தமிழக அரசின் தெளிவுரை கடித எண். 15082 / ஓய்வூதியம் / 2012, நாள். 24.4.2012.
பணியிலிருந்து ஓய்வு பெற்று அதற்குரிய ஓய்வூதியம் மற்றும் வாழ்க்கை துணை (SPOUSE) இறப்பிற்கு பிறகு பெரும் ஓய்வூதியம் ஆகிய இரண்டு ஒய்வூதியன்களைப் பெறும் 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயது நிறைவடைந்த ஓய்வூதியதாரர்களுக்கு அவர்களின் வயதிற்கு ஏற்ப கூடுதல் ஓய்வூதியம் / கூடுதல் குடும்ப ஓய்வூதியம் என இரண்டு ஒய்வூதியங்களிலும் உயர்வு வழங்கலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பால் இரண்டு ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Proceedings of the Director of School Education, Chennai-6 R.C.No. 25759 /K/E1 /2012 dt. .04.2012
In the reference 2nd cited Commissioner of Government Data Centre, Guindy requested to enter the following Data in the web site address www.peps.tn.nic.in for Online registration in Employment Exchange for all the students who have appeared for SSLC Public Examination held in April 2012.
மாநில கல்வியியல் நிறுவன பயிற்சி நிறுவன இயக்குனர் செயல்முறைகள் ந.க.எண். 8584/D1/2012,Date:24.04.2012.
அரசு கல்வித் தொலைகாட்சியில் நிகழ்சிகளை நடத்த ஆர்வமும் திறமையும் உள்ள ஆசிரியர்களின் விவரங்களை ஒரு நாள் பயிற்சி வாயிலாக சேகரிக்க மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குனர் ஆணை வெளியிட்டுள்ளார். ஆசிரியர் விவரங்களை உடனடியாக கீழே கொடுக்கப்பட்டுள்ள Editable EXCEL படிவத்தில் நிரப்பி தலைமை ஆசிரியர் மூலமாக மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் ஒப்படைக்கவேண்டும்.
தேர்வுத்துறை இயக்குனரகத்தை பாதுகாப்பு மிகுந்த பகுதியாகவும், முக்கிய பணிகள் நடைபெறும் பிரிவுகளில், 50 கேமராக்களை பொருத்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக, 2.50லட்ச ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டு உள்ளது.
ஆசிரியர்களின் செயல்ப்பாட்டினை முறையாக கண்காணிப்பதற்கு அவர்களுடைய வருகைப் பதிவினை குறுஞ்செய்தி (SMS) மூலம் கண்காணிப்பதற்கு கணினி பயன்ப்பாட்டு மென்பொருள் உருவாக்கப்படும் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார். இதற்கான மென்பொருள் வடிவமைக்கப்பட்டு பள்ளிகள் திறக்கும் நாளான 2012, ஜூன் 1 ஆம் நாள் முதல் செயல்பாட்டுக்கு வரும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர்ல்லாதோரின் வருகையை குறுஞ்செய்தி (SMS) மூலம் தலைமையாசிரியர் மையக்கட்டுப்பட்டு அறைக்கு அனுப்பி பதிவு செய்வார். அங்கிருந்து வருகைப் பதிவுசார் தகவல் அனைத்து பள்ளிக்கல்வித் துறை உயர் அலுவலர்களுக்கு உடனடியாக மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும். இது பள்ளி ஆசிரியர்களின் வருகையை உறுதி செய்து ஒழுங்குப்படுத்த உதவும்.
சென்னை: கடினமான இயற்பியில் தேர்வால், இந்தாண்டு மருத்துவ கட்-ஆப் மதிப்பெண் குறைந்தால், நடப்பாண்டு மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று அஞ்சப்படுகிறது.
இதன்மூலம் கடந்தாண்டு மருத்துவ இடம் கிடைக்காமல், வேறு படிப்புகளில் சேர்ந்து படிக்கும் மாணவர்கள், அதைவிட்டுவிட்டு, மீண்டும் மருத்துவப் படிப்பில் சேரக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.
கல்வியில் பின்தங்கிய ஒன்றியங்களில் ரூ.78 கோடியில் புதிதாக 26 மாதிரிப் பள்ளிகள் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.பேரவையில் இதுதொடர்பாக பள்ளிக் கல்வி அமைச்சர் என்.ஆர்.சிவபதி புதன்கிழமை கூறியதாவது: அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் கல்வியில் பின்தங்கிய 44 ஒன்றியங்களில் 44 மாதிரிப் பள்ளிகள் தொடங்கத் திட்டமிடப்பட்டது.
பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனைகளை வழங்குவதற்காக 10 நடமாடும் மையங்கள் ரூ.3 கோடியில் ஏற்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி கூறினார்.
கல்விக்கென்றே ஒரு புதிய தொலைக்காட்சி சேனலை தமிழக அரசு துவக்கவுள்ளது.
இத்தகவலை, பள்ளிக்கல்வி அமைச்சர் சிவபதி சட்டசபையில் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அமைச்சர் கூறியதாவது: இதன்மூலமாக, பள்ளி முடிந்தபிறகும், பாடங்களை வீட்டிற்கு கொண்டு சென்று மாணவர்களுக்கு கற்பிக்க முடியும்.
செமினார்கள், கலந்துரையாடல்கள் மற்றும் பயிற்சிகள் உள்பட, கல்வித்திறனை அதிகரிக்கும் பலவிதமான அம்சங்களை இந்த சேனல் கொண்டிருக்கும். இவ்வாறு அமைச்சர் சிவபதி தெரிவித்தார்
~ மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்த தமிழக அரசு காலி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும் அனுமதி அளித்துள்ளது. எனவே, மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த 4,207 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், 17,380பட்டதாரி ஆசிரியர்கள், 865 சிறப்பு ஆசிரியர்கள், 25 வேளாண் ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.
சென்னை: தமிழ்நாடு போலீஸ் இரண்டாம் நிலை காவலர்கள், சிறை காவலர்கள், தீயணைப்பு வீரர்கள் பணிக்கு, வரும், 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவித்துள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் பங்கேற்கும் பார்வைத்திறன் குறைந்த மாற்றுத் திறனாளிகளுக்கான ஆடியோ சி.டி.யை மாநில சட்டத்துறைச் செயலாளர் ஜெயச்சந்திரன் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டார். "நேத்ரோதயா' அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்ட இந்த சி.டி.க்கள் 300 பேருக்கு இலவசமாக வழங்கப்பட்டது.
தமிழக அரசுப் பள்ளி மாணவர்களின் சீருடை நிறம் மாற்றப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசுப் பள்ளிகளில், பொதுவாக, மாணவர்களுக்கு, காக்கி நிற கால் சட்டையும், வெள்ளை நிற மேல் சட்டையும், மாணவிகளுக்கு, கீழாடையாக நீல நிறத்திலும், மேலாடையாக வெள்ளை நிறத்திலும் தற்போது வரை இருந்துவருகின்றன.
தமிழகத்தில் பொறியியல் படிப்பில் படிக்கும் மாணவர்களுக்கு கல்விக் கட்டண சலுகைப் பெறுவதற்கான குடும்ப வருமான உச்ச வரம்பு ரூ.50,000ல் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்படுவதாக சட்டப்பேரவையில் இன்று உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் அறிவித்துள்ளார்.
வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண். 2199 / ஆ3 / 2012, நாள். 16.4.2012
அந்தந்த ஒன்றியங்களில் உள்ள மேல்நிலை அல்லது உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் முதற்கட்டமாக மே 1 முதல் 5 வரையும், இரண்டாம் கட்டமாக 7 முதல் 11 ஆகிய நாட்களில் கோடைகால பயிற்சி நடைபெற உள்ளது.
தமிழக விளையாட்டுப் பள்ளி, விடுதியில் சேர மாணவ, மாணவிகளிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இது குறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமுகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையின் கீழ் தமிழகத்தில் 18 இடங்களில் விளையாட்டுப் பள்ளி, விடுதிகள் இயங்கி வருகின்றன. இங்கு ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டில் திறமை மிக்க மாணவ, மாணவிகள் 7, 8, 9 மற்றும் 11ம் வகுப்புகளில் சேர்க்கப்படுகின்றனர்.
மனிதநேயம் ஐஏஎஸ் கட்டணமில்லா கல்வியகம் 2012ம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 1 முதல் நிலைத் தேர்வுக்கும், குரூப் 2 எழுத்துத் தேர்வுக்கும் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இலவச பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளது.