 200 கோடி சொத்து 283 பேரிடமா..!!!

         சொத்து மதிப்பு 200 கோடிக்கு மேல் உள்ளவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
       இதுதொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில், மத்திய நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்க்வார் கூறியதாவது:  மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த கடந்த நிதியாண்டில், 200 கோடிக்கு மேல் சொத்து மதிப்பு உள்ள வரி செலுத்தும் தனிநபர்கள் எண்ணிக்கை 283ஆக உயர்ந்துள்ளது.

இது, இதற்கு முந்தைய 2015-16 நிதியாண்டில் 195ஆக இருந்தது. 2013-14ல் இந்த எண்ணிக்கை 107ஆகவும், 2014-15ல் 134ஆகவும் இருந்தது. தனி நபர் வரி செலுத்தும் விவரங்கள் அடிப்படையில் இந்த தகவல் திரட்டப்பட்டுள்ளது என்றார்.  ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி ஜூலை 1ம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வருகிறது. எனவே, வணிகர்கள் ஜிஎஸ்டி இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளுமாறு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுதொடர்பாக பதிலளித்த சந்தோஷ் குமார் கங்க்வார், ‘‘கடந்த மார்ச் 1ம் தேதிப்படி 48,48,641 பேர் ஜிஎஸ்டி இணையதளத்தில் பதிவு செய்திருக்கின்றனர். ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரிக்கும்’’ என தெரிவித்தார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive